Class 7

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Students can Download Tamil Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஆ) ஒன்று

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 2.
மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல் .
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது

Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..
அ) ஐகாரக் குறுக்கம்
ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்
Answer:
ஆ) ஔகாரக் குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

குறுவினா

Question 1.
ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
Answer:
ஒள, வௌ என ஒளகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

Question 2.
சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:

  • ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
மகரக்குறுக்கம் என்பதன் விளக்கம் :

(i) மகரமெய் (ம்) 1/2 மாத்திரை அளவுடையது.
(ii) இம் மகர மெய்ண கர, னகர அதாவது ண, ன மெய்களின் பின்னும் வகரத்திற்கும்
அதாவது ‘வ’ என்னும் எழுத்திற்கு முன்னும் வரும்போது தன் 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கும். இதற்கு மகரக்குறுக்கம் என்று பெயர்.

எடுத்துக்காட்டு : மருண்ம், போனம், தரும் வளவன், பெரும் வள்ளல் ஆகியவை கால் மாத்திரை அளவில் ஒலிப்பன.

கற்பவை கற்றபின்

Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) ஐகாரக்குறுக்கம் :
வையம், ம்பது, ந்து, சமையல், தலைவன், வளையல், பறவை, கடலை, திண்ணை

(ii) ஔகாரக்குறுக்கம் : ஔவை, வௌவால்

(iii) மகரக் குறுக்கம் :
வரும் வண்டி, போண்ம்
வலம் வந்தான், மருண்ம்

(iv) ஆய்தக்குறுக்கம் :
முள் + தீது – முஃடீது.
கல் + தீது – கஃறீது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகர
மெய்யானது தனக்குரிய ………………… அளவில் இருந்து ………………. மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
அ) 1/2 மாத்திரை, 1/4 மாத்திரை
ஆ) 1 மாத்திரை 1/2 மாத்திரை
இ) 2 மாத்திரை 1 மாத்திரை
ஈ) 2 மாத்திரை 1 மாத்திரை
Answer:
அ) 1/2 மாத்திரை, 1/4 மாத்திரை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 2.
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
அ) 1/2 மாத்திரை
ஆ) 1/4 மாத்திரை
இ) 1 மாத்திரை
ஈ) 11/2 மாத்திரை
Answer:
அ) 1/2 மாத்திரை

Question 3.
‘வௌவால்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாரக்குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 4.
” சமையல்’ – இச்சொல்லில் ‘ஐகாரம்’ எத்தனை மாத்திரை அளவு குறைந்து
ஒலிக்கிறது?
அ) 1/2 மாத்திரை
ஆ) 1 மாத்திரை
இ) 11/2 மாத்திரை
ஈ) 2 மாத்திரை
Answer:
ஆ) 1 மாத்திரை

Question 5.
‘வையம்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஔகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாரக்குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 6.
பல் + தீது என்பது
அ) பஃறீது
ஆ) பல்தீது
இ) பலதீது
ஈ) இவை ஏதுமில்லை
Answer:
அ) பஃறீது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

விடையளி :

Question 1.
குறுக்கம் என்றால் என்ன?
Answer:
சில எழுத்துகள் சில இடங்களில் தமக்கு உரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும்.
இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

Question 2.
குறுக்கம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
குறுக்கம் நான்கு வகைப்படும். அவை :

  • ஐகாரக்குறுக்கம்
  • ஒளகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 3.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?
Answer:

  • ‘ஒள’ என்னும் உயிர்நெடில் தன்னைக் குறிக்கும் போது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
  • சொல்லில் வரும்போது ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும்.
  • இங்ஙனம் குறுகுவதால் இதனை ஒளகாரக் குறுக்கம் என்பர்.
    எடுத்துக்காட்டு : ஒளவை, மௌவல், வௌவால்.
  • ஔகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் மட்டும் வரும்.

Question 4.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?
Answer:

  • அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய 1/2 மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்.
  • முள் + தீது – முஃடீது எனவும்
    அல் + திணை – அஃறிணை எனவும் சேரும்.
  • இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
  • இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
இயற்கை ஆர்வலர் ஒருவரது உரையைக் கேட்டு மகிழ்க.
Answer:
இயற்கை ஆர்வலர் ஒருவரது உரை:
ஓய்வறியா உழவன்

நெல் ஜெயராமன் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், கட்டிமேடு கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டார். அவர் கவனம் இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்பியது. நஞ்சில்லா உணவை வலியுறுத்தி நாடெங்கும் பயணம் செய்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரின் அடிச்சுவட்டைப் பின்பற்றினார்.

நெல் வகைகளின் பாரம்பரியத்தையும் மருத்துவக்குணங்களையும் கேட்டறிந்த நம்மாழ்வார் ஏழுபாரம்பரிய நெல் விதைகளை நெல் ஜெயராமன் கைகளில் ஒப்படைத்தார். பதினைந்து ஆண்டுகள் பாரம்பரிய நெல் வகைகள் குறித்த தேடலைத் தொடர்ந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த பாரம்பரிய நெல் ரகங்களும் பசுமைப் புரட்சி அளித்த ரசாயன உரங்களின் பயன்பாட்டால். அழிந்து போனதையும் பல நெல் ரகங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதையும் அறிந்தார்.

மருத்துவக் குணமிக்க நெல் ரகங்கள் தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததையும் நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார்கள் என்பதனையும் அதற்கான காரணத்தையும் கண்டறிந்தார். அழிந்து போன நெல் ரகங்களை மீட்டெடுக்க உறுதிக் கொண்டார்.

அவர் மேற்கொண்ட பயணத்தில் சந்தித்த சவால்களும், அவமதிப்புக்களும் ஏராளம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தம் அயராத முயற்சியால் அனைத்திலும் வெற்றி முத்திரையைப் பதித்தார்.

மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சிலி சம்பா எனப் பல வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அவர் மீட்டெடுக்கத் தொடங்கினார். நம்மாழ்வார் அளித்த பாரம்பரிய ரக நெல் விதைகளையும், தன்னால் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடத் தொடங்கினார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை 2 கிலோ எடையில் இலவசமாக அளித்து, அதனை இயற்கை முறையில் மறு உற்பத்தி செய்து அடுத்த ஆண்டு திருவிழாவில் 4 கிலோ விதை நெல்லாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்றார். இதுவரை 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்றைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக
Question 1.
காட்டு வளமே நாட்டு வளம்!
Answer:
அறிவுக் கண் திறந்த ஆசான்களுக்கும்! என்னை ஈன்ற பெற்றோருக்கும் என்னை மேடையில் பேச வைத்த அறிவு சார்ந்த சான்றோர்களுக்கும் ஆன்றோர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.

ஐவகை நிலங்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருந்தனர். குறிஞ்சி, முல்லை , மருதம். நெய்தல், பாலை. இவற்றுள் முல்லை நிலத்தின் தன்மைப் பற்றி பேச வந்துள்ளேன். காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணையாகும். ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பல்லுயிர்களின் வாழ்விடம் காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வளர்வதற்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. மனிதனின் முயற்சி இன்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள், புதர்கள், பூச்சியினங்கள், பறவை இனங்கள். விலங்கினங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடு. இதன் இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.

யானை, புலி, சிறுத்தை, சிங்கம், மான், கரடி, காட்டு மாடு போன்ற அரிய விலங்குகள் இக்காட்டில் வாழ்கின்றன. காடுகள் நிழல் தருகின்றன; காய்கள் தருகின்றன; கனிகள் தருகின்றன.

இயற்கைத் தங்கும் இடம் இந்தக் காடுதான். சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

இக்காட்டினை மனிதர்கள் அழித்தால் மழைவளம் குறையும். மழைவளம் குறைந்தால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். காட்டில் உள்ள விலங்குகள் நாட்டில் உலா வரவேண்டிய அவல நிலை ஏற்படும். எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்றும் புது மொழிக்கு டுகளை அழிப்பதைத் தடுப்போம் ! மரங்களை வளர்ப்போம் ! காடுகளை பாதுகாப்போம்! மழை பெறுவோம்! மண்ணுயிர்க்கெல்லாம் புத்துயிர் கொடுப்போம்!

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

Question 2.
காட்டின் பயன்கள்
Answer:
இயற்கைக்கு முதல் வணக்கம் ! என்னை ஈன்ற பெற்றோருக்கு நெஞ்சார்ந்த வணக்கம் ! அவையோர் சபையோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் !

காட்டின் பயன்கள் என்ன என்பதனைப் பற்றி இங்கு பேச வந்துள்ளேன். காடு என்பதன் பொருள் என்ன? என்ற கேள்விக்கணை தொடுத்தால் உடன் பதில் வருவது வளம் நிறைந்த நிலம். மரம், செடி, கொடிகள், நல்ல நீர், தூய்மையான காற்று இவை அனைத்தும் நிரம்பியதுதான் காடு.

காடு பறவைகள் விலங்குகள், தாவரங்கள் போன்ற எண்ணற்ற உயிர் இனங்கள் வாழும் வாழ்விடமாகும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. இயற்கை அன்னைத் தந்த அன்பு பரிசுதான் இந்தக் காடு. இயற்கையாக வளர்ந்த மரம், செடி, கொடிகள், புதர்கள், புல்வெளிகள் இவையாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படாத இக்காடுகளை அழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? மனிதனின் உயிர் மூச்சு இந்தக் காடுதான். நாம் சுவாசிக்கின்ற காற்றும், நாம் பருகுகின்ற நல்ல நீரும் காடு கொடுத்த பரிசுதான்.

காடுகள் விலங்கினங்களுக்கு புகலிடம் அளிக்கின்றன. இயற்கை காய்கனிகள் தருகின்றன. நிழல் தருகின்றன. மழைவளம் பெருக மூலக் காரணமாக அமைகின்றன. காட்டுப்பகுதியில் மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள், மரங்கள் இருக்கின்றன. வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களை நமக்கு அள்ளி வழங்குவதும் இந்தக் காடுகள் தான். மழைவளம் பெருகவும் மண் வளம் பெருகவும், நிலம் வளம் பெருகவும் முக்கியக் காரணமாக இருப்பதும் இந்தக் காடுகள் தான்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

வன விலங்குகளின் உறைவிடமாகவும், பறவைகளின் சரணாலயமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குவது இந்தக் காடுகள் தான். எனவே காடுகளை பாதுகாப்போம் காட்டின் பயன்களை முழுமையாக பயன்படுத்துவோம். பலன் பெறுவோம்.

அறிந்து பயன்படுத்துவோம்

பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகியனவாகும்.

உயர்திணையில்,

  1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் (எ.கா.) மாணவன், செல்வன்.
  2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் (எ.கா.) ஆதினி, மாணவி.
  3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால் (எ.கா.) மாணவர்கள், மக்கள்
    அஃறிணையில்,
  4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால் (எ.கா) கல், பசு.
  5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால் (எ.கா.) மண்புழுக்கள், பசுக்கள்.

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 01
Answer:

  1. மகளிர்  × ஆடவர்
  2. அரசன் × அரசி
  3. பெண் × ஆண்
  4. மாணவன் x மாணவி
  5. சிறுவன் × சிறுமி
  6. தோழி × தோழன்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுகSamacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 02
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 1

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக

(எ.கா.) கண்ணகி சிலம்பு அணிந்தான். – கண்ணகி சிலம்பு அணிந்தாள்.

1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்
கோவலன் சிலம்பு விற்கப் போனான்.

2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.

3. பசு கன்றை ஈன்றன.
பசு கன்றை ஈன்றது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

5. குழலி நடனம் ஆடியது.
குழலி நடனம் ஆடினாள்.

கடிதம் எழுதுக

நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்த உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

சென்னை
01.04.2019

அன்புள்ள தோழனுக்கு,
வணக்கம்,

நலம் நலமறிய ஆவல். உன் குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருக்கின்றார்களா? சமீபத்தில் நான் சென்று வந்த இன்பச் சுற்றுலா குறித்து இக்கடிதத்தில் குறிப்பிடுகின்றேன். நேரம் கிடைத்தால் நீயும் உன் குடும்பத்தினரோடு இன்பச்சுற்றுலா சென்று வா. அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

காஞ்சி கயிலாசநாதர் கோயிலுக்குச் சென்றோம். அங்கு சுற்றுச் சுவர், சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோயிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. தெய்வ உருவங்களும் பிற சிற்பங்களும் கோயிலின் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலை நுட்பத்துடன் அமைந்துள்ளன. இவற்றை எல்லாம் சுற்றிப் பார்த்த எனக்கு இன்பச் சுற்றுலா பயன் உள்ளதாக இருந்தது.

என்றும் அன்புடன்.
முகிலன்

உறைமேல் முகவரி
ச. வளவன்
த/பெ. மதிமாறன்
37, எழில் நகர்
சென்னை .

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 03
Answer:
1. புதையல்
2. கடல்
3. கயல்
4. இயல்
5. தையல்
6. புயல்
7. புல்
8. இழை
9. இலை
10. கலை
11. கதை
12. இல்லை
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 2

சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க

(எ.கா.) வாழை + காய் = வாழைக்காய்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 3
Answer:
(i) வாழை + பழம் = வாழைப்பழம்
(ii) குருவி + கூடு = குருவிக்கூடு
(iii) விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
(iv) தயிர் + சோறு = தயிர்ச்சோறு
(v) அவரை + காய் = அவரைக்காய்
(vi) விளையாட்டு + திடல் = விளையாட்டுத்திடல்
(vii) பாட்டு + போட்டி= பாட்டுப்போட்டி
(viii) கொய்யா + பழம் = கொய்யாப்பழம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

விடுகதைகளுக்கு விடை எழுதுக

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல.
கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?…..
Answer:
அணில்

2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?….
Answer:
குதிரை

3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல.
மீன் பிடிப்பேன். தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?…..
Answer:
கொக்கு

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
2. இயற்கைச் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் - 4

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

Students can Download Tamil Chapter 2.4 இந்திய வனமகன் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

மதிப்பீடு

Question 1.
ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
Answer:
இயற்கையாக உருவாவது காடு. ஆனால் தனிமனித முயற்சியால் உருவான காட்டைப் பற்றி இங்கு காண்போம்.
பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் காடு சற்று வேறுபட்டது. மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு. ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார்.

ஓர் அடர்ந்த காடு. காட்டின் நடுவில் மூங்கிலினால் அமைந்த வீடு, வீட்டினுள் சிலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். யானைகள் பிளிறும் ஓசை கேட்கிறது. வீட்டின் குடும்பத் தலைவர் தம் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். யானைகள் மூங்கிலால் கட்டப்பட்ட அவருடைய வீட்டை அடித்து நொறுக்குகின்றன. இச்செயலைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் குடும்பத் தலைவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர் விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங் முப்பது ஆண்டுகள் இந்த மிகப் பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர். அந்தக் காட்டிலேயே தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பவர். யானைகளின் வருகையை தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதுகிறார். ஆண்டு தோறும் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

1979 ஆம் ஆண்டு அது போன்று ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள், மரங்கள் இல்லாத இத்தீவில் கரை ஒதுங்கின. அவற்றுள் சில இறந்து கிடந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அந்தக் காட்சி அவரை மிகவும் பாதித்ததால், ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் அதைப்பற்றி பேசினார். அவர்கள், ‘தீவில் மரங்கள் இல்லாததால் தான் பாம்புகள் மடிந்தன என்று கூறினார்கள். மரங்கள் இல்லாவிட்டால் மனிதனும் இப்படித்தான் ஒருநாள் இறந்து போவன் என்று நினைத்தார். உடனே இந்தத் தீவு முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். இவர் முடிவைக் கண்டு ஊர் மக்கள் கேலி செய்தனர்.

தன் கைகளில் கிடைத்த விதைகளை எடுத்துக் கொண்டு இந்தத் தீவிற்கு வந்தார். அங்கு அவற்றை விதைத்து நாள் தோறும் தண்ணீர் ஊற்றி வந்தார். இருப்பினும் ஒரு விதைக் கூட முளைக்கவில்லை. வனத்துறையினரை அணுகி ஆலோசனை கேட்டதன் பெயரில் மூங்கில் மட்டும் நட்டு வளர்த்து வந்தார்.

அரசு சமூகக் காடுகள் வளர்ப்பு திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தீவு முழுவதும் பல்வேறு மரங்களை நடத்தொடங்கினார். அந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிந்து விட்டது. அனைத்து மரக்கன்றுகளையும் பாதுகாத்து வந்தார். மூங்கில் தவிர வேறு எந்த மரமும் வளரவில்லை அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவரிடம் மரம் வளர்க்கும் திட்டம் பற்றிக் கூறினார். மண்ணின் தன்மையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு மண்புழுக்கள் மட்டும் இன்றிச் சிவப்புக் கட்டெறும்புகளும் உதவும் என்று பேராசிரியர் கூறினார்.

மண்ணின் தன்மையை மாற்ற நாள்தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளை கொண்டு வந்து விட்டார். மண்ணின் தன்மை மாறத் தொடங்கியது. பசும் புற்கள் முளைக்கத் தொடங்கின. நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.

கால்நடைகள் வளர்த்தார். அவற்றின் சாணத்தை வீணாக்காமல் இயற்கை உரம் தயாரித்தார். பழத்தின் கொட்டைகளை விதையாகச் சேகரித்தார். அந்த விதைகள்தான் இன்று மரங்களாக காட்சியளிக்கின்றன. என்றார்.

ஆற்றோரம் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை. தாலைவில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுதான் தனக்குச் சிக்கலாக இருந்ததாகக் கூறினார். அதற்கும் ஒரு வழிக் கண்டுபிடித்து சொட்டு நீர்ப்பாசனம் முறையைப் பின்பற்றினார். இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்தார்.

நட்ட செடிகள் முழுவதும் மரங்களாக வளர்ந்தன. அவற்றில் பறவைகள் வந்து தங்கின. பறவைகளின் எச்சத்தால் பரவிய விதைகள் இந்தக்காடு வளர மேலும் துணைபுரிந்தன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

முயல், மான், காட்டு மாடுகள் வரத்துவங்கின. யானைகளும் வரத்துவங்கின பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள் போன்ற காட்டு விலங்குக்கள் வரத் தொடங்கின. ‘காட்டின் வளம்’ என்று குறிக்கப்படும் புலிகளும் வந்து தங்கத் தொடங்கின.

புலிகள் வந்த பிறகுதான் இக்காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது. தன் செயலைக்கண்டு வனக்காவலர்கள் வியந்தனர். இந்தக் காட்டைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் செய்தியாக வெளிவந்தது என்று தன் அனுபவங்களை சொல்லி முடித்தார் ஜாதவ்பயேங்.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் பள்ளியில் அல்லது நீங்கள் வாழும் பகுதியில் மரக்கன்று ஒன்றை நடுங்கள். அதனை நாள்தோறும் பாதுகாத்து வாருங்கள். அதன் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள்.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

Question 1.
‘இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் ……….
Answer:
ஜாதவ்பயேங்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

Question 2.
2012ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு …………. என்னும்
பட்டத்தை வழங்கியுள்ளது.
Answer:
இந்திய வனமகன்

Question 3.
2015 ஆம் ஆண்டு இந்திய அரசு ……… விருதை வழங்கியுள்ளது.
Answer:
பத்மஸ்ரீ

Question 4.
கௌகாத்தி பல்கலைக்கழகம் …………….. பட்டம் வழங்கியுள்ள து.
Answer:
மதிப்புறு முனைவர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

விடையளி :

Question 1.
ஜாதவ்பயேங் பெற்ற விருதுகள் யாவை?
Answer:

  • 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ‘இந்திய
    வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
  • 2015ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
  • கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்

Question 2.
ஜாதவ்பயேங் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answer:
(i) அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாதவ்பயேங். அவர் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள்
உழைத்து ஒரு பெரிய காட்டை உருவாக்கியவர்.

(ii) அக்காட்டிலேயே தமது வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பவர்; யானைகளின்
வருகையைத் தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதியவர்; ‘இந்தியாவின் வனமகன்’ என்று அழைக்கப்படுபவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Students can Download Tamil Chapter 2.3 விலங்குகள் உலகம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்கள்
Answer:
ஆ) தந்தம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 2.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ………..
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியக்கரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தன்குளம்
Answer:
இ) முண்டந்துறை

Question 3.
‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) காடு + ஆறு
ஆ) காட்டு + ஆறு
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
Answer:
அ) காடு + ஆறு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 4.
‘அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
Answer:
ஈ) அனைத்து + உண்ணி

Question 5.
‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம் ஆகி
ஈ) நேர் ஆகி
Answer:
அ) நேரமாகி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 6.
‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வேட்டை ஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடிய
ஈ) வேடாடிய
Answer:
ஆ) வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு
Answer:
புலி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 2.
யானைக் கூட்டத்திற்கு ஒரு ……….. யானைதான் தலைமை தாங்கும்.
Answer:
பெண்

Question 3.
கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………
Answer:
அடர்ந்த முடிகள்

குறுவினா

Question 1.
காடு – வரையறு.
Answer:
வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என் அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற
பல்லுயிர்களின் வாழ்விடமாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 2.
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
Answer:

  • பொதுவாக யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை.
  • யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.

Question 3.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
கரடி பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் போன்ற வற்றை உணவாக உள்கொள்வதால் அனைத்துண்ணி என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 4.
மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் என்பவை மானின் வகைகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

சிறுவினா

Question 1.
புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி
    மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
  • கர்ப்பம் அடைந்த புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் (அல்லது) ஈன்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கும்.
  • அப்புலிக்குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
  • புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும்
    வேட்டையாடுவதில்லை. எனவே இதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.

சிந்தனை வினா

Question 1.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.
Answer:
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் :

(i) மரங்களை அழிப்பதால் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.

(ii) காடுகளை அழிப்பதன் விளைவாக மழை அளவு குறைகிறது. தட்ப வெப்பநிலை
மாற்றமடைகிறது. மண் அரிமானம் ஏற்படுகிறது.

(iii) புவி வெப்பமடைதல் நடைபெறுகிறது. இதன் விளைவாக தீயன உண்டாகின்றன.
மழைக் காலங்கள் மாறுபடுகின்றன. இயற்கைத் தாவரங்கள், மரங்கள் சட்டத்திற்குப் புறம்பாக அழிக்கப்படுகின்றன.

(iv) காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் காட்டு விலங்கினங்கள் நாட்டுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. மேலும் மனித உயிர்களை அச்சுறுத்திக் கொல்லுகின்றன. யானை, காட்டெருமை, புலி போன்ற விலங்குகள் கூட்டமாக உணவிற்காகவும் நீருக்காகவும் விளை நிலங்களுக்குள் வந்து அவற்றை அழிக்கின்றன.

(v) காடுகளை அழிப்பதாலும் மற்ற வெவ்வேறு காரணங்களாலும் பல்வேறு தாவர
இனங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவுக்குத் தள்ளப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

கற்பவை கற்றபின்

Question 1.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.
Answer:
(எ.கா) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

  • கழுதைக் கெட்டா குட்டிச்சுவர்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  • கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

Question 2.
காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பினை உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம் - 1
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பண்புள்ள விலங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
அ) புலி
ஆ) சிங்கம்
இ) கரடி
ஈ) மான்
Answer:
அ) புலி

Question 2.
‘காட்டுக்கு அரசன்’ என்று போற்றப்படும் விலங்கு எது?
அ) சிங்கம்
ஆ) சிறுத்தை
இ) புலி
ஈ) கரடி
Answer:
அ) சிங்கம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 3.
யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு .
அ) சரி
ஆ) இல்லை
இ) தவறு
ஈ) இவைகளில் ஏதுமில்லை
Answer:
அ) சரி

நீரப்புக :

Question 1.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் …….. சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள்
உள்ளன.
Answer:
கிர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 2.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் ………….
Answer:
மேட்டுப்பாளையம்

Question 3.
நன்கு வளர்ந்த கரடி ………. கிலோ எடை வரை இருக்கும்.
Answer:
160

விடையளி :

Question 1.
புலிகள் காப்பகம் எங்கு உள்ளது?
Answer:

  • புலிகள் காப்பகம் முண்டந்துறையில் உள்ளது.
  • முண்டந்துறை தமிழ்நாட்டில் உள்ளது.

Question 2.
பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடு-இக்கூற்றை மெய்ப்பிக்க.
Answer:

  • மனித முயற்சி இன்றி அதாவது மனித முயற்சி இல்லாமல் வளர்ந்த மரங்கள்,
    செடி, கொடிகள், புல், புதர்கள், பூச்சி இனங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இந்தக் காடாகும்.
  • இந்தக் காட்டின் இடை இடையே காட்டாறுகளும் நீரோடைகளும் இருக்கும்.

Question 3.
முண்டந்துறை புலிகள் காப்பகம் – குறிப்பு வரைக.
Answer:

  • தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகும்.
  • இது 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
  • இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.

Question 4.
உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?
Answer:

  • உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்கா யானை.
  • ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத்
    தந்தம் இல்லை. ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் தந்தம் உண்டு.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 5.
யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்குமா? ஆம் எனில் விளக்கம் தருக.
Answer:

  • ஆம். யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும். யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவு ஆகியவற்றிற்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
  • ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக
    உட்கொள்ளும். அதற்குக் குடிக்க அறுபத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
  • யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட பாசமிகு விலங்கு ஆகும்.

Question 6.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
Answer:
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 7.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
Answer:

  • கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உள்ளது.
  • இங்கு இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் ஆகிய படிப்புகள் உள்ளன.

Question 8.
கரடி தன் உடலை தேனீக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது?
Answer:
கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனைக் காப்பாற்றுகின்றன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

Question 9.
சிங்கம் பற்றி குறிப்பு வரைக.
Answer:
(i) உலகில் ஆசியச் சிங்கம். ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள்
உள்ளன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ‘கிர்’ சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

(ii) நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே புலியே காட்டுக்கு அரசன் என்கிறார்கள் இயற்கை விஞ்ஞானிகள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Students can Download Tamil Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ….
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
Answer:
ஆ) கோலிக்குண்டு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 2.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………………
அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
Answer:
அ) ஒட்டிய பழங்கள்

Question 3.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா
Answer:
இ) பெயர் + அறியா

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 4.
‘மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……..
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
Answer:
ஈ) மனம் + இல்லை

Question 5.
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Answer:
ஆ) நேற்றிரவு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

குறுவினா

Question 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
Answer:
நாவல் மரம் ஆறு தலைமுறைகளாய் அங்கு நின்றிருந்தது.

Question 2.
சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
Answer:
காக்கை, கிளி, குருவி, மைனா, கிளிகள் மற்றும் பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று ஆகியவை சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவின.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

சிறுவினா

Question 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
ஊரின் வடகோடியில் இருந்த நாவற்பழமரம்கவிஞரின் ஐந்து வயதில் எப்படியிருந்ததோ அப்படியேதான் அவருடைய ஐம்பது வயதைத் தாண்டியும் இருந்தது.

கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட மரம் என்று கவிஞர், தன் அப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்.

அந்த மரத்தில் பச்சைக் காய்கள் நிறம் மாறி செங்காய்த் தோற்றம் ஏற்பட்டவுடன் சிறுவர்களின் மனதில் பரவசம் பொங்கும். பளபளப்பான பச்சை இல்லைகளின் நடுவில், கிளைகளில் கருநீலக் குண்டுகளாய் நாவற்பழங்கள் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும்.

பறவைகள், அணில்கள் மற்றும் காற்று ஆகியவற்றால் உதிர்ந்திடும் பழங்களைப் பொறுக்குவதற்காக சிறுவர் கூட்டம் அலைமோதும் எனக் கவிஞர் நாவல் மரம் பற்றிய தன்னுடைய நினைவுகளைக் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

சிந்தனை வினா

Question 1.
பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை ?
Answer:
கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட நாவற்பழ மரத்தின் நிழலில் கவிஞரின் மகனும் விளையாடியுள்ளான்.

ஆறு தலைமுறைகளாக அங்கு நின்றிருந்த அந்த மரத்தில் கருநீலக் குண்டுகளாக நாவற்பழம் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும். காக்கை, குருவி, மைனா, கிளிகள் மற்றும் பெயரறியாப் பறவைகள், அணில்கள் ஆகியவற்றிற்கு வாழ்விடமாக இருந்தது அந்த மரம். மேலும் அவைகளுக்கு மட்டுமல்லாமல், இரவில் வந்த வௌவால் கூட்டங்களுக்கும் உணவளித்தது அந்த மரம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

தோப்பு முழுவதும் பரவிக்கிடந்த அந்த மரத்தின் குளிர்ந்த நிழலிலே, அப்பா புளியமிளாறை எடுத்துக் கொண்டு அடிக்க வரும் வரை சுவராசியமாக கிளியாந்தட்டு விளையாடிய அனுபவங்களை கவிஞரால் மறக்க முடியவில்லை.

பெருவாழ்வு வாழ்ந்த அந்த மரம் ஒருநாள் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்து விட்டது. அறிந்த ஊர் மக்கள் அனைவரும் அதைப் பார்க்கச் சென்றனர். குன்றுகளின் நடுவே பெரிய மலை இருப்பது போல, கவிஞரின் மன ஓட்டங்களின் நடுவே அந்த மரம் பற்றிய நினைவுகள் உயர்ந்து நிற்கின்றது. அந்த மரம் அவரைப் பொருத்த அளவில் விழவில்லை . எனவே அந்த வீழ்ந்த மரத்தைச் சென்று பார்க்க விரும்பவில்லை.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து
தொடர்கள் எழுதுக.
Answer:

  • பனை மரம் பூலோக கல்பதரு என்று அழைக்கப்படும் ஒரே மரம்.
  • பனை மரத்தின் வேர்கள் பூமியை நோக்கி நீளமான செல்வதால் வறட்சி தாங்கும் சக்தி உண்டு.
  • சுவாசிக்க ஆக்ஸினை தருபவை பனை மரம்.
  • பனை உண்டானால் நோய் தாக்குதல் மிகக் குறைவு.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 2.
உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
மரங்களின் பெயர்கள் :
(i) பனைமரம்
(ii) தென்னை மரம்
(iii) வேப்பமரம்
(iv) ஆலமரம்
(v) அரசமரம்
(vi) மாமரம்
(vii) பலா மரம்
(viii) பாக்கு மரம்
(ix) பூவரச மரம்
(x) தேக்குமரம்
(xi) புளிய மரம்
(ix) கொய்யா மரம்
(xi) புங்கை மரம்
(xii) கருவேல மரம்
(xiii) வில்வ மரம்
(xiv) நெல்லி மரம்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

நிரப்புக :

Question 1.
‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……
Answer:
ராஜமார்த்தாண்டன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 2.
ராஜமார்த்தாண்டன், …………. என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு
பெற்றார்.
Answer: ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

பாடலின் பொருள்

கவிஞரின் ஊரில் வடகோடியில் இருந்த நாவற்பழ மரம் கவிஞரின் ஐந்து வயதிலும் சரி, ஐம்பது வயதிலும் சரி மாறாமல் அப்படியே நிற்கிறது.
கவிஞரின் தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்டு வளர்ந்த மரம் என தன் அப்பா சொல்ல கவிஞர் கேட்டிருக்கிறார்.

அந்த மரத்தில் பச்சைக்காய்கள் நிறம் மாறி செங்காயாக மாற்றம் பெற்றவுடன் சிறுவர்களின் மனதில் உற்சாகம் தோன்றிவிடும்.
அந்த மரத்தில் பளபளப்பாக இருக்கும் பச்சை இலைகளின் நடுவில் கருநீல நிறத்தில், கோலி குண்டுகள் போலத் தோற்றமளிக்கும் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும். அவற்றைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறும்.

காக்கை, குருவி, மைனா, கிளிகள் இன்னும் பெயரறியாப் – பறவைகள், அணில்கள் மற்றும் காற்று ஆகியவற்றினால் உதிர்ந்து விழும் பழங்களை எடுப்பதற்காக சிறுவர்கள் கூட்டம் அலைமோதும். வயது வந்த அக்காக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்பதனால் அவர்களுக்காக பழம் எடுக்க கூடையுடன் வரும் தங்கைமார்கள் ஓடி ஓடி பழங்களைப் பொறுக்குவார்கள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

இரவில் மெல்லிய நிலவொளியில் பழந்தின்னி வௌவால்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து அந்த மரத்தை நோக்கி வரும். தோப்பு முழுவதுமாக நிறைந்து நிற்கும் அந்த மரத்தின் நிழலிலே கவிஞர் தன் அப்பா புளியமிளாறை எடுத்து வந்து மிரட்டும் வரை சுவாரசியமாக கிளியாந்தட்டு விளையாடியுள்ளார். அவருடைய மகனும் தன் நண்பர்களுடன் அந்த மரத்தினடியில் விளையாடியுள்ளான்.

கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகள், கவிஞருடைய அப்பா, கவிஞர், கவிஞருடைய மகன் என்று மொத்தம் ஆறு தலைமுறைகளைக் கண்டு பெருவாழ்வு வாழ்ந்த மரமானது ஒருநாள் இரவு பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டது.

ஊர் மக்கள் மொத்தமும் துக்கம் விசாரிக்கச் செல்வது போன்று, வீழ்ந்துவிட்ட அந்த மரத்தைக் காணச் சென்றார்கள். கவிஞர் மட்டும் செல்லவில்லை.

அவர் மனதில் அந்த மரம் வீழவில்லை அப்படியே நிற்கிறது. அந்தக் காட்சியை மாற்ற கவிஞருக்கு மனமில்லை . குன்றுகளின் நடுவே பெரிய மலை நிற்பது போல, அவரது நினைவுகளின் நடுவே அந்த மரம் அப்படியே நிற்கிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Students can Download Tamil Chapter 2.1 காடு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழை, கன்றை …………
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
Answer:
அ) ஈன்றது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 2.
‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
Answer:
ஆ) காடு + எல்லாம்

Question 3.
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………
அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
Answer:
ஆ) கிழங்கெடுக்கும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

நயம் அறிக

Question 1.
பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை: ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை எனப்படும்.
அடிமோனை : கார்த்திகை – காடெல்லாம்
சீர்மோனை : குரங்கு – குடியிருக்கும்
மரங்கள் – மறைக்கும்

எதுகை : அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது எதுகைத் தொடை எனப்படும்.

அடிஎதுகை :

பார்த்திட – பார்வை
குரங்கு – மரங்கள்
கார்த்திகை – பார்த்திட
பச்சை – நச்சர
சிங்கம் – எங்கும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

சீர்எதுகை :

காடு – கொடுக்கும்

இயைபு : அடிகள் தோறும் இறுதி எழுத்தோ , அசையோ, சீரோ, அடியோ ஒன்றி வருவது இயைபுத் தொடை எனப்படும்.

பொருள் கொடுக்கும் – ஈன்றெடுக்கும்
குடியிருக்கும் – கனிபறிக்கும்
மயில் நடிக்கும் – கிழங்கெடுக்கும்

குறுவினா

Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
Answer:

  • கார்த்திகை மாதத்தில் ஏற்றும் கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.
  • அவற்றைப் பார்ப்பதற்கு கண்கள் குளிர்ச்சி பெறும் எனக் கவிஞர் காட்டுப் பூக்களுக்கு கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 2.
காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன யாவை?
Answer:
காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன :

  • காடு பலவகையான பொருள்களைத் தருகின்றது.
  • எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழலைத் தரும்.
  • காய்கனிகளைத் தந்து மற்ற உயிரினங்களை வாழச் செய்கிறது.
  • காட்டில் வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்டு, தன் பசியைப் போக்கிக் கொள்ளும்.
  • மரங்கள் வெயிலை மறைத்து அங்கே நிழல் தரும்.
  • அடர்ந்த காடு வழிச் செல்வோர்க்குத் தடையாக இருக்கும்.

சிறுவினா

Question 1.
‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.
  • பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
  • இந்தச் செயலைக் கண்டு நச்சுத் தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலக்கம் அடையும்.
  • நரிகள் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையான தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  • இயற்கையான காட்டில் வாழும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரியும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

சிந்தனை வினா

Question 1.
காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?
Answer:

  • காடு இயற்கை தந்த கொடை, காடு இயற்கை தந்த விடுதி கார்த்திகை மாதத்து விளக்குகளைப் போல காட்டுப் பூச்சிகள் பூத்திருக்கும். அதனைப் பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.
  • குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.
  • பச்சை நிறம் உடைய காட்டு மயில்கள் நடனமாடும்.
  • பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். இந்தச் செயலைக் கண்டு நச்சுத்தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலங்கி நிற்கும். நரிக்கூட்டம் ஊளையிடும்.
  • யானைக்கூட்டம் சுவைதரும் தழையை உண்டுவிட்டு புதிய நடை போடும். காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.
  • இயற்கைத் தந்த இடம் இந்தக் காடு. இது ஒரு தங்கும் விடுதி. இங்கு பறவைகள், விலங்கினங்கள் தங்கிச் செல்லும் செயலைத்தான் கவிஞர் காட்டை இயற்கை விடுதி என்று கூறி மகிழ்கிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

கற்பவை கற்றபின்

Question 1.
காடு என்னும் தலைப்பில் அமைந்த கிளிக்கண்ணி’ பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.
Answer:
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பித்தலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ ! – கிளியே
நாளில் மறப்பாரடீ. ……….- பாரதியார்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. ஈன்று – பெற்று
2. களித்திட – மகிழ்ந்திட
3. கொம்பு – கிளை
4. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
5. அதிமதுரம் – மிகுந்த சுவை
6. விடுதி – தங்கும் இடம்

விடையளி :

Question 1.
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை , பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு,
சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை , கணையம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 2.
‘கிளிக்கண்ணி ‘ – குறிப்பு வரைக.
Answer:
(i) கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் ‘ கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை கிளிக்கண்ணி ‘ ஆகும்.
(ii) கவிஞர் சுரதா எழுதிய பாடல் காடு. இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.

Question 3.
உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
Answer:
உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் கவிஞர் சுரதா.

Question 4.
சுரதாவின் இயற்பெயர் என்ன?
Answer:
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 5.
சுரதா இயற்றிய நூல்கள் சிலவற்றைக் கூறுக?
Answer:
அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

Question 6.
நமக்கு பாடமாக வந்துள்ள இப்பாடல் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer:
இப்பாடல் சுரதா கவிதைகள் என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக் கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக்கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.2

Students can Download Maths Chapter 2 Measurements Ex 2.2 Questions and Answers, Notes Pdf, Samacheer Kalvi 7th Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.2

Question 1.
Find the area of rhombus PQRS shown in the following figures.
Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.2 1
Solution:
(i) Given the diagonals d1 = 16 cm ; d2 = 8 cm
Area of the rhombus = \(\frac{1}{2}\)(d1 × d2) sq. units
= \(\frac{1}{2}\) × 16 × 8 cm2 = 64 cm2
Area of the rhombus = 64 cm2

(ii) Given base b = 15 cm ; Height h = 11 cm
Area of the rhombus = (base × height) sq. units
= 15 × 11 cm2 = 165 cm2
Area of the rhombus = 165 cm2

Question 2.
Find the area of a rhombus whose base is 14 cm and height is 9 cm.
Solution:
Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.2 2
Given base b = 14 cm ; Height h = 9 cm
Area of the rhombus = b × h sq. units
= 14 × 9 cm2 = 126 cm2

Question 3.
Find the missing value.
Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.2 3
Solution:
(i) Given diagonal d1 = 19 cm ; d2 = 16 cm
Area of the rhombus = \(\frac{1}{2}\)(d1 × d2) sq. units = \(\frac{1}{2}\) × 19 × 16
= 152 cm2

(ii) Given diagonal d1 = 26 m ; Area of the rhombus = 468 sq. m
= \(\frac{1}{2}\)(d1 × d2) = 468 ; (26 × d2) = 468 × 2
d2 = \(\frac{468 \times 2}{26}\) = d2 = 36 m

(iii) Given diagonal d2 = 12 mm; Area of the rhombus = 180 sq. m
\(\frac{1}{2}\)(d1 × d2) = 180
\(\frac{1}{2}\)(d1 × 12) = 180
d1 × 12 = 180 × 2
d1 = \(\frac{180 \times 2}{12}\)
d1 = 30 mm
Diagonal d1 = 30 mm
Tabulating the results we have
Samacheer Kalvi 7th Maths Solutions Term 1 Chapter 2 Measurements Ex 2.2 4

Question 4.
The area of a rhombus is 100 sq. cm and length of one of its diagonals is 8 cm. Find the length of the other diagonal.
Solution:
Given the length of one diagonal d1 = 8 cm ; Area of the rhombus = 100 sq. cm
\(\frac{1}{2}\)(d1 × d2) = 100
\(\frac{1}{2}\) × 8 × d2 = 100
8 × d2 = 100 × 2
d2 = \(\frac{100 \times 2}{8}\) = 25 cm
Length of the other diagonal d2 = 25 cm

SamacheerKalvi.Guru

Question 5.
A sweet is in the shape of rhombus whose diagonals are given as 4 cm and 5 cm. The surface of the sweet should be covered by an aluminum foil. Find the cost of aluminum foil used for 400 such sweets at the rate of ₹ 7 per 100 sq. cm.
Solution:
Diagonals d1 = 4 cm and d2 = 5 cm
Area of one rhombus shaped sweet = \(\frac{1}{2}\)(d1 × d2) sq. units = \(\frac{1}{2}\) × 4× 5 cm2 = 10 cm2
Aluminum foil used to cover 1 sweet = 10 cm2
∴ Aluminum foil used to cover 400 sweets = 400 × 10 = 4000 cm2
Cost of aluminum foil for 100 cm2 = ₹ 7
∴ Cost of aluminum foil for 4000 cm2 = \(\frac{4000}{100}\) × 7 = ₹ 280
∴ Cost of aluminum foil used = ₹ 280.

Objective Type Questions

Question 6.
The area of the rhombus with side 4 cm and height 3 cm is
(i) 7 sq. cm
(ii) 24 sq. cm
(iii) 12 sq. cm
(iv) 10 sq. cm
Solution:
(iii) 12 sq. cm
Hint:
Area = Base × Height = 4 × 3 = 12 cm2

Question 7.
The area of the rhombus when both diagonals measuring 8 cm is
(i) 64 sq. cm
(ii) 32 sq. cm
(iii) 30 sq. cm
(iv) 16 sq. cm
Solution:
(ii) 32 sq. cm
Hint:
Area = \(\frac{1}{2}\)(d1 × d2) = \(\frac{1}{2}\) × 8 × 8 = 32

Question 8.
The area of the rhombus is 128 sq. cm. and the length of one diagonal is 32 cm. The length of the other diagonal is
(i) 12 cm
(ii) 8 cm
(iii) 4 cm
(iv) 20 cm
Solution:
(ii) 8 cm
Hint:
\(\frac{1}{2}\) × d1 × d2 = 128 ⇒ d2 = \(\frac{128 \times 2}{32}\) = 8cm

SamacheerKalvi.Guru

Question 9.
The height of the rhombus whose area 96 sq. m and side 24 m is
(i) 8 m
(ii) 10 m
(iii) 2 m
(iv) 4 m
Solution:
(iv) 4 m
Hint:
Area = Base × height = 96 ⇒ height = \(\frac{96}{24}\) = 4

Question 10.
The angle between the diagonals of a rhombus is
(i) 120°
(ii) 180°
(iii) 90°
(iv) 100°
Solution:
(iii) 90°
Hint:
Angles of a rhombus bisect at right angles.

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Students can Download English Poem 1 Sea Fever Questions and Answers, Summary, Notes Pdf, Activity, Samacheer Kalvi 7th English Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Sea Fever Poem Line By Line Explanation By John Masefield, Sea Fever Exercise Question Answer.

Read And Understand

B. Choose the best answer

Question 1.
The title of the poem ‘Sea Fever means _________
(a) flu fever
(b) the poet’s deep wish to be at sea
(c) the poet s fear of the sea
Answer:
(b) the poet’s deep wish to be at sea

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Question 2.
The poet asks for _________
(a) a fishing net
(b) a big boat
(c) a tall ship
Answer:
(c) a tall ship

Sea Fever Questions Answers  Question 3.
The poet wants to lead a life at sea like _________
(a) the gulls and whales
(b) the penguins and sharks
(c) the pelicans and dolphins
Answer:
(a) the gulls and whales

C. Read the lines and answer the questions.

Question 1.
I must go down to the sea again, to the lonely sea and the sky
Where does the poet want to go?
Answer:
The poet wants to go to the sea again.

Question 2.
And the wheel’s kick and the winds song and the white sail’s shaking
What according to the poet are the pleasures of sailing?
Answer:
Will Watching from the shore, the wind’s song, the ship’s steering wheel and the shaking of the sail in the breeze are the pleasures of sailing.

Question 3.
And all I ask is a windy day with the white clouds flying
Why does the poet ask for a windy day?
Answer:
The poet asks for a windy day, as it would blow away the thick white clouds from the sky and take the sail forward throughout the day.

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Question 4.
And all I ask is a merry yarn from a laughing fellow rover.
What kind of human company does the poet want?
Answer:
The poet wants the company of a fellow sailor or wanderer like him.

Question 5.
And quiet sleep and a sweet dream when the long trick’s over What does the poet want to do after his voyage is over?
Answer:
The poet wants to sleep soundly with pleasant dreams at the end of his long shift on watch.

D. Poem Appreciation

Question 1.
Fill in the blanks with correct rhyming words from the poem.
Answer:
sky – by, knife – life. rover – over.

Question 2.
Quote the line that has been repeated in the poem.
Answer:
“I must go down to the seas again”.

Question 3.
Write the poetic device which is used in the line below.
And a grey mist on the sea’s face _________
Answer:
Imagery and personification.

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Question 4.
What poetic device is used for the comparison in the below line?
Where the wind’s like a whetted life _________
Answer:
Simile

E. The poem has many visual and sound images. Complete the table with examples from the poem. The first one has been done for you.
Answer:

Visual images Sound images
Wheels kick Wind s song
white sail’s shaking wild call
grey dawn clear call
running tide windy day
white clouds flying
blown spume
sea – gulls crying

Sea Fever Additional Questions

I. Poem Comprehension:

Question 1.
And all I ask is a tall ship and a star to steer her by;
What does the word ‘her’ refer to?
Answer:
‘Her’ refers to the tall ship.

Question 2.
To the gulls way and the whales way where the wind’s like a whetted knife;
What is like a whetted knife?
Answer:
The wind is strong like a whetted knife.

II. Poetic Devices:

Question 1.
I must go down to the seas again, to the lonely sea and the sky,
Pick out the alliterated words.
Answer:
sea –sky are the alliterated words.

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Question 2.
And the wheel’s kick and the wind’s song and the white sail’s shaking,
What poetic device is used here?
Answer:
Personification : The wind, the wheel and the white sail are given the human qualities.

Question 3.
And quiet sleep and a sweet dream when the long trick’s over.
Name the literary device used in this line.
Answer:
Metaphor : “when the long trick’s over’. This is comparing the end of a long voyage to the end of a long life.

III. Sea Fever Short Questions and Answers.

Question 1.
Why does the poet ask for a star?
Answer:
The poet asks for a star to guide the tall ship.

Question 2.
According to the poet, how is the call of the running tide?
Answer:
The call of the running tide is wild and clear.

Question 3.
What does the word ‘vagrant’ mean?
Answer:
‘Vagrant’ means wandering.

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Question 4.
What does he want from a fellow-wanderer?
Answer:
He wants to share a happy tale and laughter with a fellow-wanderer.

Question 5.
What does the word ‘trick’ in sailing terms refer to?
Answer:
It refers to ‘a watch at sea’.

IV. Paragraph Question with Answer.

Question 1.
What message does the poet convey through the poem?
Answer:
John Masefield’s poem ‘Sea Fever’ is a work of art that brings beauty to the English language through its use of rhythm, imagery and many complex figures of speech. The imagery in ‘Sea Fever’ suggests an adventurous ocean that appeals to all five senses. Along with an adventurous ocean, ‘Sea Fever’ also sets a mood of freedom through the imagery of travelling gypsies. ‘Sea Fever’ not only depicts a strong longing for the sea through its theme, but also through the use of complex figures of speech.

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever

Warm Up

Rescue the sinking words!

Samacheer Kalvi 7th English Solutions Term 3 Poem Chapter 1 Sea Fever Poem Meaning In Tamil
Answer:

  1. Voyage
  2. Vaves
  3. Island
  4. Navigate
  5. Sailor
  6. Explore
  7. Harbour
  8. Shore

Sea Fever Summary

In the poem ‘Sea Fever’, the poet, John Masefield expresses his desire for sailing once again in the quiet sea, under the quiet sky. He expresses his desire for the need of a well-built ship to sail and a star in the dark sky to act as a guide. Soon the adventures would begin and as each day dawns, he wakes up to see the early grey mist rise from the sea. He wishes that there would be strong winds that would blow away the thick white clouds in the sky and take sail forward throughout the day. Watching from the shore, fills his heart with the adventure and spirit. The poet finally wishes to be a wandering gypsy.

He loves to share the tales and laughter with a fellow sailor. He wanted to sleep soundly with pleasant dreams at the end of his long shift on watch.