Class 7

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Students can Download Tamil Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

மதிப்பீடு

Question 1.
டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கவிஞர்கள் தங்கள் கவித்திறத்தால் உலகையே ஆள்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து திருநெல்வேலியைப் புகழ்பெறச் செய்துள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கடிகைமுத்துப் புலவர் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பாடல்கள் பாடியுள்ளார். முக்கூடல் பள்ளு’ என்னும் சிற்றிலக்கியம் சீவலப்பேரி’ என்கிற முக்கூடல் பற்றியதாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

மதுரையிலிருந்து நெல்லைக்கு வந்தவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இவர் நெல்லையில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்து உரிமையுடன் சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டுகிறார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சீவைகுண்டத்துப் பெருமாளைப் போற்றிப் பாடியவர் பிள்ளைப் பெருமாள் ஆவர். ஆற்றுக்குத் தென்கரையில் நம்மாழ்வார் பிறந்த ஊரான ஆழ்வார் திருநகரில் உள்ளது. இதன் பழைய பெயர் திருக்குருகூர் . அவர் தமது ஈடுபாட்டைத் தமது திருவாய்மொழியில் பாடியுள்ளார்.

கொற்கை நகர முத்து வணிகத்தைப் பற்றி முத்தொள்ளாயிர ஆசிரியர் அனுபவித்துப் பாடியுள்ளார். சீதக்காதி என்ற பெருவணிகர் காயல்பட்டணத்தைச் சார்ந்தவர். அவர் பல புலவர்களை ஆதரித்தவர். அவர் இறந்த போது நமச்சிவாயப் புலவர்,
“கோமன் அழகமர் மால் சீதக் காதி கொடைக்கரத்துச்
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே” என்று தம் உணர்ச்சியைப் பாடலாக்கினார்.

அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழில் ஏரிநீர் நந்தவனங்களில் இருந்ததால் சேல்மீன்கள் துள்ளிக் குதித்தி பூஞ்செடிகொடிகளை அழித்தன எனப் பாடியுள்ளார்.
அண்ணாமலையார் கழுகுமலை முருகன் மேல் காவடிச் சிந்தைப் பாடியுள்ளார். சங்கரன் கோவிலில் உள்ள கோமதித் தாயைப் பற்றி அழகிய சொக்கநாதர் பக்தியோடு பாடியுள்ளார்.

கரிவலம் வந்த நல்லூர் என்னும் பெயர் கொண்ட ஸ்தலம் கருவை நல்லூர் ஆகும். இத்தலத்தைப் பற்றி திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி ஆகிய நூல்களில் புலவர் ஒருவர் பாடியுள்ளார்.
குற்றால மலையின் இயற்கையைக் கண்ட திருஞான சம்பந்தர் நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என்று பாடியுள்ளார். இத்தலத்தைப் பற்றி மாணிக்கவாசகரும் உற்றாரை யான் வேண்டேன் என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

திரிகூடராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சியில் இம்மலையின் வளத்தைக் குறி சொல்லுகின்ற பெண் கூறுவது போல் பாடியுள்ளார்.
இத்தகு பெருமைமிக்க திருநெல்வேலியைப் பற்றியும் அங்கு வாழ்ந்த புலவர்களின் புலமையையும் நினைவில் கொள்வோம்.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று நான் நூலகம் செல்லலாம் என்று புறப்பட்டேன். நல்ல மழை பெய்தததால் செல்லவில்லை.
மாணவன் 2 : எதற்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும்?
மாணவன் 1 : நான் எப்போதும் விடுமுறை என்றால் நூலகத்திற்குச் செல்வேன்.
எனக்குப் பிடித்த நூல்களைப் படித்து குறிப்பு எழுதிக் கொள்வேன்.
மாணவன் 2 : அப்படியா! நீ எழுதிய குறிப்பிலிருந்து எதைப் பற்றியாவது எனக்குக் கூறுகிறாயா?
மாணவன் 1 தாராளமாகக் கூறுகிறேன். உவமைக் கவிஞர் என்று போற்றப்படும்
சுரதாவின் கவிதை நூலில் ‘இன்பம்’ என்ற தலைப்பில் உள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்
எழுந்திடு புதுமை தன்னை
ஏற்றிடல் வாழ்வுக் கின்பம்.
…………….
…………….
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்.

மாணவன் 2 : பாடலின் மிகவும் எளிமையாக இருக்கிறதே.
மாணவன் 1 : ஆமாம் பாடல் மிகவும் எளிமையானது. பொருள் பொதிந்த பாடல்.
மாணவன் 2 : பாடலின் பொருளைக் கூறு.
மாணவன் 1 : இன்பம் தருவன என்று கவிஞர் சிலவற்றைக் கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பது மகிழ்ச்சி தரும். பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது மனத்திற்கு மகிழ்ச்சி தரும். புதுமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கற்றோர் நிறைந்த அவையில் தான் கற்ற கல்வியை எடுத்துரைப்பதும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுவதும் இன்பம் தரும். தீயோரின் நட்பை விலக்கி வாழ்தல், தாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து வாழும் சிறந்த குணம் பெறுதலும் இன்பம் தரும். இவையெல்லாவற்றையும் நாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நாமும் இன்பமாக வாழலாம்.
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இனிமேல் நீ நூலகம் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்.
மாணவன் 1 : சரி! அழைத்துச் செல்கிறேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Students can Download Tamil Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருநெல்வேலி …………….. மன்னர்களோடு தொடர்பு உடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
இ) பாண்டிய

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 2.
இளங்கோவடிகள் …………………….. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
Answer:
இ) பொதிகை)

Question 3.
திருநெல்வேலி ………… ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
Answer:
ஈ) தாமிரபரணி

பொருத்துக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி - 01
Answer:

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி - 1

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

குறுவினா

Question 1.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
Answer:
தாமிரபரணி கிளை ஆறுகள் : பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி.

Question 2.
கொற்கை முத்து பற்றிக் கூறுக.
Answer:

  • கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாகும்.
  • நற்றிணை, அகநானூறு முதலான சங்க இலக்கியங்கள் கொற்கை முத்தின் சிறப்பைக் கூறுகின்றன.
  • கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்த யவனர்கள் முத்துக்களை விரும்பி வாங்கிச்சென்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

சிறுவினா

Question 1.
திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத்தொழில் குறித்து எழுதுக.
Answer:
(i) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும்கூடப் பயன்பாட்டில் உள்ளன.

(ii) இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறுவகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

(iii) இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள் -9 தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

(iv) நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 2.
திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
திருநெல்வேலியும், தமிழும் :
(i) அகத்தியம் என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை எழுதியவர் அகத்தியர். இவர் திருநெல்வேலியிலுள்ள பொதிகை மலையில் வாழ்ந்தவர்.
(ii) சங்கப் புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்ந்துள்ளனர்.
(iii) அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.

Question 3.
திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக.
Answer:
(i) பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது.
(ii) நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள், அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள், அழகுற அமைந்துள்ளன.
(iii) அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டதால் பெயர்பெற்ற காவற்புரைத் தெரு உள்ளது.
(iv) தானியங்களை விற்கும் வீதியான கூழைக்கடை (கூலம் – தானியம்), பொன் நாணயங்களை உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலை, பெரு வணிகம் நடைபெற்ற இடமான பேட்டை என்னும் ஊர் உள்ளது.
(v) இத்தகு சிறப்பு மிகுந்த நகர அமைப்புகளைக் கொண்டு காலத்தால் புகழ்பெற்று நிற்கிறது திருநெல்வேலி நகரம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

சிந்தனை வினா

மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
Answer:
மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் :
(i) மக்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் பஞ்சம் இன்றி வாழ உதவும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
(ii) மழைநீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல் ஆங்காங்கு குளங்கள் இருக்க வேண்டும்.
(iii) அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்திருக்க வேண்டும்.
(iv) மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட தூரம் செல்லாமல் மக்கள் தொகைக்கு ஏற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்க வேண்டும்.
(V) கோவில்கள் மற்றும் நூலகம் இருக்க வேண்டும்.
(vi) ஆங்காங்கு பூங்காக்கள் அமைத்து மரம் செடிகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதற்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடற்பயிற்சிக்கும் நடைப் பயிற்சிக்கும் உதவும்படி அமைக்க வேண்டும்.
(viii) சிறந்த போக்குவரத்து வசதிக்குச் சாலைகள் நன்கு அமைக்க வேண்டும்.
(ix) சிறந்த மருத்துவனைகள் இருக்க வேண்டும்.
(x) சாலையோரங்களில் மரங்கள் வளர்க்க வேண்டும்.
(xi) பலவகையான வணிகம் நடைபெற வேண்டும்.
(xii) மேற்கூறிய அனைத்தும் மக்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

கற்பவை கற்றபின்

Question 1.
உங்களுடைய மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.
Answer:
எனது மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் :
என்னுடைய மாவட்டம் சென்னை . இது நம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. இங்குள்ள மெரினா கடற்கரை, உலகிலேயே மிக நீண்ட கடற்கரைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. சென்னை வாசிகள் ஆசையோடு பொழுதுபோக்கி மகிழும் அருமையான திறந்த வெளி இடமாகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் கட்டப்பட்டது புனித ஜார்ஜ் கோட்டை. இதன் வெளிப்புறத்தில் அகழி , அதனை சுற்றி மதில் சுவர்கள் உள்ளன. கோட்டையின் முன்பு மிகவும் உயரமான கொடிக்கம்பமும் உள்ளது.
அண்ணா அருங்காட்சியகம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் ஆகியவை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரில் தனது நாட்டிற்காக இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக போர் நினைவுச் சின்னம் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் இராணுவ தினத்தின் போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இந்தியாவிலுள்ள பழமையான அருங்காட்சியகங்களில் இரண்டாவது இடத்தை வகிப்பது. இது 1851ல் நிறுவப்பட்டது. இது தேசிய மரபுச் செல்வங்களை காக்கும் கலைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.
வள்ளுவர் கோட்டம், தமிழ் மறையாம் திருக்குறளை உலகுக்கு அளித்த திருவள்ளுவரின் நினைவாக கட்டப்பட்ட கலைச் சின்னமாகும்.

சென்னை கிண்டியில் காந்தியடிகள், இராஜாஜி, காமராசர் நினைவாலயங்கள் உள்ளன. ஆசிய விளையாட்டு அரங்குகளின் அரசி’ எனப் போற்றப்படும் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் உள்ளது. வானவியல் பற்றிய த்துகளை நுண்ணிய ஒளி, ஒலி சாதனங்களைக் கொண்டு மக்களுக்குக் குறிப்பாக மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்கும் இடமான கோளரங்கம், கோட்டூர்புரத்தில் உள்ளது.

காளிகாம்பாள் கோவில், கந்த கோட்டம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், வடபழனியில் உள்ள முருகர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி ஆலயம், கோயம்பேடு குறுங்காலீசுரவர் கோவில் என பல ஆன்மிகத்தலங்கள் நிறைந்தது எங்கள் சென்னை மாவட்டம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 2.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.
Answer:
தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. அவைகளைப் பற்றிய செய்திகளை காண்போம்.

(i) சென்னை மாநகராட்சி
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 29 செப்டம்பர் 1688
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட நாள் : 29 செப்டம்பர் 1688
நிர்வாக மண்டலங்கள் : 15
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : திருவொற்றியூர், மணலி , மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோளிங்கநல்லூர்.
வார்டுகளின் எண்ணிக்கை : 200
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) :86,96,010

(ii) கோயம்புத்தூர் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 1981
நிர்வாக மண்டலங்கள் : 5
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மற்றும் மத்திய மண்டலம்.
வார்டுகளின் எண்ணிக்கை : 148
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 42,24,106

(iii) மதுரை மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 1971
நிர்வாக மண்டலங்கள் :4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை : 100
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 14,62,420

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

(iv) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 1994
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை , K. அபிஷேகபுரம்
வார்டுகளின் எண்ணிக்கை : 65
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 10,21,717

(v) சேலம் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 1994
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : சூரமங்கலம், ஹஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி
வார்டுகளின் எண்ணிக்கை : 60
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 10,13,388

(vi) திருநெல்வேலி மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 1994
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : தச்சநல்லூர், பாளையம் கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி
வார்டுகளின் எண்ணிக்கை : 55
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 4,74,838

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

(vii) திருப்பூர் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 டிசம்பர் 1947(பஞ்சாயத்து யூனியனாக)
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2008
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை : 60
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 4,66,998

(viii) ஈரோடு மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு : 1871
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2008
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர்.
வார்டுகளின் எண்ணிக்கை : 60
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 4,44,782

(ix) வேலூர் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட நாள் :1 ஆகஸ்ட் 2008
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : காட்பாடி, வேலூர் கோட்டை, சத்துவாச்சாரி, செண்பகம்.
வார்டுகளின் எண்ணிக்கை : 60
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 4,21,327

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

(x) தூத்துக்குடி மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட நாள் : 5 ஆகஸ்ட் 2008
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை : 60
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 3,56,094

(xi) தஞ்சாவூர் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2014
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை : 62
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 2,22,943

(xii) திண்டுக்கல் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1 நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2014
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை :51
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 2,07,225

(xiii) நாகர்கோவில் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2019
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை : 51
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 2,24,849

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

(xiv) ஓசூர் மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள் : 1நவம்பர் 1866
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2019
நிர்வாக மண்டலங்கள் :4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை :51
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 1,16,821

(xv) ஆவடி மாநகராட்சி :
நகரம் உருவாக்கப்பட்ட நாள்
: 10 ஜனவரி 1955
மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்ட ஆண்டு : 2019
நிர்வாக மண்டலங்கள் : 4
நிர்வாக மண்டலங்களின் பெயர்கள் : வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு.
வார்டுகளின் எண்ணிக்கை : 80
மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) : 3,44,701

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

தெரிந்து தெளிவோம்

(i) முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில் காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.

(ii) திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

(iii) தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில்
பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. பழந்தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் சேரர், சோழர், பாண்டியர்.
2. பாண்டியர்களின் தலைநகர் மதுரை.
3. பாண்டியர்களது இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் திருநெல்வேலி.
4. திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும்.
5. ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர் திருஞானசம்பந்தர்.
6. ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று பாடியவர் சேக்கிழார்.
7. வேணுவனம் என்பதன் பொருள் மூங்கில் காடு.
8. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் திருநெல்வேலி.
9. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள துறைமுகம் கொற்கை.
10. முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’ என்று பாடும் நூல் நற்றிணை
11. ‘கொற்கையில் பெருந்துறை முத்து எனப் பாடும் நூல் அகநானூறு.
12. காவற்புரை என்றால் சிறைச்சாலை.
13. தானியங்கள் விற்கப்படும் தெரு கூலக்கடைத் தெரு.
14. வணிகம் நடைபெறும் பகுதி பேட்டை என்று வழங்கப்பட்டது.
15. இரட்டை நகரங்கள் என்பவை திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் ஆகும்.
16. தென்னிந்தியாவின் ஆஃஸ்போர்டு பாளையங்கோட்டை.
17. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் என்று வழங்கப்படுகின்றன.
18. பாண்டிய மன்னனின் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்று வழங்கப்படுகின்றன.
19. தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர் தண்பொருநை .
20. திருநெல்வேலிக்கு அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம் ஆதிச்ச நல்லூர்.
21. இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்தியவை முதுமக்கள் தாழிகள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

விடையளி :

Question 1.
திருநெல்வேலி பற்றிக் குறிப்பு எழுதுக.
Answer:
(i) திருநெல்வேலி தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்று.
(ii) பழந்தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்டு வந்தனர்.
(iii) அவர்களுள் பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது மதுரை.
(iv) அவர்களது இரண்டாவது தலைநகரமாகத் திருநெல்வேலி விளங்கியது.

Question 2.
திருநெல்வேலியைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடியவற்றை எழுதுக.
Answer:
(i) ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி ‘ ‘எனத் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளார்.
(ii) திருநெல்வேலியில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,
“திங்கள் நாள் விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” என்று பாடியுள்ளார்.

Question 3.
குற்றாலமலையின் வளத்தைப் பாடியவர் யார்? என்னவென்று பாடியுள்ளார்?
Answer:
(i) குற்றால மலையின் வளத்தைப் பாடியவர் திரிகூட இராசப்பக் கவிராயர்.
(ii) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 4.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டைகள் பல இருந்தமைக்குச் சான்றாக விளங்கிய ஊர்கள் யாவை?
Answer:
(i) பாளையங்கோட்டை
(ii) உக்கிரன்கோட்டை
(iii) செங்கோட்டை.

Question 5.
பண்டைய வரலாற்றை நினைவூட்டும் திருநெல்வேலி மாவட்ட ஊர்கள் யாவை?
Answer:
(i) சேரன்மாதேவி
(ii) கங்கைகொண்டான்
(iii) திருமலையப்புரம்
{iv) வீரபாண்டியப் பட்டினம்
(V) குலசேகரன்பட்டினம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Students can Download Tamil Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் ……………………
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer:
ஆ) குதிரை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 2.
பொருந்தாத ஓசை உடைய சொல் …………………….
அ) பாய்கையால்
ஆ) மேன்மையால்
இ) திரும்புகையில்
ஈ) அடிக்கையால்
Answer:
இ) திரும்புகையில்

Question 3.
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Question 4.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) கட்டியிடுத்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
Answer:
ஆ) கட்டியடித்தல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

சிறுவினா

கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 1
இக்காரணங்களால் கீரைப்பாத்தியும் ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

சிந்தனை வினா

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
நான் காளைமாடு, ஆறு ஆகியவற்றை குதிரையோடு ஒப்பிடுவேன்.

ஆறும் குதிரையும் :

  • ஆறு – வேகமாக ஓடும். மெதுவாகப் பாய்ந்து வயலை வளப்படுத்தும்.
  • குதிரை – வேகமாக ஓடும். பகைவரைத் தாக்கும். அன்புடன் தலை சாய்க்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

காளையும் குதிரையும் :

  • காளை – வேகமாக ஓடும். வண்டி இழுக்கும் உரிமையாளரிடம் அன்போடு பழகும்.
  • குதிரை – வேகமாக ஓடும். வண்டி இழுக்கும் உரிமையாளரிடம் அன்போடு அமைதியாக நிற்கும்.

கற்பவை கற்றபின்

Question 1.
இருபொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
Answer:
(எ.கா.) மாலை – மலர் மாலை, அந்திப் பொழுது
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 2
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 3

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. வண்கீரை – வளமான கீரை
2. முட்டப் போய் – முழுதாகச் சென்று
3. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
4. பரி – குதிரை
5. கால் – வாய்க்கால், குதிரையின் கால்

நிரப்புக.

Question 1.
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது ………….. எனப்படும்.
Answer:
இரட்டுற மொழிதல்

Question 2.
இரட்டுற மொழிதலை ……………. என்றும் கூறுவர்.
Answer:
சிலேடை

Question 3.
பரி என்பதன் பொருள் ……………….
Answer:
குதிரை

Question 4.
வண்கீரை என்பதன் பொருள்
Answer:
வளமான கீரை

Question 5.
காளமேகப்புலவரின் இயற்பெயர் ……
Answer:
வரதன்

Question 6.
கீரைப்பாத்தியும் குதிரையும் ……………. என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
Answer:
தனிப்பாடல் திரட்டு

விடையளி :

Question 1.
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
Answer:
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் பாடல் இரட்டுறமொழிதல் ஆகும்.

Question 2.
காளமேகப்புலவர் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களைக் காளமேகப்புலவர் எழுதியுள்ளார்.

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில்
மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை
வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும், கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும் ; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Students can Download Tamil Chapter 3.1 ஒரு வேண்டுகோள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மயிலும் மானும் வனத்திற்கு ………………………… தருகின்ற ன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
Answer:
ஆ) வனப்பு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 2.
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
Answer:
அ) நெடி

Question 3.
அன்னை தான் பெற்ற ………….. ….. சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
Answer:
இ) மழலையின்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 4.
வனப்பில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
Answer:
ஆ) வனப்பு + இல்லை

Question 5.
வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வார்ப்எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்ப்பு எனில்
Answer:
இ) வார்ப்பெனில்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

நயம் அறிக

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள் - 1

குறுவினா

Question 1.
தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?
Answer:
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டும்.

Question 2.
ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
Answer:
மானுடப் பண்பு நிறைந்திருந்தால் ஒரு கலை உயிர்ப்புடையதாக அமையும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

சிறுவினா

சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
(i) சிற்பங்கள் : ஒரு சிற்பி, பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால் அதிக வியர்வை நாற்றம் வீச வேண்டும். உழவனின் உருவச் சிலையாக இருந்தால் ஈரமண் வாசம் வீச வேண்டும்.

(ii) ஓவியங்கள் : ஓர் ஓவியன், தாயின் உருவத்தைத் தீட்டினால் அன்பும் பண்பும் மேலோங்கிட வேண்டும். சிறு குழந்தையின் சித்திரமானால் உடலெங்கும் பால் மணம் கமழ வேண்டும். சிற்பங்களும் ஓவியங்களும் இவ்வாறு அமைவதே சிறப்பு என்று கவிஞர் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

சிந்தனை வினா

நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
Answer:
நான் ஒரு கலைஞராக இருந்தால் பச்சைப்பசேல் என விளங்கும் மலைகள், அங்கு விழும் அருவிகள், பயமறியாமல் பறக்கும் பறவைகள், புலி, மான், சிங்கம் என அனைத்து வனவாழ் விலங்குகளும் அச்சமின்றி அருவியில் நீர் அருந்துதல், ஒன்றையொன்று நட்புடன் நோக்குதல் இவற்றை உருவாக்குவேன்.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
Answer:
மயிலாட்டம்: மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர், தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீ ர் குடித்துக் கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக் காட்டுவர்.

Question 2.
உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
உழைப்பு இல்லையேல்
உணவும், மகிழ்ச்சியும்
இல்லை இன்று
உழைத்தால் வயதான போது
உட்கார்ந்து உண்ணலாம்
உழைக்க வேண்டிய காலத்தில்
உழைக்கவில்லை என்றால்
ஓய்வு எடுக்க வேண்டிய
காலத்தில் உழைக்க வேண்டும்
உயிரினங்கள் கூட உழைக்கின்றன
கையிருந்தும் உழைக்காமல்
இருந்தால் வாழ்க்கை இல்லாமலாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. மழலை – குழந்தை
4. வனப்பு – அழகு
5. பூரிப்பு – மகிழ்ச்சி
6. மேனி – உடல்

நிரப்புக.

Question 1.
பூரிப்பு என்பதன் பொருள்
Answer:
மகிழ்ச்சி

Question 2.
தேனரசன் …………….. பணியாற்றியவர்.
Answer:
தமிழாசிரியராகப்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 3.
ஒரு வேண்டுகோள் கவிதை ……………. என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
Answer:
பெய்து பழகிய மேகம்

விடையளி :

Question 1.
தேனரசன் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  • மண்வாசல்
  • வெள்ளை ரோஜா
  • பெய்து பழகிய மேகம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.1 ஒரு வேண்டுகோள்

Question 2.
தேனரசன் எந்த இதழ்களில் கவிதைகள் எழுதினார்?
Answer:

  • வானம்பாடி
  • குயில்
  • தென்றல்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

Students can Download Tamil Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

மதிப்பீடு

Question 1.
வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
‘சிதம்பரனாரின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றின் படி பேச்சாற்றல் மிக்க வ.உ. சிதம்பரனாரின் வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

பிறப்பு மற்றும் பெற்றோர் :
சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் உலகநாத பிள்ளை , பரமாயி அம்மாள் ஆவர்.

வழக்கறிஞர் பணி :
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தன் தந்தையைப் போன்று வழக்கறிஞரானார். வ.உ.சி. ஏழைகளுக்காக வாதாடினார். சில சமயங்களில் கட்டணம் பெறாமலும் வாதாடினார். சிறந்த வழக்கறிஞர் என்று போற்றப்பட்டார்.

வெள்ளோட்டம் :
இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். வெள்ளையர்களின் கப்பலில் கூலி வேலை செய்யும் நம் நாட்டு மக்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க முனைந்தார். அம்முனைப்பால் ‘சுதேசக் கப்பல் கம்பெனி’ உருவாயிற்று. தலைவராகப் பாண்டித்துரை தேவர் பொறுப்பேற்றார். அவர்கள் வாங்கிய சுதேசக் கப்பல் வெள்ளோட்டத்திற்காகக் கொழும்புத் துறைமுகத்திற்குப் புறப்பட்டபோது அளவிலா மகிழ்ச்சியடைந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

வெள்ளையர்களின் வீழ்ச்சி :

சுதேசக் கப்பலின் வருகையால் வெள்ளையர்களின் கப்பல் வாணிகம் தளர்ந்தது. வெள்ளையர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். வ.உ.சிதம்பரனாருக்குக் கையடக்கம் தருவதாகவும் கூறினர். பலரைப் பயமுறுத்தினர். இறுதியில் அடக்குமுறையைக் கையாண்டனர்.

சுதந்தர நாதம் எழுந்தது :

பரங்கியரை அசைக்க இயலாது என எண்ணி அடிமைப்பட்டனர் மக்கள். எதிர்த்துப் பேசாமல் சலாமிட்டும், தாளம் போட்டும், அரசாங்கப் பதுமைகளாய் ஆடியும், அரசு வாழ்க என்று பாடியும் தன்னிலையறியாமல் இருந்தனர். இச்சூழலில் சுதந்தர நாதம் எழுந்தது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

வந்தே மாதரம் :

சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய வடநாட்டு வீரரான பாலகங்காதர திலகரும். தென்னாட்டில் நாவீறுடைய பாரதியாரும் தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரும் வந்தே மாதரம்’ என்று முழங்கி மக்களிடம் ஆர்வத்தைத் தட்டி எழுப்பினர். பொதுக் கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் வ.உ.சி. ‘வந்தே மாதரத்தை அழுத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்டு மக்கள் ஊக்கமுற்றனர்.

சிறைத்தண்டனை :

எரிவுற்ற அரசாங்கம் வ.உ.சி. யை எதிரியாகக் கருதியது. அதனால் வ.உ.சி.க்கு ‘இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை’ விதித்தது. ஆறாண்டுகள் கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி ஆற்றினார். சிறைச்சாலையை தவச்சாலையாக எண்ணினார். அவர் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவச்செயல்கள் எண்ணிலடங்காதவை.

சிறைச்சாலையில் வ.உ.சி. :

சிறைச்சாலையில் அவரைப் பலரும் கண்காணித்தனர். கடும்பணி இட்டனர் பலர். ஆனால் அவர் எவரையும் வெறுத்ததில்லை . முறைதவறி நடந்தவர்களை எதிர்த்தார். வரைதவறிப் பேசியவர்களை வாயால் அடக்கினார். ஒரு முறை உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஜெயிலர், வ.உ.சி.க்குப் புத்திமதிகள் கூறினார். வெகுண்டெழுந்த வ.உ.சி. அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை ! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும் மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்’ என்று வேகமுறப் பேசினார். மானமிழந்து வாயிலிலிருந்து மறைந்தான் ஜெயிலர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

சிறையில் தமிழ்ப்பணி :

சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தையும், கடும்பணிபுரிந்தபோது வந்த கண்ணீரையும் தமிழ் நூல்களைப் படித்து மாற்றிக்கொண்டார். தொல்காப்பியம்,

இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி
நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :

வ. உ. சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார்.

பாயக்காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் அனைவரும் பாடும் நாள் வரவேண்டும் என எண்ணினார். ஆனால் அந்நாள் வந்தபோது அவர் இவ்வுலகில் இல்லை . விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

கற்பவை கற்றபின்

Question 1.
பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக
உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பில் உரையாற்றுக.
Answer:
வணக்கம்!
நான் தான் திருப்பூர் குமரன். என்னைக் கொடிகாத்த வீரன் என்று அன்போடு அழைப்பார்கள். இந்திய விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுள் ஒருவன். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. அப்போதுதான் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

அதில் நாங்கள் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்றோம். அப்போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்றேன். ஊர்வலத்தில் இந்திய ஒன்றியத்தின் கொடியினை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றேன். அப்போதுதான் நான் காவலர்களால் தாக்கப்பட்டேன். என்னைக் காவலர்கள் தடியைக்கொண்டு மண்டை பிளக்குமாறு அடித்தார்கள். கையில் இந்தியக் கொடியை ஏந்தியபடி நான் மயங்கி விழுந்தேன்.

மயங்கிய நிலையிலும் கொடியைத் தாங்கிப் பிடித்திருந்தமையால் தான் என்னைக் கொடி காத்த குமரன் என்றழைத்தனர். என்னை மருத்துவமனையில் சேர்த்தனர், என் உயிர் பிரிந்தது. என் வருத்தமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்காகப் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பேன். வெள்ளையரிடம் இருந்து நாட்டைக் காக்கும் வரை போராடி இருப்பேன் என்பது தான்.

என்னைப் போன்று பலர் விடுதலைக்காக உழைத்து தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக ஈந்துள்ளனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

நீங்கள் சுதந்தரக் காற்றைச் சுவாசிக்க தங்கள் உயிர் மூச்சை விட்டவர் பலர்.
நீங்கள் சுதந்தரம் என்ற பெயரில் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் சீரழித்து விட்டீர்கள். இவற்றை மட்டுமா சீரழித்தீர்கள்? இயற்கையையும் அழித்தீர்கள். மாணவச் செல்வங்களே இனிமேலாவது இந்தத் தவறுகளையெல்லாம் செய்யாமல் நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுங்கள் வளமான நாட்டை உருவாக்குங்கள்.
செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :
வ. உ. சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார்.

பாயக்காண்பது சுதந்திரவெள்ளம்

பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் அனைவரும் பாடும் நாள் வரவேண்டும் என எண்ணினார். ஆனால் அந்நாள் வந்தபோது அவர் இவ்வுலகில் இல்லை . விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

கற்பவை கற்றபின்

Question 1.
பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பில் உரையாற்றுக.
Answer:
வணக்கம்!
நான் தான் திருப்பூர் குமரன். என்னைக் கொடிகாத்த வீரன் என்று அன்போடு அழைப்பார்கள். இந்திய விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுள் ஒருவன். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. அப்போதுதான் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் நாங்கள் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்றோம். அப்போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்றேன். ஊர்வலத்தில் இந்திய ஒன்றியத்தின் கொடியினை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றேன். அப்போதுதான் நான் காவலர்களால் தாக்கப்பட்டேன். என்னைக் காவலர்கள் தடியைக்கொண்டு மண்டை பிளக்குமாறு அடித்தார்கள். கையில் இந்தியக் கொடியை ஏந்தியபடி நான் மயங்கி விழுந்தேன். மயங்கிய நிலையிலும் கொடியைத் தாங்கிப் பிடித்திருந்தமையால் தான் என்னைக் கொடி காத்த குமரன் என்றழைத்தனர். என்னை மருத்துவமனையில் சேர்த்தனர், என் உயிர் பிரிந்தது. என் வருத்தமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்காகப் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பேன். வெள்ளையரிடம் இருந்து நாட்டைக் காக்கும் வரை போராடி இருப்பேன் என்பது தான்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

என்னைப் போன்று பலர் விடுதலைக்காக உழைத்து தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக ஈந்துள்ளனர். நீங்கள் சுதந்தரக் காற்றைச் சுவாசிக்க தங்கள் உயிர் மூச்சை விட்டவர் பலர்.

நீங்கள் சுதந்தரம் என்ற பெயரில் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் சீரழித்து விட்டீர்கள். இவற்றை மட்டுமா சீரழித்தீர்கள்? இயற்கையையும் அழித்தீர்கள். மாணவச் செல்வங்களே இனிமேலாவது இந்தத் தவறுகளையெல்லாம் செய்யாமல் நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுங்கள் வளமான நாட்டை உருவாக்குங்கள்.

செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Students can Download Tamil Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் …….
அ) தூத்துக்குடி
ஆ) காரைக்குடி
இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
Answer:
இ) சாயல்குடி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 2.
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்…
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
Answer:
ஆ) நேதாஜி

Question 3.
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….
அ) இராஜாஜி
ஆ) பெரியார்
இ) திரு.வி.க.
ஈ) நேதாஜி
Answer:
இ) திரு.வி.க.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

குறுவின

Question 1.
முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
Answer:
(i) தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

(ii) இவர் வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர்; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில்  தனித் துணிச்சல் பெற்றவர்; சுத்தத் தியாகி என்று தந்தைப் பெரியார் பாராட்டினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 2.
முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக்  காரணம் யாது?
Answer:

  • முத்துராமலிங்கத்தேவர் மேடைகளில் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர்.
  • அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது.

Question 3.
முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
Answer:
முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றல் : சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.

சிறுவினா

Question 1.
நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
Answer:
(i) வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவரைத் தமது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

(ii) முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி. (பொ.ஆ.) 1939-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.

(iii) நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். விடுதலைக்குப் பின் நேதாஜி என்னும் பெயரில் வார இதழ் ஒன்றையும் நடத்தினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 2.
தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
Answer:
(i) 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.

(ii) மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின்  உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.

(iii) அதற்காக ஏழு திங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

சிந்தனை வினா

Question 1.
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் :
(i) நல்ல குண இயல்புகள் கொண்டு இருக்க வேண்டும். செயல்பாடுகள் நல்லதாக இருக்க வேண்டும். வெறும் அறிவு மட்டுமே இருந்தால் ஒருவருக்கு தலைமைப்பண்பு இருக்கின்றது என்ற கருத முடியாது. அறிவு, அனுபவம், மனிதர்களை மதித்து நடந்து கொள்ளும் பண்பு ஆகியவற்றைக் கொண்டவரே சிறந்த தலைவர்.

(ii) மக்களின் வறுமைகளையும், இன்னல்களையும் போக்குபவரே சிறந்தத் தலைவர். கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்; மேல் மட்டத்திலுள்ள மக்களின் நலனையும் பேணி காக்க வேண்டும்.

(iii) இருவரையும் சமமாக நடத்த வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பிரிக்காமல், இருவரும் ஒருவரே என அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவருக்குரிய பண்புகளில் ஒன்றாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

(iv) சிறந்த தலைவரானவர் பிறரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி திறமையாகச் செயல்பட வைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பர். இதுவரை வெளிப்படுத்தாமலிருந்த திறமைகளையும் மக்களிடமிருந்து வெளிக்கொணரும் வகையில் இவர்களது செயல்பாடு அமையும், இவர்களது அணுகுமுறையும், செயல்பாடுகளும் பிறரையும் சிறப்பாக செயல்படத் தூண்டும் வகையில் இருக்கும்.

(v) மக்களிடத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியும் இல்லாமல், நடந்து கொள்ளுதல், செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் போன்ற தலைமைப் பண்புகள் கொண்டவர்களே! சிறந்த தலைவராக முடியும்.

கற்பவை கற்றபின்

Question 1.
நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக.
Answer:
சுபாஷ் சந்திரபோஸ்(நேதாஜி) :

வங்காளத்தில் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் கோதாலியா என்ற சிற்றூரில் ஜானகிநாத் – பிரபாவதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். தாயார் பிரபாவதியிடம் வீரம் நிறைந்த காளிதேவியின் கதைகளைக் கேட்டு அறிவார். 1915 ஆம் ஆண்டு பள்ளியின் மாணவத் தலைவனாக தேர்வு செய்யப்பட்டார். ஐரோப்பாவில் வாழ்ந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் சுபாஷை “நேதாஜி” என்று அழைத்தனர். அன்று முதல் சுபாஷ் சந்திரபோஸ் “நேதாஜி” என்று அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

இந்து, முஸ்லீம் என்று பிரிந்து கிடந்த இந்தியர்களை ஒன்றிணைக்க நேதாஜியால் அப்போது “ஜெய்ஹிந்த்” என்ற தாரக மந்திரம் எழுப்பப்பட்டது.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் நாள் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த சைகோனிலிருந்து விமானத்தில் நேதாஜி புறப்பட்டார். ஆனால் வழியில் (தைவான்) தைஹோக் என்ற இடத்தில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என்றும், இதில் பலத்த காயமடைந்த நேதாஜி ஆகஸ்டு 18-ஆம் நாள் தனது இன்னுயிர் நீத்தார் என்றும் கூறப்பட்டது.

அம்பேத்கர் :

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாலாதே கிராமத்தில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் அம்பேத்கர் பிறந்தார். பெற்றோர் சுபேதார் இராம்ஜி சக்பால் – பீமாபாய் ஆவர். பெற்றோர் இட்ட பெயர் பீமாராவ் இராம்ஜி ஆகும்.

1913-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் மேல் படிப்புக்காகச் சேர்ந்தார். 1915-ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டமும், 1916ஆம் ஆண்டு தத்துவப் பேரறிஞர் பட்டமும் பெற்றார்.

இந்திய நாட்டுக்குத் திரும்பியதும் பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் 1918 ஆம் ஆண்டிலிருந்து 1920-ஆம் ஆண்டு வரை பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மீண்டும் லண்டன் சென்று 1923-இல் எம்.எஸ்.சி மற்றும் பாரிஸ்டர் பட்டங்களைப் பெற்றார். பம்பாயில் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார். 1956ஆம் ஆண்டு அம்பேத்கர் புத்த மதத்தில் இணைந்தார். அதே ஆண்டில் டிசம்பர் 6-ஆம் நாள் இந்திய அரசு 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவித்தது.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

Question 1.
சன்மார்க்க சண்டமாருதம் என்று அழைக்கப்படுபவர் ……
Answer:
முத்துராமலிங்கத்தேவர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 2.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ‘தென்னாட்டுச் சிங்கம்’ எனக் கூறியவர்
Answer:
அறிஞர் அண்ணா

Question 3.
முத்துராமலிங்கத் தேவர் மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காக …………… உடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.
Answer:
ப.ஜீவானந்தம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

விடையளி :

Question 1.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிறை வாசம் பற்றி எழுது.
Answer:
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மத்திய பிரதேசத்தின் தாமோ என்னும் நகரில் உள்ள இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுப் போர் முடிந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 2.
முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
Answer:
தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமயமேதை.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Students can Download Tamil Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

மதிப்பீடு

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 0
Answer:
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 1

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 00
Answer:
1. பசு, விடு, ஆறு, கரு – கரு
2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – பஞ்சு
3. ஆறு, மாசு , பாகு , அது – அது
4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு – அரசு
5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு – எஃகு

குறுவினா

Question 1.
‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
Answer:
குறுமை + இயல் + உகரம் – குற்றியலுகரம். வல்லின எழுத்துக்கள் ஆறின் மீதும் ஏறி (சேர்ந்து வரும் உகரம் தனக்கு உரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இதற்குக் குற்றியலுகரம் என்று பெயர். எடுத்துக்காட்டு: காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.

Question 2.
குற்றியலிகரம் என்றால் என்ன?
Answer:
(i) குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.
(ii) வரகு + யாது = வரகியாது.
(iii) குற்றியலுகரச் சொற்களின் முன் யாது என்னும் சொல் வருமொழியாக வந்து சேரும் போது, நிலைமொழியீற்று ‘உ’ கரம் இகரமாகத் திரிந்து தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இது ‘குற்றியலிகரம் எனப்படும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

கற்பவை கற்றபின்

Question 1.
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
1. ஒன்று
2. இரண்டு
3. மூன்று
4. நான்கு
5. ஐந்து
6. ஆறு
7. ஏழு
8. எட்டு
9. ஒன்பது
10. பத்து
Answer:
குற்றியலுகரச் சொற்கள் :

1. ஒன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்
2. இரண்டு – மென்தொடர்க் குற்றியலுகரம்
3. மூன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. நான்கு – மென்தொடர்க் குற்றியலுகரம்
5. ஐந்து – மென்தொடர்க் குற்றியலுகரம்
6. ஆறு – நெடில்தொடர்க் குற்றியலுகரம்
8. எட்டு – வன்தொடர்க் குற்றியலுகரம்
9. ஒன்ப து – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
10. பத்து – வன்தொடர்க் குற்றியலுகரம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 2.
குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
Answer:
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து

  1. நெடில் தொடர்க் குற்றியலுகரம் – ஆறு
  2. உயிர் தொடர்க் குற்றியலுகம் – ஒன்பது
  3. வன்தொடர்க் குற்றியலுகரம் – எட்டு, பத்து
  4. மென்தொடர்க் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து

Question 3.
குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 4.
கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்திதை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 3

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
குறில் எழுத்துகளைக் குறிக்க …………. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அ) கரம்
ஆ) கான்
இ) கேனம்
ஈ) கோடை
Answer:
அ) கரம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 2.
நெடில் எழுத்துகளைக் குறிக்க ……….. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அ) கேனம்
ஆ) கரம்
இ) கான்
ஈ) கோடை
Answer:
இ) கான்

Question 3.
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ………….. வகையாகப் பிரிக்கப்படும்.
அ) 3
ஆ) 5
இ) 6
ஈ) 1
விடை :
இ) 6

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 4.
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் …………..
அ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
ஆ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இ) இடைத்தொடர் குற்றியலுகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
அ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Question 5.
ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் எது?
அ) மென்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இ) இடைத்தொடர் குற்றியலுகரம்
ஈ) உயிர்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 6.
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் …………….
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) வன்தொடர்க் குற்றியலுகரம்
இ) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) இடைத்தொடர் குற்றியலுகரம்
Answer:
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

Question 7.
தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ………….. எனப்படும்.
அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) ஐகாரக்குறுக்கம்
Answer:
ஆ) குற்றியலிகரம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 8.
குற்றியலிகரம் …………… இடங்க ளில் மட்டும் வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) இரண்டு

Question 9.
மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..
அ) குற்றியலிகரம்
ஆ) குற்றியலுகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) மகரக்குறுக்கம்
Answer:
அ) குற்றியலிகரம்

நிரப்புக :

Question 1.
சால்பு – இது ………….. ஆகும்.
Answer:
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 2.
கயிறு – இது …………… ஆகும்.
Answer:
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

Question 3.
……… என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை .
Answer:
வ்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

பொருத்துக :

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 4
Answer:
1 – ஈ),
2 – அ),
3 – ஆ),
4 – இ),
5 – எ),
6 – ஏ),
7 – ஊ),
8 – உ)

விடையளி :

Question 1.
‘மூதல் எழுத்து என்றால் என்ன?
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் , மெய் எழுத்துகள் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் எனப்படும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 2.
சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சார்பெழுத்து பத்து வகைப்படும்.
அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.

Question 3.
முற்றியலுகரம் என்றால் என்ன?
Answer:

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
  • வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
  • இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
    எடுத்துக்காட்டு: புகு , பசு , விடு, அது, வறு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 4.
குற்றியலுகரத்தின் வகைகளைப் பற்றி கூறுக.
Answer:
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,

  • நெடில் தொடர்க் குற்றியலுகரம்
  • ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  • வன்தொடர்க் குற்றியலுகரம்
  • மென்தொடர்க் குற்றியலுகரம்
  • இடைத்தொடர்க் குற்றியலுகரம்

Question 5.
நெடில்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:

  • தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
  • இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
    எடுத்துக்காட்டு: பாகு, மாசு, பாடு, காது

Question 6.
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
ஆய்தத் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: எஃகு, அஃது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 7.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அரசு (ர – ர் + அ), கயிறு (J – ய்+இ, ஒன்பது (ப – ப்+அ), வரலாறு (லா – ல் + ஆ)

Question 8.
வன்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
வல்லின க், ச், ட், த், ப், ற் மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

Question 9.
மென்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 10.
இடைத்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
இடையின ய், ர், ல், வ், ழ், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.

Question 11.
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்குமா?
Answer:
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 12.
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது எது?
Answer:
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது முற்றியலுகரம். எடுத்துக்காட்டு : புகு , பசு , விடு, அது, வறு.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க. உயர்திரு. ச.பாலன் அவர்களின் சொற்பொழிவு:
Answer:

  • மிக மிக உயர்ந்த மொழி தமிழ்மொழி.
  • பேரறிஞர்கள் பலர் தங்கள் நூல்கள் வாயிலாக தமிழ்மொழியின் சிறப்பை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
  • ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் மகாகவி பாரதியார்.
  • ‘கம்பனை போல் வள்ளுவரைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்ஙனுமே பிறந்தது இல்லை என்றார் பாரதியார்.
  • பெருமை மிக்க நூல்களும் அறிஞர்களும் சிறப்பித்து பாடிய தமிழ் உலக அளவிலே மிகச் சிறந்த ஒரு மொழியாகப் போற்றப்படுகின்றது.
  • செம்மொழி என்றால் பிறமொழிகளின் தாக்கம் இல்லாமலும் சில மொழிகளுக்கு தாயாகவும் இலக்கண இலக்கிய வளமுடையதாகவும் இருக்க வேண்டும்.
  • கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றிற்கு தாய்மொழியாக இருக்கிறது நம் தமிழ்மொழி.
  • தமிழின் பெருமையை விளக்கும் வண்ணம் அறிஞர்கள் பலர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

கவிக்கோ அப்துல்ரகுமானின் உரை :

  • தமிழ்மொழி பேசுவதற்கு அதிகம் மூச்சு விடவேண்டியது இல்லை
  • தமிழ் உலகத்திலேயே உயர்ந்தமொழி.
  • ஆதி மொழி தொன்மை மொழி தமிழ் மொழியாகும்.
  • இரண்டு நாடுகளின் அரசாங்கமொழி ஸ்ரீலங்கா, சிங்கப்பூர்.
  • மலேசியாவில் ஒரே கல்விமொழி.
  • செம்மொழிகளில் முழுமையான இலக்கண வடிவம் கொண்டது தமிழ்மொழி தொல்காப்பியம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
நான் அறிந்த பழமொழிகள் வணக்கம் :

அன்னைத் தமிழில் வணங்குகிறேன்! நான் அறிந்த பழமொழிகளைப் பற்றி இங்கு பேச வந்துள்ளேன்.

1. முயற்சி திருவினையாக்கும் :
பழமொழி விளக்கம் : முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து எந்தவொரு செயலையும் செய்து வந்தால் வாழ்வில் உயர்வு அடையலாம் என்பதே இப்பழமொழியின் விளக்கம். ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதை உணர்ந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி.

2. இளமையில் கல் :
பழமொழி விளக்கம் :
மனித வாழ்வில் கல்வி இன்றியமையாதது. ஆனால் கற்க வேண்டிய இளம் வயதில் கல்வி கற்க வேண்டும். இளமையில் மட்டுமே கல்வியை கற்க முடியும், கற்க வேண்டும் என்பது இப்பழமொழியின் நீதியாகும்.

3. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் :
பழமொழி விளக்கம் :
வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்த சந்தர்ப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

4. உப்பிட்டவரை உள்ளளவும் நினை :
பழமொழி விளக்கம் : நாம் பசியால் வாடிய பொழுது நமக்கு உணவளித்தவரை என்றுமே மறக்கக்கூடாது. நம்முடைய உள்ளத்தில் என்றுமே அவர்களை நினைக்க வேண்டும்.

5. கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு :
பழமொழி விளக்கம் :
எனக்கு எல்லாம் தெரியும் என்று செருக்கு கொள்ளக்கூடாது. ஏனெனில் நாம் கற்றுக் கொண்டது நமது கையினைப் போன்ற சிறிய அளவே. கல்லாதது உலகளவு உள்ளது என்பதே இப்பழமொழியின் விளக்கம். எல்லாம் தெரியும் என்ற செருக்கு ஒருவனுக்கு இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இப்பழமொழியின் நீதியாகும்.

சொற்களை எடுத்து எழுதுக

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 000
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 5

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

அறிந்து பயன்படுத்துவோம்

திணை இரண்டு வகைப்படும். அவை, 1. உயர்திணை, 2. அஃறிணை ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்.

படத்திற்கு பொருத்தமான திணையை எழுதுகSamacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 0000
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 6

கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக

வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 00000
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 7

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

தாய்மொழிப் பற்று

முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று – தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)

முன்னுரை:
அன்னைத் தமிழ் ! இன்பத் தமிழ் ! இனிய தமிழ் ! பைந்தமிழ்! செந்தமிழ்! என பலவாறு போற்றிப் பேசும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி பற்றி இக்கட்டுரையில் ஆய்வதே நம் சீரிய நோக்கமாகும்.

மொழிபற்றிய விளக்கம்:
மனிதன் தன் எண்ணங்களை மனித உணர்ச்சிகளை பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக அவனால் உருவாக்கப்பட்டதே மொழியாகும். வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது எழுத்துமொழியாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

தாய்மொழி:
அவரவர் தாய்மொழியே அவரவர்க்கு உயர்வாகும். தமிழ்மொழியைத்தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரும் தமிழின் பெருமையை, அதன் தொன்மையை கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தாய்மொழி மூலம் கல்வி கற்றால் உணர்ச்சியும் உணர்வும் ஒரு சேர மனித இனத்தினை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

தாய்மொழிப் பற்று:
தன்னிகரில்லாத தமிழ் என்றும் ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” – (தமிழ்விடு தூது) ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றும் பாரதிதாசன் பைந்தமிழ் இனிமையை போற்றிப் பாடுகிறார். எண்ணற்ற வேர்ச் சொற்களால் புதிய புதிய சொற்களை ஆக்கிக் கொள்ளும் திறன் படைத்தது, தமிழ். தமிழின் எழுத்து வகைப்பாடும் வரிசை முறையும் மொழியியலாளரையும் வியக்க வைப்பன.

தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்:

  • சூரிய நாராயண சாஸ்திரி என்ற தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். தாய்மொழி மீது மிகுந்த பற்றும் அக்கறையும் கொண்டவர்.
  • வேதாச்சலம் என்ற தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டவர். செந்தமிழில் கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றவர்.

நமது கடமை:

  • தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும்.
  • தாய்மொழியில் சொற்களஞ்சியம் பெருக வேண்டும்.
  • தாய்மொழியில் சாதனைகள் பல படைக்க வேண்டும்.

முடிவுரை:

ஒண்டமிழ், வான் தமிழ், தேன் தமிழ், பைந்தமிழ் என்ற பலவாறு போற்றிப் புகழ்பாடும் தாய் மொழியாம் தமிழில் எண்ணற்ற கருத்துக் குவியல்கள் பொதிந்துள்ளன. அனைத்தையும் நாம் வாழ்நாளில் பயன்படுத்தி இன்புற வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

மொழியோடு விளையாடு

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

(எ.கா.) இருதிணை – உயர்திணை, அஃறிணை
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 000000
Answer:

  1. முக்கனி : மா, பலா, வாழை
  2. முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
  3. நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
  4. ஐவகை நிலம்: குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை
  5. அறுசுவை : இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு

ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக

கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 0000000
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 8

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக

(எ.கா.) அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 00000000
Answer:

1. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது

2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.
விராக சீனா நம அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.

3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.

4. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர்.
குழந்தையை மெதுவாக நட என்போம்.

5. நீதிமன்றத்தில் தொடுப்பது வழக்கு.
நீச்சத் தண்ணி குடி என்பது பேச்சு வழக்கு.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதும் போது திருத்தமான நடையையே கையாள்வேன்.
2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் - 9

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள்

Students can Download Tamil Chapter 1.4 சொலவடைகள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள்

மதிப்பீடு

Question 1.
பாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
ஆளுக்கு ஒரு வேலை (பொம்மலாட்டம்)
(சிறுகதை)
Answer:
பொம்மலாட்டம் ஒரு கலை, கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்னணியில் கதை மாந்தர்களை பேச விட்டு கதை சொல்லத் தொடங்குவர். கதை விறுவிறுப்பாக சென்று ஒரு கட்டத்தில் சட்டென்று முடியும். இக்காட்சியைப் பார்த்து சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து மகிழ்வர். இதோ மெல்லிய ஒடிசலான தேகம் கொண்ட நடுத்தர வயதுக்காரர் பொம்மலாட்டம் மூலம் கதையொன்றை சொல்லி அசத்துகிறார். அந்தக் கதையை நாமும் கேட்போமே!

பொம்மலாட்டம் பார்க்க வந்தவர்களை இரு கரம் கூப்பி வணங்கி கதை நாயகனை அறிமுகம் செய்கிறார் கதை சொல்லி.

பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே ஊரைச் சுற்றுகிறான் பையன். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல.

”அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையிலே முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு” என்கிறார் அப்பா. “படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது” முகத்தில் அறைந்தாற் போல் பேசுகிறான் நம் கதைநாயகன். அப்பா சத்தம் போடுகிறார், சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க, “ராசா, உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ளே விலைபோகும். நீ ன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க – இது அம்மாவின் உபதேசம்.

வேறு வழியில்லாம பையன் பள்ளிக்கூடம் போகிறான். அவனுக்கு படிப்பதில் நாட்டமில்லை, விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒன்ணு போய்கிட்டு இருக்கு , “எறும்பே! எறும்பே! என் கூட விளையாட வர்றியா?” – என்றான் பையன். ”குடல் கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம் எனக்கு நெறைய வேலை கிடக்கு. நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.

“தேனீ! தேனீ! நீ என் கூட விளையாட வர்றியா? என்றான் பையன்” “உனக்குத்தான் வேலை இல்லை, எனக்குமா வேலை இல்லை. போபோ நான் தேன் எடுக்கனும்” பறந்து போனது தேனீ. பையன் கொஞ்சம் தூரம் நடக்கிறான். பொதிமாடு ஒன்றைப் பார்க்கிறான்.

“மாடே! மாடே! சும்மாதானே இருக்கே! என் கூட விளையாட வர்றியா?” என்றான் பையன்.
”எனக்கு வேலை இருக்கு அந்த ஆமையை போய்பாரு என்றது பொதிமாடு”. “ஆமையே! ஆமையே! என் கூட விளையாட வர்றியா? எனக் கேட்டான் பையன்.

“முயலோட போட்டி வச்சிருக்கேன். எனக்கு உன்கூட விளையாட நேரமில்லே நீ அந்த முயலைப் போய் பாரு” என்றது ஆமை.
முயலை விளையாட அழைத்தான். முயலும் விளையாட மறுத்தது.

சுராவின் தமிழ் உரைநூல் – 7 ஆம் வகுப்பு – 5 in 17 முதல் பருவம்
கடைசியில் குட்டிச்சுவரில் எகிறி குதித்தான் பையன். குட்டிச் சுவரில் இருந்து எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோடு அவன் கையில் கால்ல ஏறி நறுக்கு நறுக்கென்று கடித்தன. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடுறான்.

அம்மாவைப் பார்த்து “இந்த உலகத்திலே எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாக்குறாங்க ஈ, எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது என்றான் பையன்.
அம்மா ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் மகனின் மன மாற்றத்திற்காக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
Answer:

  • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்மப் பகைங்கிற மாதிரி படிக்காத பையனை போராடித்தான் படிக்க வைக்கணும்.
  • அடை மழைவிட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி படிக்கலனா அப்பாவிட்டாலும் அம்மா விட மாட்டாங்க.
  • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
  •  “அப்பன் குதிருக்குள்ள இல்ல.”

Question 2.
பரடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
Answer:

  • குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
  • தட்டிப்போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லே என்பது போல வறுமையிலே வாடுகிறவங்களுக்கு கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடுவாங்க.
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி நிழலில் படுத்து தூங்கினதால ஆமையிடம் தோற்று போச்சாம் முயலு!
  • ஆயிரம்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் உழைக்கிறவன் மத்தியிலே உதவாக்கரை ஒருத்தன் இருந்தால் அந்தக் கூட்டமே கெட்டுவிடும்.
  • புண்ணுக்கு மருந்து போட முடியும் புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? வீண் விதண்டாவாதம் செய்கிறவனிடம் பேசி ஜெயிக்க முடியாது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

கூடுதல் வினாக்கள்

நீரப்புக :

Question 1.
உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள ……… போகும்.
Answer:
விலை

Question 2.
அடைமழை விட்டாலும் ……….. மழை விடாது.
Answer:
செடி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 3.
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு ………….. பூச்சி போதும்.
Answer:
அந்துப்பூச்சி

Question 4.
பாடிப்பாடிக் குத்தினாலும் ……………. அரிசி ஆகுமா?
Answer:
பதரு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள்

Question 5.
அதிர அடிச்சா ……… விளையும்.
Answer:
உதிர

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Students can Download Tamil Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல், …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 2.
ஒலியின் வரிவடிவம் …….. …… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து

Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 4.
பேச்சுமொழியை ………………….. வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக

சரியா தவறா என எழுதுக

Question 1.
மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
Answer:
சரி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 2.
எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
Answer:
சரி

Question 3.
பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
Answer:
தவறு

Question 4.
எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
Answer:
தவறு

Question 5.
பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம். Answer:
சரி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

ஊடகங்களை வகைப்படுத்துக

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும் - 01
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும் - 1

குறுவினா

Question 1.
மொழியின் இரு வடிவங்கள் யாவை?
Answer:
(i) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழித் தேவைப்படுகிறது.
(ii) காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழித் தேவைப்படுகிறது. (iii) எனவே பேச்சுமொழி, எழுத்துமொழி இவ்விரு வடிவங்களும் மொழியின் இரு கண்களாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:

  • வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும்.
  • மொழியின் உயிர் நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர்.

Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:

  • பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
  • மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும்.
  • இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

சிறுவினா

Question 1.
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கினை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:

  • ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
  •  அவர்கள் வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக பேசும் மொழியில் சிறிது சிறிது மாற்றங்கள் ஏற்படும்.
  • அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழிகள் கிளைமொழிகள்’ எனப்படும்.
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.

சிந்தனை வினா

Question 1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
Answer:
இலக்கு + இயம் = இலக்கியம். இலக்கியங்கள் நம் வாழ்வை வளப்படுத்த, வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்குகளாகத் திகழ்கின்றன. இலக்கியங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன. அற இலக்கியங்கள் வழங்கும் அற்புதமான கருத்துகளைக் கடைப்பிடித்தால் நம் வாழ்வு பிறரால் பாராட்டப்படும் தன்மையுடையதாக விளங்கும்.

இலக்கியங்கள் வழங்குகின்ற கருத்துகள் எக்காலமும் நிலைத்து நிற்கின்ற கருவூலமாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு உண்மையை பறைசாற்றுகின்றன.

மணிமேகலை பசிப்பிணி அகற்றும் மாண்பை எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இலக்கியமும் தரும் உண்மையான கருத்துகளைக் கடைப்பிடித்து நாம் வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற நிலை கடந்து அறிவியல் தமிழ், கணினி தமிழ், இணையத் தமிழ், ஊடகத் தமிழ் என்று மொழி வளர்ந்து கொண்டே வருகிறது. இத்தகு வளர்ச்சி தமிழ்மொழியின் உச்சநிலை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்துவழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
பேச்சுமொழி : அம்மா பசிக்குது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி : அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். பேச்சுமொழி : நல்லாச் சாப்ட்டான்.
எழுத்துமொழி : நன்றாகச் சாப்பிட்டான்
பேச்சுமொழி : நல்லா படிச்சான்.
எழுத்துமொழி : நன்றாகப் படித்தான்.
பேச்சுமொழி : சந்தியா சாப்ட்டியா.
எழுத்துமொழி : சந்தியா சாப்பிட்டாயா.
பேச்சுமொழி : வீட்டுப் பாடம் எழுதிட்டியா.
எழுத்துமொழி : வீட்டுப்பாடம் எழுதிவிட்டாயா.

Question 2.
பேசும் போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
(i) சொல்லு – சொல்
(ii) வில்லு – வில்
(iii) நில்லு – நில்
(iv) வந்தியா – வந்தாயா?
(v) எழுந்தியா – எழுந்தாயா?
(vi) சாப்ட்டியா – சாப்பிட்டாயா?

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………. மொழியாகும்.
அ) பேச்சுமொழி
ஆ) எழுத்துமொழி
இ) இரட்டை வழக்கு மொழி
ஈ) இவை ஏதும் இல்லை
Answer:
ஆ) எழுத்துமொழி

Question 2.
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
அ) நன்னூல்
ஆ) தண்டியலங்காரம்
இ) புறப்பொருள் வெண்பா
ஈ) தொல்காப்பியம்
Answer:
அ) நன்னூல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 3.
பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள்……………..
அ) அதிகமாக இருக்கும்
ஆ) குறைவாக இருக்கும்
இ) அளவாக இருக்கும்
ஈ) இவை ஏதும் இல்லை
Answer:
அ) அதிகமாக இருக்கும்

நிரப்புக :

Question 1.
பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ……..
Answer:
உடல்மொழி , ஒலிப்பதில் ஏற்ற இறக்கம்)

Question 2.
பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சுமொழியின் பொருள் ……….
Answer:
வேறுபடும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 3.
பேச்சுமொழி இடத்திற்கு இடம் ……….
Answer:
மாறுபடும்

Question 4.
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை என்பர்.
Answer:
வட்டார மொழி

Question 5.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியவை ………. மொழிகளாகும்.
Answer:
கிளை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

விடையளி :

Question 1.
இரட்டை வழக்குமொழி என்றால் என்ன?
Answer:
தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.

Question 2.
இரட்டை வழக்கு மொழியை தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
இரட்டை வழக்கு மொழியை தொல்காப்பியர் உலக வழக்கு , செய்யுள் வழக்கு என்று குறிப்பிடுகிறார்.

Question 3.
மொழியின் முதல் நிலை எவை?
Answer:
பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 4.
இரண்டாம் நிலை என்று மொழியில் எதனை குறிப்பிடுகின்றோம்? Answer:
படித்தல், எழுதுதல் என்பவை மொழியின் இரண்டாம் நிலை எனக் குறிப்பிடுகின்றோம்.

Question 5.
மொழி இல்லையேல் மனித சமுதாயம் முன்னேற்றம் அடைந்திருக்காது இக்கூற்றை மெய்ப்பிக்க.
Answer:

  • மொழியின் மூலமாக மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
  • மொழி இல்லையேல் மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மையே.

Question 6.
மொழிகள் பல தோன்றக் காரணங்கள் யாவை?
Answer:

  • ஆரம்ப காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.
  • அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக்குறியீடுகளை உருவாக்கிக்
    கொண்டனர்.
  • இதன் விளைவாகவே மொழிகள் பல தோன்றின.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 7.
மொழியைப் பற்றி மு. வரதராசனார் கூறுவன யாவை?
Answer:

  • பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.
  • எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என மு. வரதராசனார் மொழியைப் பற்றி கூறுகிறார்.

Question 8.
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது ஏன்?
Answer:

  • மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது எழுத்து மொழியே.
  • நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது.

Question 9.
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது? ஏன்?
Answer:

  • மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே.
  • பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும்.
  • அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.
  • பேசுபவரின் உடல்மொழியும் ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியவையும் பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Question 10.
வட்டார மொழிக்குச் சான்று தருக.
Answer:

  • பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
  • மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். (iii) இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

எடுத்துக்காட்டு :

‘இருக்கிறது’ என்னும் சொல் இருக்கு’, ‘இருக்குது’ ‘கீது’ என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகப் பேசப்படுகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Students can Download Tamil Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
Answer:
இ) பரணி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 2.
வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
Answer:
ஆ) முகில்

Question 3.
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 4.
‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answer:
அ) தந்து + உதவும்

Question 5.
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்பு இல்லாத
Answer:
இ) ஒப்புமையில்லாத

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

குறுவினா

Question 1.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும் எனக் கவிஞர் கூறுகிறார்.

Question 2.
‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
Answer:
முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ்பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு பலவாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

சிறுவினா

Question 1.
தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள். அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
Answer:
“அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா கூறுகிறது. மனிதன் வாழ்க்கையில் அடைய வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் என்பது இதன் கருத்து. தமிழ்ச் சிந்தனைக்கும் இந்தியப் பொதுச் சிந்தனைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. இந்தியப் பொதுச் சிந்தனை மரபின்படி அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் அடைய வேண்டியவை. தமிழ்ச் சிந்தனை மரபில் தொல்காப்பியர் காலந்தொட்டே அறம், பொருள், இன்பம் என்ற கருத்து மட்டுமே உண்டு. வீடு பற்றிய கருத்து கிடையாது.

இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில் தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. நம் தமிழில் சிறந்த அற இலக்கியமாக திகழ்வது திருக்குறள். நம்முடைய மானுடர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும்போது அவற்றை திருத்திக் கொள்ள அறக்கருத்துகளையும் நீதிக் கருத்துகளையும் போதிக்கும் தேவை ஏற்படுகிறது. அதனால் தோன்றிய இலக்கியம்தான் அற இலக்கியமாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

கற்பவை கற்றபின்

Question 1.
தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
Answer:
அதியமான் நெடுமான் அஞ்சி (அதியமான்), வேள் ஆய் ஆண்டிரன் (ஆய்), வல்வில் ஓரி ஓரி), மலையமான் திருமுடிக்காரி(காரி, கண்டீரக் கோப்பெருநள்ளி நள்ளி), பாரி, வையாவிக் கோப்பெரும் பேகன் (பேகன்)

(i) அதியமான் : தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது “கோமகன்” என்பதன் மரூஉ. அதியமான் என்பது அதியர் கோமான்’ என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் ஆகும். ஒளவையாரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

(ii) ஆய் : பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் ஆவான்.

(iii) ஓரி : கடையெழுவள்ளல்களுள் ஒருவரான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பட்டார்.

Question 2.
தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) இதிகாசம்
(ii) உரைநடை
(iii) உவமை
(iv) கட்டுரை
(v) கலந்துரையாடல்
(vi) கலை
(vii) கவிதை
(viii) காப்பியம்
(ix) சிறுகதை
(x) தொடர்கதை
(xi) சொலவடை
(xii) நாடகம்
(xiii) பழமொழி
(xiv) பாட்டு
(xv) புனிதம்
(xvi) விடுகதை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. ஒப்புமை – இணை
2. முகில் – மேகம்
3. அற்புதம் – விந்தை
4. உபகாரி – வள்ளல்

நிரப்புக :

Question 1.
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் …………
Answer:
உடுமலை நாராயணகவி

Question 2.
முகில் என்பதன் பொருள் …………….
Answer: மேகம்

Question 3.
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ……..
Answer:
குமண வள்ளல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

விடையளி :

Question 1.
முல்லைக்கு தேர் தந்தவர் யார்?
Answer:
முல்லைக்குத் தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவர் வள்ளல் வேள்பாரி.

Question 2.
பாணி இலக்கி பரணி இலக்கியம் என்றால் என்ன?
Answer:
பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப் பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.