Class 7

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.4 பள்ளி மறுதிறப்பு

Students can Download Tamil Chapter 2.4 பள்ளி மறுதிறப்பு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.4 பள்ளி மறுதிறப்பு

மதிப்பீடு

Question 1.
மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
Answer:
மதிவாணன் கோடை விடுமுறையில் நாலைந்து நாள்கள் அக்கா வீடு, அத்தை வீடு என்று சென்று வந்தான். தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதுபோக்கினான்.
மதிவாணனின் நண்பன் கவின், “சும்மாதானே இருக்கே. வாடா பின்னலாடை நிறுவனத்துக்குப் போகலாம். புதிய உடைகள், எழுதுகோல்கள், குறிப்பேடுகள் வாங்கப் பணம் சம்பாதித்து விடுவாய்” என்றான். மதிவாணனும் சேர்ந்துவிட்டான்.

மதிவாணனுக்குப் புதிய அனுபவம் கிடைத்தது. சனிக்கிழமை வாரச் சம்பளம் கிடைத்தது. மேலும் வடை, தேநீர், இரவில் பரோட்டா, தோசை என்று சாப்பிட முடிந்தது.

வாழ்க்கை முழுவதும் தொழிலாளியா? எனச் சிந்தித்தான். தொழிலாளியாக இருப்பது கேவலமில்லை. ஆனால் படிக்கிற வயதில் வேலை தேவையா? எனச் சிந்தித்தான்.

படித்தால் வேறு வேலை கிடைக்கும். நல்ல வருமானம் வரும் எனத் தோன்றியது. கல்வியறிவு முதன்மையானது. ஒரு பட்டமாவது வாங்கவேண்டும் என எண்ணினான். அப்துல்கலாமும் அம்பேத்கரும் இருந்த விளம்பரப் பலகை கண்ணில் பட்டது. அவர்களைப் போல் உயர வேண்டுமெனில் படிக்க வேண்டும் என உணர்ந்தான்.

மதிவாணன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது படிப்பறிவில்லாத முதியவர் ஒருவர், அங்கு வந்து நின்ற பேருந்து நல்லூர் போகுமா?” என்று கேட்டார். ஒரு சிறுவன் பேருந்தின் முகப்பைப் பார்த்தான். எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்தான்.

“என்னப்பா போகுமா?” என்று மீண்டும் கேட்டார். “யாருக்குத் தெரியும்? எங்களுக்குப் படிக்கத் தெரியாதே” என்று கூறியபடி ஒரு சிறுவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். பெரியவர் “இதுகூட படிச்சுச் சொல்லத் தெரியாதா?” என்றார். ஒரு சிறுவன் பெரியவரே. இதப் படிக்கக் கூட உங்களுக்குத் தெரியாதா?” என்றான். மற்றவர்கள் சிரித்தனர். மதிவாணன் அப்பெரியவரிடம் “பேருந்து வந்தா சொல்றேன்” என்றான்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.4 பள்ளி மறுதிறப்பு

முதியவர் கல்வியறிவு இல்லாததால் அவமானப்பட்டதைக் கவனித்தான். கல்வியறிவு இல்லையெனில் தானும் இவ்வாறு அவமானப்பட நேரும் என்ற எண்ணம் வந்தது.

நல்ல கல்வியறிவு தலைநிமிர்ந்து நிற்க வைக்கும். நல்ல படிப்புதான் சிறந்த மனிதனாக்கும் என்பதை உணர்ந்தான். வேலைக்குப் போவதை விடுத்துப் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்தான்.

கற்பவை கற்றபின்

Question 1.
பள்ளி மறுதிறப்பு’ என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள்? வகுப்பில் கலந்துரையாடுக.
மாணவன் -1 : டேய் மணியைப் பார்த்தாயா? தேர்வில் முட்டை மதிப்பெண்
பெற்றுள்ளான்.
மாணவன் -2 : அப்படியெல்லாம் ஒருவரை ஏளனப்படுத்தாதே. அவன் நம் வகுப்பில் படிக்கும் மாணவன். அவனுக்கு என்ன பிரச்சனை? எதனால் படிக்க இயலவில்லை என்று சிந்தித்தாயா? அதை விட்டுவிட்டு ஏளனப்படுத்துகிறாயே?
மாணவன் -1 : என்னை மன்னித்துவிடு. ஏதோ விளையாட்டுத்தனமாகப் பேசிவிட்டேன் அவனுக்கு எவ்வாறு உதவலாம் என்று சொல்.
மாணவன் -2 : இதுதான் படிப்பவருக்கு அழகு. நீயும் நானும் சேர்ந்து அவனுக்குப் டு
பள்ளி வேளை நேரம் முடிந்ததும் படிப்பதற்குக் கற்றுக் கொடுக்கலாம். நீ அவனுடைய வீட்டிற்கு அருகில் இருக்கிறாய். தினமும் காலையில் கற்றுக்கொடு. நான் தினமும் மாலையில் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறேன்.
மாணவன் -1 : நான் மொழிப் பாடங்களையும் அறிவியல் பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறேன்.
மாணவன் -2 : நான் கணிதம், சமூக அறிவியல் இரண்டு பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறேன்.
மாணவன் -1 : மொழிப்பாடத்தில் முதலில் எழுத்துகளை அடையாளப்படுத்தி புதிய
சொற்கள் உருவாக்குதல் போன்ற மொழிப்பயிற்சிகள் மூலம் எளிய முறையில் கற்றுக் கொடுப்பேன். சொந்தமாகப் பேசுதல், கடிதம், கட்டுரை எழுதுதல் ஆகியவற்றையும் கற்றுக் கொடுப்பேன்.
மாணவன் -2 : நானும் கணிதத்தை வாய்பாடுகள் படிக்க வைத்தல், எளிமையான வழிமுறைகளில் அறிவியலை இன்றைய வாழ்வியலுடனும் குடும்பத்திடனும் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளச் செய்வேன்.
மாணவன் -1 : அறிவியல் பாடத்தை நாம் பயன்படுத்தும் பொருட்களுடன் ஒப்பிட்டுக்
கற்றுக் கொடுப்பேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.4 பள்ளி மறுதிறப்பு

மாணவன் -2 : ஆம். நாம் இருவரும் சேர்ந்து மணியைப் படிக்க வைத்து அடுத்த
தேர்வில் நல்ல மதிப்பெண் பெறச் செய்வோம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

Students can Download Tamil Chapter 3.2 பாஞ்சை வளம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
Answer:
இ) வாரணம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியில் ……………. நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
Answer:
அ) முயல்

Question 3.
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடி வீடு
Answer:
ஈ) மாடி வீடு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 4.
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
Answer:
ஆ) பூட்டிய + கதவுகள்

Question 5.
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஓடை
ஈ) தோரணம் + ஓடை
Answer:
அ) தோரணம் + மேடை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 6.
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………
அ) வாசல் அலங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்
Answer:
இ) வாசலலங்காரம்

பொருத்துக

1. பொக்கிஷம் – அழக
2. சாஸ்தி – செல்வம்
3. விஸ்தாரம் – மிகுதி
4. சிங்காரம் – பெரும் பரப்பு
Answer:
1. பொக்கிஷம் – செல்வம்
2. சாஸ்தி – மிகுதி
3. விஸ்தாரம் – பெரும பரப்பு
4. சிங்காரம் – அழகு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

குறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டைகள் பற்றிக் கூறுக.
Answer:
பாஞ்சாலங்குறிச்சி நகரில், பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை எல்லாம் மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தன மரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும் இயற்கை வளங்களாகும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

சிறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:

  • பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள வீடுகள் தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  • வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
  • வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும்  இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
Answer:
வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டி விடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே  துறையில் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?
Answer:
(i) நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் என்பது வாய்மொழி இலக்கியம் என்று கூறுவர்.
கட்டபொம்மன் வீரம் பற்றி உலகமே அறியும். நம் நாட்டிலுள்ள அரசர்கள், குறுநில மன்னர்கள் எல்லோரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குப் பயந்து வரி
செலுத்தினார்கள்.

(ii) ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னர்கள் சிலருள் கட்டபொம்மனும்
ஒருவர். அவர் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தாமல் வரி கேட்க வந்தவர்களுடன் விவாதம் செய்து எதிர்த்து நின்றார்.

(iii) இந்த வீரம்தான் உலகளாவிய தமிழர்கள் கட்டபொம்மனை பெரிதும் மதிக்கக்
காரணமாகியது. கட்டபொம்மனை புகழ்ந்துப் பாடிய பாடல்தான் கட்டபொம்மன் கதைப் பாடல், ஆங்கிலேயர்களுக்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த அரசன் என்பதால் அனைவரும் அவரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

(iv) தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யும் வகையில் பாடப்பட்டு உள்ளதால்
கட்டபொம்மன் கதைப் பாடல் பெரிதும் புகழப்படுகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் வீட்டில் உள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக்கதைப் பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
நாட்டுப்புறக் கதைப் பாடல் :

பாடல் 1:
காட்டுப் பாதையில் ஓரன்பர்
கால்கள் கடுக்க நடந்திட்டார்
மேட்டுப் பகுதியில் ஓரிடத்தில்
மிகவள மாகவே பூசணியின்
கொடியில் பெரும்பெரும் காய்கள் பல
குண்டாய் அழகாய் இருந்தனவாம்
விடிந்தது முதலே நடந்ததனால்
வியர்த்தே அலுத்துப் போனராம்!
ஆல மரத்தின் நிழலினிலே
அயர்ந்தே படுத்துக் கொண்டாராம்
மேலே பார்த்தார் மரத்தினிலே
மெல்லிய சிறுசிறு பழங்களினை
எம்மாம் பெரிய ஆலமரம்
இதிலே சின்னஞ் சிறுபழங்கள்
அம்மாடி பூசணிக் கொடியினிலே
அடடா அளவில் பெரும்பழங்கள்
என்னே இயற்கையின் வஞ்சனைதான்
ஏனோ இந்த மாற்றங்கள்
எண்ணிய படியே தூங்கிவிட்டார்
இயல்பாய் குறட்டையும் விட்டாராம்!
பட்டென எதுவோ மூக்கின் மேல்
பட்டதும் திடுக்கிட் டெழுந்தாராம்!
பட்டது ஆலம் பழமென்று
பார்த்துப் புரிந்தே கொண்டாராம்!
அடடா ! இயற்கையின் அற்புதத்தை
அறியா மல்தான் நினைத்திட்டேன்
உச்சியி லிருந்தே பூசணிதான்
மூக்கில் விழுந்தால் என்னாகும்?
எது? எது? எப்படி எங்கேதான்
இருந்திட இயற்கை வகுத்த நெறி
அதுவே சரியென உணர்ந்தாராம்
எழுந்தே இயற்கையைத் தொழுதாராம்!

பாடல் 2:
பாட்டியின் வீட்டுப் பழம்பானை – அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் – அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா !
உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று – வயிறு
ஊதிப் புடைத்துப் பருத்ததடா !
மெல்ல வெளியில் வருவதற்கும் – ஓட்டை
மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!
பானையைக் காலை திறந்தவுடன் – அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா ! ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா !
கள்ளவழியில் செல்பவரை – எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் – தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. சூரன் – வீரன்
2. வாரணம் – யானை
3. பொக்கிஷம் – செல்வம்
4. பரி – குதிரை
5. சாஸ்தி – மிகுதி
6. சிங்காரம்- அழகு
7. கமுகு – பாக்கு

நிரப்புக :

Question 1. ……………… தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும்
நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
Answer:
நா. வானமாமலை

Question 2.
மன்னன் ……………… பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.
Answer:
கட்டபொம்மனின்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 3.
கமுகு என்பதன் பொருள் ………………
Answer:
பாக்கு

பாடலின் பொருள்

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன். அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும். அரண்மனை வாயில் முறைப்படி அழகுப்படுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

யானைக்கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறமும் இருக்கும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின்

வளத்தைக் கூறி விளையாடும். அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன். வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது. சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Students can Download Tamil Chapter 1.2 கவின்மிகு கப்பல் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
Answer:
இ) காற்று

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 2.
மக்கள் ………………….. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்
Answer:
ஈ) வங்கத்தில்

Question 3.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………….
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
Answer:
இ) கடல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 4.
‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்
Answer:
ஆ) பெருமை + கடல்]

Question 5.
இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
அ) இன்று ஆகி
ஆ) இன்றி ஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றா ஆகி
Answer:
இ) இன்றாகி

Question 6.
எதுகை இடம்பெறாத இணை ………..
அ) இரவு – இயற்கை
ஆ) வங்கம் – சங்கம்
இ) உலகு – புலவு
ஈ) அசைவு – இசைவு
Answer:
அ) இரவு – இயற்கை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

பொருத்துக

1. வங்கம் – பகல்
2. நீகான் – கப்பல்
3. எல் – கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்
Answer:
1. வங்க ம் – கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

குறுவினா

Question 1.
நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
Answer:
நாவாயின் தோற்றம் : உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய் என்று அகநானூறு நாவாயின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 2.
நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணை செய்கிறது?
Answer:
இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது.

சிறுவினா

கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
Answer:

  • உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்.
  •  அந்த நாவாய் புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
  • இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற கடற்காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்த பெரிதும் துணை புரிகின்றது.
  • உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் என்று அகநானூறு கடலில் கப்பல் செல்லும் காட்சியை விளக்குகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

சிந்தனை வினா

தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
Answer:

  • நான் விரும்பும் பயணம் கடல்வழிப் பயணம்.
  • ஏனென்றால் கடலில் செல்லும் போது கடலில் வீசும் இதமான காற்று உடலை வருடிச் செல்லும். மேலும் கீழுமாக தாவிச் செல்லும் அலைகள் காண்பதற்கு கவினுற அமைந்திருக்கும்.
  • கடலில் வாழும் பல்வகை மீன்கள் கடல் நீரில் நீந்திச் செல்லும் காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
  • இரவு நேரத்தில் கப்பலிலிருந்து ஆகாயத்தைப் பார்க்கும் போது பல்வகை விண்மீன்கள் மற்றும் நிலவு நம்முடனே பயணிப்பது போன்ற தோற்றம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கற்பவை கற்றபின்

Question 1.
கடலில் கிடைக்கும் பொருள்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்கள் :

  • பல்வகை மீன்கள், சிப்பிகள், சங்குகள், நண்டுகள் கடலின் மூலம் கிடைக்கின்றன.
  • சுண்ணாம்பு. மணல், சரளை போன்ற பொருட்கள் மற்றும் கடல் அடிவாரத்தில் கரைந்துள்ள கனிமங்கள்.
  • கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு.
  • கடல் நீரில் இருந்து உப்பு கிடைக்கிறது.
  • கடல்வாழ், உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய யூனியோ, க்வாட்ருலா என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.
  • ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும். முத்தை அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல் சூடு நீங்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 2.
கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. உரு – அழகு
2. வங்கம் – கப்பல்
3. போழ – பிளக்க
4. எல் – பகல்
5. வங்கூழ் – காற்று
6. கோடு உயர் – கரை உயர்ந்த
7. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘உரு’ என்பதன் பொருள் …..
அ) நாவாய் ஓட்டுபவன்
ஆ) கப்பல்
இ) கரை உயர்ந்த
ஈ) அழகு
Answer:
:ஈ) அழகு

Question 2.
‘போழ’ என்பதன் பொருள் …………………
அ) பிளக்க
ஆ) காற்று
இ) கப்பல்
ஈ) கலங்கரை விளக்கம்
Answer:
அ) பிளக்க

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 3.
‘வங்கூழ்’ என்பதன் பொருள் ……………….
அ) காற்று
ஆ) அழகு
இ) பிளக்க
ஈ) பகல்
Answer:
அ) காற்று

Question 4.
‘நீகான்’ என்னும் சொல்லுக்கு …………………………. என்பது பொருள்.
அ) நாவாய் ஓட்டுபவன்
ஆ) கலங்கரை விளக்கம்
இ) பகல்
ஈ) கப்பல்
Answer:
அ) நாவாய் ஓட்டுபவன்

Question 5.
‘வங்கம்’ என்பதன் பொருள் ……………….
அ) கப்பல்
ஆ) பகல்
இ) அழகு
ஈ) காற்று
Answer:
அ) கப்பல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 6.
கோடு உயர் என்பதன் பொருள் ……………..
அ) கரை உயர்ந்த
ஆ) கப்பல்
இ) காற்று
ஈ) பிளக்க
Answer:
அ) கரை உயர்ந்த

Question 7.
மாட ஒள்ளெரி என்பதன் பொருள் ………………
அ) கலங்கரை விளக்கம்
ஆ) பிளக்க
இ) கரை உயர்ந்த
ஈ) காற்று
Answer:
அ) கலங்கரை விளக்கம்

விடையளி:

Question 1.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றா?
Answer:
ஆம். இது எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.

Question 2.
எட்டுத் தொகை நூல்களை வரிசைப்படுத்துக:
Answer:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Question 3.
மருதன் இளநாகனார் குறிப்பு வரைக.
Answer:

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்தைந்து பாடல்களையும் பாடியவர்.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

பாடலின் பொருள்

உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செல்லும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

Students can Download Tamil Chapter 3.1 புலி தங்கிய குகை Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது (விடை:
ஆ) எங்கு
Answer:
ஆ) எங்கு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

Question2.
‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ?
ஈ) யாண்டு + உனோ?
Answer:
அ) யாண்டு + உளனோ?

Question3.
‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…….
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
Answer:
அ) கல்லளை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

குறுவினா

தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
Answer:
தாய் தம் வயிற்றுக்குப் ‘புலி தங்கிச் சென்ற குகையை உவமையாகக் கூறுகிறார்.

சிறுவினா

தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகள் :
‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

சிந்தனை வினா

தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச்சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
Answer:
புறநானூற்றில் கூறப்பட்ட பெண்கள் வீரத்தில் சிறந்திருந்தனர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். அப்பண்பாட்டில் வளர்ந்த தாய் தன் மகனுடைய வீரத்தை உணர்த்தும் விதமாகத் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறாள்.

கற்பவை கற்றபின்

Question 1.
சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
Answer:
சங்க காலப் பெண்பாற் புலவர்கள் :
ஒளவையார், காவற்பெண்டு, வெள்ளிவீதியார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், நக்கண்ணையார், காக்கைப் பாடினியார், நப்பசலையார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

Question 2.
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை
எழுதுக.
Answer:
முதன்மைக் கருவிகளாகப் பயன்பட்டவை : வாள், வில், வேல் பயன்பாட்டில் இருந்த மற்ற கருவிகள் : அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், வளரி, சூலம் சுருள்பட்டை, கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கோடாலி , சக்கரம், சிறியிலை, எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு,
மழு, வேலுறை. படங்களை மாணவர்கள் தாங்களாகவே வரைந்து பார்க்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. சிற்றில் – சிறு வீடு
2. யாண்டு – எங்கே
3. கல் அளை – கற்குகை
4. ஈன்ற வயிறு  – பெற்றெடுத்த வயிறு

நிரப்புக :

Question 1.
கல் அளை என்பதன் பொருள் ……………….
Answer:
கற்குகை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

Question 2.
சோழ மன்னன் போரவைக் ……… யின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்
Answer:
கோப்பெரு நற்கிள்ளி

Question 3.
………………… எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
Answer:
புறநானூறு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை

பாடலின் பொருள்

(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள்.)

‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Students can Download Tamil Chapter 3.5 வழக்கு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

மதிப்பீடு

1. பந்தர் – முதற்போலி
2. மைஞ்சு – முற்றுப்போலி
3. அஞ்சு – இடைப்போலி
4. அரையர் – கடைப்போலி
Answer:
1. பந்தர் – கடைப்போலி
2. மைஞ்சு – முதற்போலி
3. அஞ்சு – முற்றுப்போலி
4. அரையர் – இடைப்போலி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

குறுவினா

Question 1.
வழக்கு என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

Question 2.
தகுதி வழக்கின் வகைகள் யாவை?
Answer:
தகுதி வழக்கின் வகைகள்.
தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை

  • இடக்கரடக்கல்
  • மங்க லம்
  • குழூஉக்குறி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 3.
வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது – இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
Answer:
இத்தொடரில் இடம் பெற்றுள்ள போலிச் சொல் நஞ்சுவிட்டது.
அதன் சரியான சொல் ‘நைந்து’

கற்பவை கற்றபின்

Question 1.
மூவகைப் போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து தொகுக்க.
Answer:
முதற்போலி :

அகரம் ஐகாரத்தை ஒத்திருத்தல் :
(i) பசல் – பைசல்
(ii) வயிரம் – வைரம்
(iii) மஞ்சு – மைஞ்சு
(iv) மயல் – மையல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

நகரத்திற்கு ஞகரம் :

(i) நயம் – ஞயம்
(ii) நான் – ஞான்

மகரத்திற்கு நகரம் :

(i) முப்பது – நுப்பது
(ii) முனை – நுனை

இடைப்போலி :

(i) அமச்சன் – அமைச்சன்(அ – ஐ)
(ii) அரயன் – அரையன் (அ – ஐ)
(iii) நேசம் – நேயம் (ச-ய)
(iv) என்ப ர் – என்ம ர் (ப-ம் )
(v) ஐந்நூறு – ஐஞ்நூறு (ந -ஞ)
(vi) அசல் – அயல் (ச – ய)

கடைப்போலி :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 1
முற்றுப்போலி :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 2

இலக்கணப்போலி : முன்பின் தொக்கப் போலி
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 3

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.

Question 1.
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை………….. எனப்படும்.
Answer:
வழக்கு

Question 2.
…………… என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம்.
Answer:
வாயில்

Question 3.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் …………… இடம் மாறி வருவதையே குறிக்கும்.
Answer:
முன்பின் பகுதிகள்

Question 4.
நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ……………
Answer:
இடக்கரடக்கல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 5.
மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் ………..
Answer:
மங்கலம்

விடையளி :

Question 1.
இயல்பு வழக்கு என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும்?
Answer:
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.

  1. இலக்கணமுடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ .

Question 2.
இலக்கணமுடையது பற்றி எழுதுக.
Answer:
நிலம், மரம், வான், எழுது – ஆகிய சொற்கள், தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 3.
இலக்கணப் போலி சான்றுடன் விளக்குக.
Answer:
இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னோர் முன்றில் என மாற்றி வழங்கினர். கிளையின் நுனியைக் கிளை நுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.

எ.கா. புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்.

Question 4.
மரூஉ என்றால் என்ன?
Answer:
நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
எ.கா. கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 5.
தகுதி வழக்கு என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும்? அதன் வகைகளை விளக்குக.
Answer:

  1. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
  2. தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை
  3. இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

இடக்கரடக்கல் :

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
எ.கா. : கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது. ஒன்றுக்குப் போய் வந்தேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

மங்க லம் :
செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பிட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.

எ.கா. : ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
சுடுகாடு – நன்காடு

குழூஉக்குறி :

பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

எ.கா. : பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 6.
போலி என்றால் என்ன?
Answer:
சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல்’ என்பதிலிருந்து தோன்றியது. போலி மூன்று வகைப்படும்.

Question 7.
முதற்போலி என்றால் என்ன?
Answer:
பசல் – பைசல், ஞ்சு – மைஞ்சு, யல் – மையல் ஆகிய சொற்களில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.

Question 8.
இடைப்போலி என்றால் என்ன?
Answer:
சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.
(எ.கா) அச்சு – அமைச்சு
ஞ்சி – இலைஞ்சி
யர் – அரையர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 9.
கடைப்போலி என்றால் என்ன?
Answer:
சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும். அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.

(எ.கா) அகம் – அறன்
நிலம் – நிலன்
முகம் – முகன்
பந்தல் – பந்தர்
சாம்பல் – சாம்பர்

Question 10.
முற்றுப்போலி என்றால் என்ன?
Answer:
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
(எ.கா) ஐந்து – அஞ்சு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

மொழியை ஆள்வோம்

கேட்க.

Question 1.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
தேசியம் காத்த செம்மல்
Answer:
முன்னுரை :
தேசியம் காத்த செம்மல், வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.

பிறப்பு மற்றும் பெற்றோர் :
உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் நாள் பசும்பொன் என்ற ஊரில் இவர் பிறந்தார். பிள்ளைப் பருவத்திலேயே தாயை இழந்ததால் இவருக்கு இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் தாயாகப் பாலூட்டி வளர்த்தார். பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவர்.

கல்வி :
தேவர், இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார். அங்கு பிளேக் நோய் பரவியதால் கல்வி தடைப்பட்டது. எனினும் கேள்வி அறிவும் பட்டறிவும் பெற்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் மேடைகளில் பேசும் வல்லமை பெற்றார். எடுத்துக்காட்டாக, ஒருமுறை காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதைக் குறிப்பிடலாம். அனைவரும் அவருடைய பேச்சில் மயங்கினர். அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சர்.சி.பி. இராமசாமி ஆங்கிலம் உலகை ஆள்கிறது. நம் தேவர் மூன்று மணிநேரம் ஆங்கிலத்தை அடக்கி ஆண்டார்’ என்று பாராட்டினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

அரசியல் : ‘
அரசியல் வாழ்வில் தேவர், மேன்மை பெற்று விளங்கினார். தமிழக்கத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து ஐந்து முறை வெற்ற வெற்றிகள் மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கைக் காட்டின. அவர் எப்போதும் ஓட்டு கேட்பதற்காகத் தொகுதிகளுக்குச் சென்றதில்லை. தொண்டு செய்வதற்காக மட்டுமே செல்வார்.

தேவர் வாழ்ந்த விதம் :
தேவர் விவேகானந்தரின் தூதராவும், நேதாஜியின் தளபதியாகவும், சத்திய சீலராகவும், முருக பக்தராகவும், ஆன்மீகப் புத்திரராகவும், தமிழ் பாடும் சித்தராகவும், தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராகவும், புலமையில் கபிலராகவும், இந்தியத் தாயின் நன்மகனாகவும் தேசியம் காத்த செம்மலாக வாழ்ந்தார்.

மனித குலத்தின் வழிகாட்டி :
மனித மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டார். இறப்பு என்பது எல்லா வகைகளிலும் வரலாம். அதாவது, பனை மரத்திலிருந்து விழுந்தவன் பிழைத்ததும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்தவன் இறந்ததும் உண்டு என்று கூறுவார். இவ்வகையில் சமயம், சமுதாயம் குறித்த இவருடைய சிந்தனைகள், மனித குலத்திற்கு வழிகாட்டுவனவாயின.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

முடிவுரை :
தெய்வத் திருமகனார் தேவர் அவர்கள் தம் பேச்சாற்றலால் இலக்கியப் பணி, சமுதாயப் பணி, அரசியல் பணி என அனைத்தையும் ஒரு சேரச் செய்தவர். 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் இவ்வுலகை விட்டு இவருடைய இன்னுயிர் பிரிந்தது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையவில்லை.

Question 2.
கப்பலோட்டிய தமிழர்
Answer:
முன்னுரை :
‘சிதம்பரனாரின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றின் படி பேச்சாற்றல் மிக்க வ. உ. சிதம்பரனாரின் வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமை காலம் :
சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் உலகநாத பிள்ளை , பரமாயி அம்மாள் ஆவர்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தன் தந்தையைப் போன்று வழக்கறிஞரானார். வ.உ.சி. ஏழைகளுக்காக வாதாடினார். சில சமயங்களில் கட்டணம் பெறாமலும் வாதாடினார். சிறந்த வழக்கறிஞர் என்று போற்றப்பட்டார்.

வெள்ளையர்களின் வீழ்ச்சி :
சுதேசக் கப்பலின் வருகையால் வெள்ளையர்களின் கப்பல் வாணிகம் தளர்ந்தது. வெள்ளையர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். வ.உ.சிதம்பரனாருக்குக் கையடக்கம் தருவதாகவும் கூறினர். பலரைப் பயமுறுத்தினர். இறுதியில் அடக்குமுறையைக் கையாண்டனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

சிறையில் தமிழ்ப்பணி :
சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தையும், கடும் பணிபுரிந்தபோது வந்த கண்ணீரையும் தமிழ் நூல்களைப் படித்து மாற்றிக்கொண்டார். தொல்காப்பியம், இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :
வ.உ.சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார். விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

சொல்லக் கேட்டு எழுதுக

  1. அவன் எங்குள்ளான் என எனக்குத் தெரியவில்லை .
  2. வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  3. தெய்வீகத்தையும் தேசியத்தையும் தமது இரு கண்களாகக் கருதியவர்
    முத்துராமலிங்கத்தேவர்.
  4. தொல்காப்பியத்தைப் படித்துத் தொல்லையெல்லாம் மறந்தேன்.
  5. இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

அறிந்து பயன்படுத்துவோம்

ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
அவை 1. எழுவாய், 2. பயனிலை, 3. செயப்படுபொருள்.
ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.

எடுத்துக்காட்டு:

  • நீலன் பாடத்தைப் படித்தான்.
  • பாரி யார்?
  • புலி ஒரு விலங்கு. இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.

ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.

எடுத்துக்காட்டு :

  • கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
  • கரிகாலன் யார்?
  • கரிகாலன் ஒரு மன்ன ன்.

இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

எடுத்துக்காட்டு :

  • நான் கவிதையைப் படித்தேன்.
  • என் புத்தகத்தை எடுத்தது யார்?
  • நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.

இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படுபொருள்கள்.

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க

  1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்
  2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
  3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீன்கொடி பறந்தது.
  4. திருக்குறளை எழுதியவர் யார்?
  5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 9
Answer:

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 4

எழுதிய புலவர் குறிஞ்சிப்பாட்டை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 10
Answer:

  1. சிறுவன் மிதிவண்டியை ஓட்டினான்.
  2. மன்னர் நல்லமுறையில் நாட்டை ஆண்டார்.
  3. குழந்தை பழத்தைத் தின்றது.
  4. மாணவர்கள் பாடத்தைப் படித்தனர்.
  5. ஓவியர் ஓவியத்தை வரைந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

நான் விரும்பும் தலைவர்

திரு.வி. கல்யாணசுந்தரனார் :

முன்னுரை :

திரு.வி.க. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் விருத்தாசலம், சின்னம்மா. இவரின் முன்னோர்கள் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.

இளமைக் காலம் :

தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை இராயப்பேட்டையில் வெஸ்லி பள்ளியில் பயின்றார். நான்காம் வகுப்பு படிக்கும் போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் படிப்பு தடைப்பட்டது.
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.

கதிர்வேற்பிள்ளை என்பவரிடம் தமிழும் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் கேட்டறிந்தார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும் ஜஸ்டிஸ் சதாசிவராவ் அவர்களின் தொடர்பால் ஆங்கில அறிவையும் பெற்றார்.

விடுதலை இயக்கம் :

விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. தேசபக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார். தனது எழுச்சிமிக்க எழுத்துகளால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களைப் பொங்கி எழச் செய்தார். அந்நிய அடக்குமுறையை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக உரையாற்றினார். காந்தியடிகள் சென்னையில் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவருடைய அரசியல் குரு திலகர் ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

தமது பேச்சால் தமிழ் வளர்த்தவர். திரு.வி.க. நடை என்றே ஒரு தனிநடையை நடைமுறைப்படுத்தும் அளவுக்குப் பேசுவது போலவே எழுதுவது; எழுதுவது போலவே பேசுவது என்னும் முயற்சியில் வெற்றி கண்டவர். பிணிக்கும் தகைவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசுவதில் வல்லவர். அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை உணர்ச்சிமிகு பேச்சினால் தம்பால் ஈர்த்து மேடைத்தமிழின் முன்னோடியாகத் திகழ்ந்த வர். திரு.வி.க.

முடிவுரை :

செய்யுள் நூல்கள், உரைநடை நூல்கள் எனப் பல நூல்களை இயற்றியுள்ளார். தேசபக்தன் , நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டவர்.

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு + கு + சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 11

Question 1.
மாடு புல் கொடுத்தார்
Answer:
மாடு + கு + புல் கொடுத்தார் – மாட்டுக்குப் புல் கொடுத்தார்.

Question 2.
பாட்டு பொருள் எழுது
Answer:
பாட்டு + கு + பொருள் எழுது – பாட்டுக்குப் பொருள் எழுது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

Question 3.
செடி பாய்ந்த நீர்
Answer:
செடி + கு + பாய்ந்த நீர் – செடிக்குப் பாய்ந்த நீர்.

Question 4.
முல்லை தேர் தந்தான் பாரி.
Answer:
முல்லை + கு + தேர் தந்தான் பாரி – முல்லைக்கு தேர் தந்தான் பாரி.

Question 5.
சுவர் சாந்து பூசினான்.
Answer:
சுவர் + கு + சாந்து பூசினான். – சுவருக்குச் சாந்து பூசினான்.

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 5
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 6

அகம் என முடியும் சொற்களை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 12
Answer:

(எ.கா.) நூலகம்

1. உணவகம்
2. காப்பகம்
3. மருந்தகம்
4. இனிப்பகம்
5. அடுக்ககம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக
(எ.கா) திருக்குறள் ங பால்களைக் கொண்டது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 13
Answer:
1. எனது வயது கஉ
2. நான் படிக்கும் வகுப்பு
3. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.
4. திருக்குறளில் கந அதிகாரங்கள் உள்ளன.
5. இந்தியா க கூ ச எ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 14
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 15
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 7

  1. மூதறிஞர் – இராஜாஜி
  2. வீரமங்கை – வேலுநாச்சியார்
  3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் – கட்டபொம்மன்
  4. வெள்ளையரை எதிர்த்த தீரன் – சின்னமலை
  5. கொடி காத்தவர் – திருப்பூர் குமரன்
  6. எளிமையின் இலக்கணம் – காமராசர்
  7. தில்லையாடியின் பெருமை – வள்ளியம்மை
  8. கப்பலோட்டிய தமிழர் – சிதம்பரனார்
  9. பாட்டுக்கொரு புலவன்- பாரதியார்
  10. விருதுப்பட்டி வீரர் – காமராசர்
  11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி – நாகம்மை
  12. மணியாட்சியின் தியாகி – வாஞ்சிநாதன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.
2. தலைவர்களின் அரிய பண்புகளை உணர்ந்து பின்பற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.5 வழக்கு - 8

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Students can Download Tamil Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் …
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
கல்வியில்லாத நாடு ……………………… வீடு.
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத

Question 3.
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………….
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
விடை:
இ) பாரதியார்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது … ……
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்

Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. செல்வம் – கல்விச் செல்வமே ஒருவன் பெற வேண்டிய சிறந்த செல்வம்.
2. இளமைப்பருவம் – கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் இளமைப்பருவம்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்திட வேண்டும்.

குறுவினா

Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
Answer:

  • உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனித்தன்மை உண்டு
  • ஏனெனில் எதிர்காலத்தைப் பற்றி அறிய இயலாத அருமையான பிறவியே மனிதப் பிறவி
  • மற்ற உயிரினங்கள் எதிர்காலத்தில் இவ்வாறுதான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் மனிதனின் நிலையோ மாற்றம் நிறைந்தது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:

  • கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
  • விலங்குகள் நல்ல செயல்களைத் தாமாகச் செய்வதில்லை.
  • அதுபோல கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லனவற்றைச் செய்வதில்லை என்கிறார்.

Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கூறும் கருத்தாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

சிறுவினா

Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:
கல்வியே அழியாத செல்வம் :

  • இவ்வுலகில் உள்ள செல்வங்கள் அனைத்து அழியும் தன்மையுடையன்: என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும்.
  • அள்ள அள்ளக் குறையாதது, அழிக்கவே முடியாதது அழியாப்புகழைத் தருவது கல்விச் செல்வமே.
  • கல்விச் செல்வம் கற்கும் போது கசக்கும்; கற்ற பின் கரும்பாய் இனிக்கும். வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
  • இத்தகைய செல்வத்தை என்றும் போற்றிக் காத்திடக் கசடறக் கற்றிடுவோம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:

  • விளக்கானது தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் ஒளி வீசச் செய்கிறது.
  • அதுபோல கல்வி ஓர் ஒளி விளக்கு , அவ்விளக்கானது; தான் இருக்கும் இடத்தை ஒளிமயமாக மாற்றுகிறது. எனவே ஒருவன் கற்ற கல்வி பலருக்கும் பயன்தர வேண்டும்.
  • கல்வியில்லாத நாடு விளக்கில்லா வீடு போன்றது. விளக்கில்லா வீட்டில் குடியிருக்க யாரும் விரும்பாததைப் போலவே, கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிப்பதில்லை.
  • நன்மதிப்பைத் தந்து நல்வழியில் வாழச் செய்யும் கல்வியைக் கற்று, கலங்காமல் வாழ்வோம்

சிந்தனை வினா

Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நல்ல நூலின் இயல்புகள் :

  • கருத்துகளை எளிய நடையில் எடுத்துரைத்தல்.
  • கூற வந்த செய்தியைச் சுருக்கமாகக் கூறி விளங்க வைத்தல்.
  • படிப்பவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ண ம் இனிய நடையில் இருத்தல்.
  • கருத்தாழம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.
  • பயனற்றதை விடுத்து பயனுள்ள கருத்தைத் தருதல்.
  • சிறு சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் அளித்தல்.
  • சான்றோர்களின் கருத்தை மேற்கோள் காட்டுதல்.
  • சமுதாயத்திற்கேற்றபடி இருத்தல்.
  • இன்றைய சூழலுக்குத் தக்கபடி கருத்தளித்தல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

கற்பவை கற்றபின்

Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
– (எ.கா.) கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.
(i) மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. ………. – ஔவையார்

(ii) சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. …………….. – காரியாசான்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

Students can Download Tamil Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்க ளுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
Answer:
அ) மயில்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 2.
பின்வருவனவற்றுள் மலை’ யைக் குறிக்கும் சொல்
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
Answer:
அ) வெற்பு

Question 3.
‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) ஏடெடு + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
Answer:
இ) ஏடு + எடுத்தேன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
Answer:
அ) துயின்று + இருந்தார்

Question 5.
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …..
அ) என்று உரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
Answer:
ஈ) என்றுரைக்கும்

பொருத்துக

1. கழனி – கதிரவன்
2. நிகர் – மேகம்
3. பரிதி – சமம்
4. முகில் – வயல்
Answer:

1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3, பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

குறுவினா

Question 1.
பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
Answer:
வானம், நீரோடை, தாமரை மலர்கள், காடு, வயல், மேகம் முதலியன பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்களாகும்.

Question 2.
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் :
வாழ்வில் துன்பங்கள் நீங்கும்.
நெஞ்சில் தூய்மை உண்டாகும்.
வீரம் வரும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

சிறுவினா

‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
Answer:

  • வானமும், நீரோடையும், தாமரை மலர்களும் எங்களைக் கவிதையாக இயற்றுக என்றன.
  • காடும், வயலும், மேகமும் கண்ணில் புகுந்து கவிதையாய் மாற முயற்சித்தன.
  • ஆடும் மயிலுக்கு நிகரான பெண்கள் அன்பினைக் களிச்சித்திரம் ஆக்கக் கூறினர்.
  • குளிர் தென்றலும், ஆடும் மயிலும், அன்னமும், சுடர்விடும் கதிரோனும், வேல் ஏந்திய வீரர்களும் தங்கள் அழகினை எழுதுங்கள் என்றனர்.
  • இதற்கிடையில் அறியாமையால் துன்பப்படும் தமிழ்நாட்டு மக்களின் காட்சி என்னுள் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் கலந்தது.
  • இத்துன்பம் நீங்கிட அனைவரும் இன்பத் தமிழ்க் கற்றவர் என்ற நிலை வர வேண்டும். அந்நிலையிலேயே துன்பம் நீங்கி, நெஞ்சில் தூய்மை உண்டாகி வீரம் வந்து சேரும் என்று இன்பத் தமிழ்க்கல்வி வழியே பாரதிதாசன் கூறுகிறார்.

சிந்தனை வினா

தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகள் :

  • தமிழ்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகள் மிகவும் ஆழமாகக் கல்வி கற்பார்கள்.
  • மாணவர்களால் தாங்கள் கற்பதைப் பேசுவதுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
  • சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதனால் எளிமையாகக் கற்க இயலும்.
  • கற்கும் திறனைப் பெறுவார்கள்.
  • சுய சிந்தனை வளரும்.
  • எளிமையாக உரையாட முடியும்.
  • கலந்துரையாடல், விவாதித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி இவற்றை எளிதாக எதிர்கொள்வார்கள்.
  • தன்னம்பிக்கை வளர்கிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

கற்பவை கற்றபின்

Question 1.
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக,
Answer:
இயற்கை :
பூக்களின் வலி மலர்வதால் மறைகிறது
மூங்கிலின் வலி இன்னிசையால் மறைகிறது
மேகத்தின் வலி மழைத்துளியால் மறைகிறது
மனிதனே உன்வலி இயற்கையை நீ போற்றுவதால் மறைந்து விடும் மறவாதே

Question 2.
‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் – 1 ; தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது’ என்பது என் கருத்து.
முதலில் நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். என்னவெனில் தாய்மொழியைக் கற்பது, தாய்மொழி வழி கற்பது ஆகிய இவ்விரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாட்டை அறியாமலேயே  வாதிட்டுக் கொண்டுள்ளோம்.
மாணவன் -2 : என்ன வேறுபாடு? தெளிவாகக் கூறு.
மாணவன் -1 : தாய்மொழியில் உள்ள இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை
பெறுவது தாய்மொழியைக் கற்றலாகும். தாய்மொழியின் வழியாய் அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்றுத்  தெளிவது தாய்மொழி வழிக் கற்றலாகும்.

மாணவன் – 2 : பிறமொழியில் கற்பதனால் என்ன இழப்பு எனக் கூறு?
மாணவன் -1 : தாய்மொழியின் வாயிலாகக் கற்பவன்தான் சுயமாகச் சிந்திக்கிறான். சிந்தனை ஆற்றலைப் பெறமுடியும். எண்ணியதை எண்ணியவாறு வெளிப்படுத்த முடியும். :
மாணவன் -2 : பிறமொழியைக் கற்றவனால் அம்மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்தபோது, சிந்திக்க முடியாதா?
மாணவன் -1 : கண்டிப்பாக முடியாது. எடுத்துக்காட்டாக “உனக்குப் பிடித்த ஒன்றைப்
பற்றிக் கூறு என்றால் அவன் முதலில் தன் தாய்மொழியில் சிந்தித்து விட்டுப் பிறகுதான் அவன் அறிந்த வேறுமொழியில் பதிலளிப்பான் – தாய்மொழி என்றால் உடனே பதிலளிப்பான். கல்விச் சிந்தனையாளர்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.

மாணவன் -2 : அப்படியென்றால்.
மாணவன் -1 : என்ன அப்படியென்றால் என்று இழுக்கிறாய்? உண்மையான கல்வியறிவைப் பெற வேண்டுமெனில் தாய்மொழி வழிக் கல்விதான் அவசியம். அவர்களால் மட்டுமே சிறந்த சிந்தனையாளர்களாகவும், படைப்பாளர்களாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவாக முடியும்.

மாணவன் -2 : நீ சொல்வதும் சரிதான். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்,
சர்.சி.வி. இராமன் , கணிதமேதை இராமானுஜம் போன்றோர்களும் அவர்கள் தாய்மொழி வழியில் கற்றதனால்தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. இரவீந்தரநாத தாகூர் அவருடைய தாய்மொழியான வங்க மொழியில்தான் கீதாஞ்சலியை எழுதினார். மகாத்மாகாந்தியடிகள் அவருடைய சுயசரிதையைத் தம் தாய்மொழியில்தான் எழுதினார்.
மாணவன் -1 : சரியாகக் கூறினாய். நான் கூற வந்த செய்தியும் இதுதான். நீயே
கூறி விட்டாய். நாமும் நம் தாய்மொழி வழியிலே கல்வி கற்போம். சிறப்புறுவோம்! நன்றி!

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. எத்தனிக்கும் – முயலும்
2. வெற்பு – மலை
3. கழனி – வயல்
4. நிகர் – சமம்
5. பரிதி – கதிரவன்
6. அன்னதோர் – அப்படி ஒரு
7. கார்முகில் – மழைமேகம்
8. துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்

நிரப்புக.

Question 1.
பரிதி என்பதன் பொருள்
Answer:
கதிரவன்

Question 2.
வெற்பு என்பதன் பொருள் ……….
Answer:
மலை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 3.
பாரதிதாசன் எழுதிய …………… என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
Answer:
பிசிராந்தையார்

விடையளி :

Question 1.
பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  • பாண்டியன் பரிசு
  • அழகின் சிரிப்பு
  • இசையமுது
  • குடும்ப விளக்கு
  • கண்ண கி புரட்சிக் காப்பியம்
  • இருண்ட வீடு

பாடலின் பொருள்

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம் பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர்.

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும். வீரம் வரும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

Students can Download Tamil Chapter 1.1 விருந்தோம்பல் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மரம் வளர்த்தால் …………………………….. பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
Answer:
ஆ) மாரி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

Question 2.
‘நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
Answer:
இ) நீர் + உலையில்

Question 3.
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) மாரியொன்று
ஆ) மாரி ஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
Answer:
அ) மாரியொன்று

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

குறுவினா

Question 1.
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
Answer:
அங்கவை, சங்கவை என்போர் பாரியின் மகள்களாவர்.

Question 2.
பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு?
Answer:
பாரி மகளிர் உலை நீரில் பொன் இட்டுத் தந்ததால் பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை என்பது புலனாகிறது.

சிந்தனை வினா

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் : (பண்பாடு – நம்மைப் பண்படுத்துதல்)
(i) ஒழுக்க ம்
(ii) சிறந்த கல்வியைப் பெறுதல்
(iii) பெரியோரை மதித்தல்
(iv) நன்றியுணர்வுடன் இருத்தல்
(V) ஈகைக் குணம்
(vi) விருந்தோம்பல்
(vii) முன்னோர் கூறியவற்றைப் பின்பற்றுதல்
(viii) மேலைநாட்டு உணவைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவை உண்ணுதல்.
(ix) உடலை மறைக்கும் ஆடை அணிதல்.
(x) உறவினர்களைப் பேணி பாதுகாத்தல்
(xi) நாட்டுப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும் இருத்தல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

கற்பவை கற்றபின்

Question 1.
வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல் - 1

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

Question 2.
விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
விருந்தோம்பல் பண்பு – கதை : மாறனார் என்ற சிவனடியார் பற்றிய கதை :
மாறனார் தம் முயற்சியினாலும் உழைப்பினாலும் உழவுத்தொழில் செய்து அதில் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கும் நலிந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்வார். இவர் இளையான்குடி என்ற ஊரில் வாழ்ந்தவர். தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து இத்திருத்தொண்டை செய்தார்.

மாறனாரும், புனிதவதியும் சிவனடியார்களுக்குத் தினமும் அன்னமிட்டு அவர்களுக்குப் பாத பூஜை செய்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இவருடைய சிவத்தொண்டை உலகறியச் செய்ய எண்ணினார் சிவபெருமான். தன் திருவிளையாடலால் மாறனாரின் வீட்டில் வறுமை சூழச் செய்தார். ஆனாலும், மாறனார் கடன் வாங்கியும் நிலங்களை விற்றும் அன்னமிட்டார்.

ஒருநாள் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. மாறனாரும் அவரது மனைவியும் பசியில் வாடிக் கொண்டிருந்தனர். அன்று நள்ளிரவில் சிவபெருமான், அடியவர் கோலத்தில் மாறனார் வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் இருவரும் அகமகிழ்ந்தனர். ஆனால் அன்னமிடுவதற்கு என்ன செய்வது என்று வருந்தினர்.

புனிதவதி, மாறனாரிடம், “நாம் இன்று காலையில் வயலில் விதைத்து வந்த விதை நெல்லினைச் சேகரித்து எடுத்து வந்து தந்தால், நான் அதனை சமைத்து அடியவருக்கு நீ அன்னம் பரிமாறுவேன்” என்றாள்.

அடியவரைக் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படிக் கூறிவிட்டு, வயலுக்குச் சென்றார் – மாறனார். புனிதவதி மிச்சமிருந்த விறகை வைத்து தோட்டத்தில் இருந்த கீரையைச் சமைத்தாள். மாறனார் வருகைக்குக் காத்திருந்தாள். அடியவர் கண்ணயர்ந்து விட்டார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

மாறனார் ஒரு வழியாக நீரில் மிதந்த விதைநெல்லை எடுத்து வந்தார். விறகு இல்லாததால் வீட்டின் கூரையில் இருந்த குச்சிகளை எடுத்துக் கொடுத்தார். புனிதவதி நெல்லை உரலில் இட்டுக் குத்தி அரிசியை எடுத்து உலையிலிட்டுச் சோறாக்கினாள்.

பிறகு உறங்கிக் கொண்டிருந்த அடியவரை உணவு உண்பதற்காக மாறனார் எழுப்பினார். அப்போது சோதி வடிவாக இறைவன் தோன்றினார். “மாறனாரே, உங்கள் இருவரின் விருந்தோம்பல் பண்பினை உலகிற்கு உணர்த்தவே நான் இவ்வாறு செய்தேன். ” இனி நீங்கள் செல்வங்கள் அனைத்தையும் பெற்று பல காலம் தொண்டு செய்து என்னை வந்து அடைவீர்களாக,” என்று கூறிவிட்டு மறைந்தார்.
இப்புராணக்கதை நமக்கு விருந்தோம்பல் பற்றி உணர்த்துகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார்.
2. முன்றுறை அரையனாரின் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு.
3. முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
4. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
5. நமது பாடப்பகுதியில் உள்ள பழமொழி நானூறு பாடலில் உள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல்

விடையளி :

Question 1.
பழமொழி நானூறு குறிப்பு வரைக.
Answer:

  • பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது நானூறு பாடல்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்

Question 2.
முன்றுறை அரையனார் – குறிப்பு வரைக.
Answer:

  • பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார் ஆவார்.
  • இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச்  சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

பாடலின் பொருள்

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும்

Students can Download Tamil Chapter 1.2 வயலும் வாழ்வும் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உழவர் சேற்று வயலில் ………………………. நடுவர்.
அ) செடி
ஆ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
Answer:
ஈ) நாற்று

Question 2.
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை …………………… செய்வர்.
அ) அறுவடை
ஆ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
Answer:
அ) அறுவடை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

Question 3.
தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……….
அ) தேர் + எடுத்து
ஆ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + அடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
Answer:
ஈ) தேர்ந்து + எடுத்து

Question 4.
‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) ஓடை எல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
Answer:
ஆ) ஓடையெல்லாம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

பொருத்துக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும் - 1

வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும் - 2
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும் - 2.png - 3

பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக
எ.கா. : போயி – போய்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும் - 2.png - 4

குறுவினா

Question 1.
உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
Answer:

  • உழவர்கள், நாற்றுப் பறிக்கும் பொழுது அங்குள்ள நண்டுகளையும் சேர்த்துப் பிடித்தனர்.
  • கதிரடித்த நெல்தாள்களை மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகளைப் பிரித்தெடுத்தனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

Question 2.
நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
Answer:

  • அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.
  • நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து பிரித்தெடுப்பர்.

சிறுவினா

உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
உழவுத்தொழிலின் நிகழ்வுகள் :

  • மாடுகளை ஏரில் பூட்டி நிலத்தை உழுது பண்படுத்துவர்.
  • நாற்றங்காலில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட நாற்றை நடுவர். அவ்வாறு நடும்போது ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் என்று பெண்கள் நாற்றை நடுவர்.
  • பயிருக்குத் தேவையான அளவு நீரைப் பாய்ச்சுவர்.
  • பிறகு பயிர்களுக்கு இடையே வளர்ந்துள்ள களைகளைப் பறிப்பர்.
  • பயிர்களுக்குத் தேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பர். இயற்கை உரங்களையும் பயன்படுத்துவர்.
  • நெற்பயிர் வளர்ந்து நெல் முற்றியதும் அறுவடை செய்வர்.
  • அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டி நெற்களத்தில் சேர்ப்பர்.
  • கதிரடித்து நெல்மணியைப் பிரித்து எடுப்பர். எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர்.
  • பிறகு நெல்மணிகளை வெயிலில் காயவைத்து மூட்டைகளாகக் கட்டி வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

சிந்தனை வினா

உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
Answer:
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் :
(i) பண்டைத் தமிழர்கள் வேளாண்மைத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

(ii) குறிஞ்சி நில மக்கள் ஏர்கொண்டு உழாமல் வேளாண்மை செய்துள்ளனர்.

(iii) முல்லை நில மக்கள்தான் கலப்பையின் உதவியோடு பயிர் செய்துள்ளனர்.

(iv) ஆறு, குளம், ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சினர். பயிர் செய்தனர். வரகு, சாமை, நெல் எனப் பயிர் செய்தனர் தமிழர். அரிசியை உலகிற்கெல்லாம் கொடுத்தனர்.

(v) அதேபோல பிற பகுதிகளில் இருந்து வேறு சில பயிர்களைத் தமிழகத்திற்குப் பண்டைத் தமிழர்கள் கொண்டு வந்துள்ளனர்.

(vi) வானியல் பற்றி அறிந்ததால் கோள்களின் நிலை கண்டு மழை வரும் காலமறிந்து பயிர் செய்தனர். இயற்கை உரங்களான இலைதழைகளைப் பயன்படுத்தினர். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை எருவாக்கினர். கால்நடைகளை வண்டி இழுக்கவும் ஏர் உழவும் பயன்படுத்தினர்.

(vii) இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது அதிக விளைச்சல் வேண்டி செயற்கை உரங்களைப் பயன்படுத்தினர். பலவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தினர். இதனால் மண் வளம் பாதிப்புக்குள்ளாகி விட்டது. மனிதன் செய்த வேலைகளையெல்லாம் தற்பொழுது இயந்திரங்கள் செய்கின்றன.

(viii) உழவுக் கருவிகள், களைப்பறித்தல், அறுவடை செய்தல் என எல்லாவற்றிற்கும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய வகை வேளாண்மையின் விளைவாக மக்களுக்குப் புதிய நோய்கள் வந்தன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இந்நிலையை மாற்ற வேண்டி தற்போது இயற்கை வேளாண்மை என்று கூறப்படும் அங்கக வேளாண்மைக்கு மாறியுள்ளனர் விவசாயிகள். இவ்வாறு உழவுத்தொழில் காலந்தோறும் மாற்றமடைந்து கொண்டே வந்துள்ளது.

கற்பவை கற்றபின்

Question 1.
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
Answer:
வேளாண்மை சார்ந்த கருவிகள் : ஏர்க்கலப்பை, மண்வெட்டி, அரிவாள், கத்தி, உழவு இயந்திரம், கடப்பாரை.

தெரிந்து தெளிவோம்

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை – நாட்டுப்புறப்பாடல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. நாட்டுப்புறப் பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
2. ‘குழி’ என்பது நில அளவைப் பெயர்.
3. சாண் என்பது நீட்டல் அளவைப் பெயர்.
4. நெற்பயிர் நடுவதற்கான இடைவெளி ஒரு சாண்.

விடையணி:

Question 1.
வாய்மொழி இலக்கியம் – குறிப்பு வரைக.
Answer:
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

Question 2.
போரடித்தல் என்றால் என்ன?
Answer:

  • அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.
  • நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

Question 3.
போரடித்தல் பற்றிப் பாடும் நாட்டுப்புறப் பாடலை எழுதுக.
Answer:
“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை
என்ற பாடல் போரடித்தல் பற்றிக் குறிப்பிடுகிறது.

Question 4.
சும்மாடு என்றால் என்ன?
Answer:
பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள் சும்மாடு எனப்படும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

Question 5.
நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் என்ன செய்தனர்?
Answer:
நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.

பாடலின் பொருள்

உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக் கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்று பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 கலங்கரைவிளக்கம்

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.

அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Students can Download Tamil Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ……………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்

Question 2.
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
ஆ) திரிசொல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி …………………………..
அ) மலையாளம்
ஆ) கன்ன டம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
Answer:
இ) சமஸ்கிருதம்

பொருத்துக

1. இயற்சொல் – பெற்றம்
2. திரிசொல் – இரத்தம்
3. திசைச்சொல் – அழுவம்
4. வடசொல் – சோறு
Answer:
1. இயற்சொல் – சோறு
2. திரிசொல் – அழுவம்
3. திசைச்சொல் – பெற்றம்
4. வடசொல் – இரத்தம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

குறுவினா

Question 1.
மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
Answer:

  • எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
  • இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  • மண், பொன் – பெயர் இயற்சொல்

Question 2.
இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
Answer:
இயற்சொல்லின் நான்கு வகைகள்.
இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகியன நான்கு வகைகளாகும்.

எடுத்துக்காட்டு :
மண், பொன் – பெயர் இயற்சொல்
நடந்தான், வந்தான் – வினை இயற்சொல் அவனை,
அவனால் – இடை இயற்சொல்
மாநகர் – உரி இயற்சொல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
Answer:
கமலம், குங்குமம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

சிறுவினா

Question 1.
இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்

  1. இயற்சொல்,
  2. திரிசொல்,
  3. திசைச்சொல்,
  4. வடசொல்

(i) இயற்சொல் : எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு : கடல், கப்பல்

(ii) திரிசொல் : கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு : வங்கூழ், அழுவம்.

(iii) திசைச்சொல் : வடமொழி தவிர, பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: சாவி, சன்னல்.

(iv) வடசொல் : வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: வருடம், மாதம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 2.
திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
Answer:
திரிசொல்லின் வகைகள் :
திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும். பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
எடுத்துக்காட்டு :
வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

பல பொருள் குறித்த ஒரு திரிசொல் :
எடுத்துக்காட்டு :
இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பலபொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

Question 3.
பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
Answer:

  • பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்களாகும்.
  • வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
  • முற்காலத்தில் பாண்டி நாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி (கிணறு, பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

கற்பவை கற்றபின்

Question 1.
நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக் கொண்டு அதில் உள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக.
Answer:
(i) வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும் போது, பரிசளிப்புகள் நடத்தும் போதும் புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு – பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சில புத்தகசாலையை அமைத்து விடலாம்.
விசேஷம் – சிறப்பு
விசேஷம் – வடமொழி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

(ii) சன்னல் வழியாக இராமு போவதை கோபு பார்த்துக் கொண்டிருந்தான்.
சன்னல் – சாளரம்
சன்னல் – திசைச் சொல்

(iii) நாவாய் கரையோரம் ஒதுங்கியது
நாவாய் – திரிசொல்
நாவாய் – கப்பல்

(iv) கபிலன் கதை எழுதினான்
எழுதினான் – வினை இயற்சொல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

Question 1.
ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ………………. எனப்ப டும்.
Answer:
சொல்

Question 2.
சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் ……….
Answer:
பதம், மொழி, கிளவி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 3.
இலக்கண முறைப்படி …………….. எனச் சொற்கள் நான்கு வகைப்படும்.
Answer:
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

Question 4.
இலக்கிய வகைச் சொற்களை …………….. என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
Answer:
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

Question 5.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் …………… எனப்படும்.
Answer:
இயற்சொற்கள்

Question 6.
இயற்சொல் ……………………… ஆகிய நான்கு வகையிலும் வரும்.
Answer:
பெயர், வினை, இடை, உரி

Question 7.
கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் சொற்கள் …………… எனப்படும்.
Answer:
திரிசொற்கள்

Question 8.
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதை ………….. என்பர்.
Answer:
தற்பவம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 9.
வடசொற்களை ………………… என இருவகையாகப் பிரிப்பர்.
Answer:
தற்சமம், தற்பவம்

Question 10.
திரிசொல் …………………………………………………. ஆகிய நான்கு வகையிலும் வரும்.
Answer:
பெயர், வினை, இடை, உரி

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கடற்பயணம் தொடர்பான கதைகளைப் பெற்றோரிடம் கேட்டு மகிழ்க.
Answer:
சாகச கடல் பயணம்
மாலை வேளை வானம் மேகம் சூழ்ந்தது. நள்ளிரவைப் போல் வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் இன்னும் சூரியன் மறையவில்லை. புயல் மழை கொட்டுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. கடல் அலைகள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு பனை மர அளவிற்கு ஏறி இறங்கின. அதில் பனை மலர்’ என்ற கப்பல் ராட்டினம் போல மேலே ஏறி கீழே இறங்கியது.

பனை மலர் கப்பல் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து கிளம்பி ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. இங்கிருந்து கப்பல் நிறைய ஏலம், கிராம்பு, மிளகு, பட்டை, சோம்பு, ஜாதி, பத்திரி போன்ற உணவுக்கு நல்ல வாசனை தரும் ஏராளமான பொருட்கள், தூத்துக்குடி முத்துக்கள், பவளங்கள், மாணிக்கக் கற்கள், பட்டுச் சேலைகள், பருத்தி துணிகள், சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்களை ஏராளமாக ஏற்றிச் சென்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

கப்பலில் ஆறு மாதங்களுக்குத் தேவையான தண்ணீர், உப்பு, அரிசி, மிளகாய், எண்ணெய் போன்றவற்றை சேமித்துக் கொண்டு போயிருந்தனர். இப்போது, இலங்கையைத் தாண்டி 300 ஆவது கடல் மைல் தொலைவில் பெரும் புயல் ஒன்றை எதிர்கொண்டுள்ளனர். முதலில் சாதாரணமாக நினைத்தாலும், காற்று சுழற்றும், சுழற்றலில், கப்பல் உடைந்து தூள்தூளாகப் போகிறது எனப் பயந்தார்கள். ஆனால் கப்பல் மேலும் கீழும் குதித்தது. கிறுகிறுவென சுற்றிச் சுழன்றது.

கடல் நீர் அருவி கொட்டுவதைப் போல கப்பலுக்குள் புகுந்தது. சில நிமிடங்களில் புயல் நின்று விட்டது. ஊழியர்கள் நூறு பேரும் கப்பலில் புகுந்த தண்ணீரை வாரி வாரி இறைத்து கடலில் ஊற்றினர்.

இரவில் வானத்திலிருந்து சில சமயங்களில் சின்னச் சின்ன எரிகற்கள் விழும். கடலுக்கு மேலே வரும் திமிலங்கள் மிகப்பெரியவை. அவை மேலே வரும் போது அவற்றின் உடல் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் கடலில் இருப்பதைப் போல தெரியும். அதைப் பார்த்ததும் கப்பல் ஊழியர்கள் அதை நிலம் என நினைத்துக்கொண்டு கடலில் பாய பரபரப்பார்கள். ஆனால் மாலுமி அவர்களை அதட்டி நிறுத்துவார்.

கடலுக்குள் மின்னலைப் போல தெரியும் அபூர்வ உயிரினங்கள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் படர்ந்திருக்கும் கடற்கொடிகள், வலையை வீசினால் இரண்டு கப்பல்கள் நிறையும் அளவுக்கு வரும் மீன் கூட்டங்கள் என்றெல்லாம் பார்த்தாலும் அவர்களுக்கு சலிப்பாய் இருந்தது. எப்போது நிலத்தைப் பார்ப்போம் என ஏங்கிப் போனார்கள்.

இப்படியாக பயணம் செய்து ஒரு வழியாக அவர்கள் ஏதென்ஸ் நகரத்தின் 9 துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். கொண்டு வந்த பொருட்கள் எல்லாவற்றையும் கிடங்கில் இறக்கி வைத்தார்கள். அப்போதே நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களை .8 மொய்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு பொருளையையும் பார்த்து வாயைத் திறந்து 3 ஆச்சரியத்தில் மூழ்கினர் அங்குள்ளோர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

முறைப்படி மன்னரைச் சந்தித்த பின்தான் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்பதில் மாலுமி உறுதியாக இருந்தார். ஏதென்சின் ராணி பாட்ரியா அவர்களை வரவேற்றார் மாலுமி: அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் பாதியை ராணி பாட்ரியா வாங்கிக் கொண்டார். அரண்மனையை ஏராளமான தமிழக கலைப் பொருட்களைக் கொண்டு தமிழ்நாட்டின் அரண்மனையைப் போன்று மாலுமி அலங்கரித்தார்.

ராணி மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆப்பிரிக்க வைரங்கள் பதித்த பெரிய வைர் மாலையை மாலுமிக்கு பரிசளித்தார். மீண்டும் விரைவிலேயே அதிக பொருட்களோடு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு மாலுமி மற்றும் கப்பல் ஊழியர்கள் துறைமுகத்திலேயே ஒரு மாதம் 3 தங்கியிருந்து மீதமிருந்த பொருட்களை விற்றனர். கப்பல் ஊழியர்கள் கலைநயத்துடன் 3 இருந்த ஏதென்ஸ் வீதிகளில் மகிழ்ச்சியுடன் தினமும் சுற்றி வந்தனர். கடற்கரையில் இ விளையாடி மகிழ்ந்தனர். ஒரு மாதம் கழித்து இந்தியாவுக்கு திரும்ப மாலுமி முடிவு செய்தார்.

ராணி மினு… மினு…. என சில முறை குரல் கொடுத்தார். மினு நான் வளர்க்கும் டால்பின் உங்களுடன் உங்கள் நாடு வரை துணைக்கு வரும் என்றார். டால்பின் இவர்களின் கடற்பயணத்திற்கு உறுதுணையாக இருந்தது.

பின்வரும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

கப்பல்களின் வகைகளும் பயன்களும்.
Answer:
வணக்கம்!
நீர்வழிப்பயணத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. உள்நாட்டு நீர்வழிப் பயணம், 2. கடல்வழிப் பயணம்

கப்பல் பயணம் : காற்றின் துணை கொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறமையைச் சங்கப்பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. கப்பல்கள் மூலம் பொருள்கள் பூம்புகார் துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன என்பதற்கு ஆதாரமாக பட்டினப்பாலை என்னும் நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கப்பல் வகைகள் : ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்’ என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது. ‘அருங்கலம் தரீஇயர் நீர்மிசைநிவக்கும் பெருங்கலி வங்கம் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பலின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறிய நீர் நிலைகளைக் கடக்க தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் ஆகியவற்றை தமிழர்கள் பயன்படுத்தினர். கலம், வங்கம். நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல்பயணம் மேற்கொண்டனர். கப்பலின் பயன்கள் : முற்காலத்தில் மக்கள் பயணம் செய்வதற்கும் மட்டும் அன்றிப் போர் புரியவும் கப்பல் பெரிதும் பயன்பட்டது. இக்காலத்தில் பெரும்பாலும் பொருள்களை ஏற்றிச் செல்லவே கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைச் சரக்குக் கப்பல்கள் என்பர். போருக்குப் பயன்படும் பெரிய கப்பல்களும் இன்று உள்ளன.

சொல்லக் கேட்டு எழுதுக

  1. பெருந்திரளான மக்களையும் பொருள்களையும் கப்பல்கள் ஏற்றிச் செல்லும்.
  2. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை பாய்மரக் கப்பல்கள்
  3. வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்துத் திசையை அறிவர்.
  4. ஆழ்கடல் விந்தைகளைப் பற்றி ஆய்வுகள் செய்தார்.
  5. நார்வே நாட்டின் கடற்கரையில் கண்விழித்தோம்.

அறிந்து பயன்படுத்துவோம்

காலம் மூன்று வகைப்படும்.
அவை: 1. இறந்தகாலம், 2. நிகழ்காலம், 3. எதிர்காலம்.
இறந்தகாலம் : நடந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம்.
எடுத்துக்காட்டு: பார்த்தான். ஆடினாள், பறந்தது.

  • கபிலன் திரைப்படத்தைப் பார்த்தான்.
  • கோதை நடனம் ஆடினாள்
  • கிளி பறந்தது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

நிகழ்காலம் : நடக்கும் செயலைக் குறிப்பது நிகழ்காலம்.
எடுத்துக்காட்டு : பார்க்கிறான், ஆடுகின்றாள், பறக்கின்றது.

  • கலிவரதன் நாடகத்தைப் பார்க்கிறான்.
  • பூங்குழலி நாட்டியம் ஆடுகின்றாள்.
  • பறவை வானில் பறக்கின்றது.

எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
எடுத்துக்காட்டு : காண்பான், ஆடுவாள், பறக்கும்.

  • திருவண்ணாமலை தீபத்தை மணிமாறன் கண்களால் காண்பான்.
  • வண்டார்குழிலி ஆட்டம் ஆடுவாள்.
  • வண்டு பறக்கும்.

கட்டங்களை நிரப்புக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 6
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 1

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக

Question 1.
அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
Answer:
அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்

Question 2.
கண்மணி நாளை பாடம் படித்தாள்.
Answer:
கண்மணி நாளை பாடம் படிப்பாள்

Question 3.
மாடுகள் இப்பொழுது புல் மேயும்
Answer:
மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

Question 4.
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
Answer:
ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.

Question 5.
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
Answer:
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

பயணங்கள் பலவகை

முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்
பயணம் – வான்வழிப்
பயணம் – முடிவுரை

முன்னுரை:
பயணம் செய்வதில் இளஞ்சிறார்கள் முதல் முதியவர்கள் வரை பெருவிருப்பம் கொள்வார்கள். பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றைப் பற்றி இங்கு ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பயணத்தின் தேவை :
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு . இது ஔவை சொன்ன அமுதமொழி. சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பல நாடுகளைப் பார்க்கலாம். அங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், கோயில்கள், இயற்கைக் காட்சிகள், கவின்மிகு கலைப்பொருட்கள் இவற்றினைக் கண்டு ரசிக்கலாம்.

தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்வதும் அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரங்களையும் பற்றியும் அறிவுப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

தரைவழிப் பயணம்:
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிப்பது பயணம் ஆகும். பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து, இரு சக்கர வாகனம் இவற்றின் மூலம் பயணம் செய்வது தரைவழிப் பயணம் ஆகும். தரைவழிப் பயணம் ஏழை எளியவர், நடுத்தர வகுப்பினர், உயர் தர வகுப்பினர் யாவரும் பயன்படுத்தும் பயணம் ஆகும். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் இப்பயணத்தில் நேரம் விரயமாகிறது. மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கடல்வழிப் பயணம்:
வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே. கப்பல்கள் மூலம் பொருட்கள் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கான ஆதாரங்கள் பட்டினப்பாலையில் தரப்பட்டுள்ளன. தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றை சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர். கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல்பயணம் மேற்கொண்டனர். கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.

வான்வழிப் பயணம்:
மிக துரிதமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது வான்வழிப்பயணமே. வான்வழிப் பயணம் வந்த பிறகு கடல் வழிப்பயணம் குறைந்தது. கடல் வழிப் பயணத்தில் போக வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் ஆகும். வான்வழிப் பயணம் மூலமாக சில மணி நேரங்களில் போக வேண்டிய இடத்திற்கு போய் சேரலாம். மிக முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அரசுத் துறையில் இருப்பவர்கள், வியாபாரிகள்; தொழிலதிபர்கள் போன்றோர் வேலை நிமித்தமாக இந்த வான்வழிப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

முடிவுரை:
பயணம் மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் வந்து போகும் முக்கிய நிகழ்வு ஆகும். தரைவழிப் பயணத்தை யாவரும் பயன்படுத்துவர். கடல்வழிப்பயணத்தில் கனரகப் பொருள்களை ஏற்றிச் செல்ல கப்பல்கள் பயன்படுகின்றன. தொழில் ரீதியாக வான்வழிப் பயணத்தைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்.

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 2
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 3

Answers:

இடமிருந்து வலம் 1. தந்தை , 2. அறிவியல், 4. தேர்வு, 19. குறிக்கோள்
மேலிருந்து கீழ் 1. தலைவர், 3. வியப்பு, 7. தொடக்கம், 12. நூறு
வலமிருந்து இடம் : 6. இடர், 8. உடல், 13. வரலாறு, 14. ஓசை
கீழிருந்து மேல் 5. முதல், 9. கட்டளை , 11. நாள், 15. மகிழ்ச்சி

கட்டங்களை நிரப்புக

குறிப்புகளை கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 7
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 4

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

  1. கடல் மற்றும் கடற்கரையின் தூய்மை காப்பேன்.
  2. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு தராத பொருள்களையே பயன்டுத்துவேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.5 இலக்கியவகைச் சொற்கள் - 5