Class 8

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.5 வினைமுற்று Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 1.
‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.
எ.கா: அவன் வாழ்க. (ஆண்பால்) நாம் வாழ்க. (தன்மை )
Answer:
பால்கள்

  • அவள் வாழ்க (பெண்பால்)
  • அவர்கள் வாழ்க (பலர்பால்)
  • அது வாழ்க (ஒன்றன் பால்)
  • அவைகள் வாழ்க (பலவின்பால்)

இடங்கள்

  • நீ வாழ்க (முன்னிலை)
  • அவர்கள் வாழ்க (படர்க்கை)

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது – இத்தொடரிலுள்ள வினைமுற்று …………………….
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்தது
Answer:
ஈ) மேய்ந்தது

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 2.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………………..
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
Answer:
அ) படித்தான்

Question 3.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ……………….
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
Answer:
ஆ) ஓடு

சிறுவினா

Question 1.
வினைமுற்று என்றால் என்ன?
Answer:
ஒரு வினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 2.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Answer:
தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.

Question 3.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
Answer:
க, இய, இயர், அல் என்பன வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ஆகும்.

Question 4.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று 1

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று 2

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

இயற்கையைப் பாதுகாப்போம்.
(i) வணக்கம்.

(ii) உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடு அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

(iii) அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.

(iv) மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்து விட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாகப் பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது.

(v) உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணுயிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண்வளம், மேகங்கள், ஏன் ஒவ்வொரு மழைத்துளியும் கூட இயற்கையின் கொடைதான். இதில் ஒன்றை இழந்து கூட மனிதர்கள் வாழவே முடியாது.

(vi) உங்கள் தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதைப்போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்து வையுங்கள்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

(vii) இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ம் நாள் உலக இயற்கை வளப்பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

(viii) இந்த நாளில், இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்வோம். அதுவே, அந்த நாளுக்கான நமது மரியாதை என்று சொல்லலாம்.
(ix) என்ன செய்யப்போகிறோம் என்பதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

சொல்லக்கேட்டு எழுதுக.

இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டுகளித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்கவேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள் அறிவோம்.

விடுபட்ட கட்டங்களை நிரப்புக.
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று 3

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2.
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16.
3. உலக இயற்கை நாள் அக்டோபர்
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6.
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் 5.
Answer:
1. உ
2. கச
3. ங
4. க
5. ரு

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
2. கடமையைச் செய்.
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?
Answer:
1. செய்தித்தொடர்
2. விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

தொடர்களை மாற்றுக.

எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

Question 1.
காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக)
Answer:
என்னே , காட்டின் அழகு!

Question 2.
ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித் தொடராக மாற்றுக)
Answer:
பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

Question 3.
அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக)
Answer:
அதிகாலையில் துயில் எழு.

Question 4.
முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக)
Answer:
முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 5.
காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத் தொடராக மாற்றுக)
Answer:
காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

கடிதம் எழுதுக

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

30, சாந்திநகர்,
திருப்பூர் – 2.
நாள்: 01.07.2020.

இனிய நண்பா ,
வணக்கம். நலம். நலம் அறிய ஆவலாய் உள்ளேன்.
இவ்வாண்டு உன் பள்ளியின் 50ஆம் ஆண்டு விளையாட்டு விழா 25.06.2020 அன்று நடைபெற்றதாய் மடல் எழுதியிருக்கின்றாய். இளைஞர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் நீயும் கலந்து கொண்டதாகவும், முதலிடம் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளாய். வெற்றி பெற்ற செய்தி அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

என் அன்பு நிறைந்த பாராட்டினை உனக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். உன்னை நண்பனாய் அடைந்தமையை எண்ணிப் பெருமைப்படுகின்றேன்.

படிப்பில் நீ காட்டி வருகின்ற ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாய் வர உதவுகின்றன. அதேபோல் விளையாட்டிலும் வெற்றி பெற்றுள்ளமை நீ படிப்பு, விளையாட்டு ஆகிய இரண்டிலும் கெட்டிக்காரன் என்பதைப் பறைசாற்றுகின்றன. மாநில, தேசியப் போட்டிகளிலும் தடகளத்தில் முத்திரை பதித்து பெருமை சேர்த்திடவும் வாழ்த்துகிறேன்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

உன் அன்பிற்குரிய நண்பன்,
அ. ராசா.

உறைமேல் முகவரி:
பெறுநர்
செல்வன். ந. கண்ண ன்,
16, பாரதியார் தெரு,
காந்தி நகர்,
மதுரை – 16.

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று 4
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று 5

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.

1. நடக்கிறது – நட
2. போனான் – போ
3. சென்றனர் – செல்
4. உறங்கினாள் – உறங்கு
5. வாழிய – வாழ்
6. பேசினாள் – பேசு
7. வருக – வா
8. தருகின்றனர் – தா
9. பயின்றாள் – பயில்
10. கேட்டார் – கேள்

நிற்க அதற்குத் தக.

என் பொறுப்புகள்:
1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

கலைச்சொல் அறிவோம்

1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicker
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud

இணையத்தில் காண்க

Question 1.
பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளை இணையத்தில் கண்டு அறிக.
Answer:
பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக) ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள்.

இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனிமனித வாழ்க்கையிலும் உறவு முறைகளிலும், சமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். பல பழங்குடியின மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழ்கிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாபோன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
…………………… ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் எனப்படும்.
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) உரிச்சொல்
ஈ) இடைச்சொல்
Answer:
ஆ) வினைச்சொல்

Question 2.
செயலை ………………………… என்றும் குறிப்பர்.
அ) பனை
ஆ) தினை
இ) வினை
ஈ) சுனை
Answer:
இ) வினை

Question 3.
பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை …………………… என்பர்.
அ) பெயர்முற்று
ஆ) இடைமுற்று
இ) வினைமுற்று
ஈ) வினையெச்சம்
Answer:
இ) வினைமுற்று

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 4.
ஒரு செயல் நடைபெறுவதற்கான ……………………. வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
அ) ஆறும்
ஆ) ஏழும்
இ) நான்கும்
ஈ) ஐந்தும்
Answer:
அ) ஆறும்

Question 5.
ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் ……………….. வரும்.
அ) பெயர்முற்றுகள்
ஆ) முற்றுகள்
இ) எழுவாய்
ஈ) வினைமுற்றுகள்
Answer:
ஈ) வினைமுற்றுகள்

Question 6.
………………… ல் செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை வெளிப்படையாக அறியலாம்.
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) முற்றெச்சம்
இ) தெரிநிலை வினைமுற்று
ஈ) ஏவல் வினைமுற்று
Answer:
இ) தெரிநிலை வினைமுற்று

Question 7.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று ………………………… எனப்படும்.
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) தெரிநிலை வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று
ஈ) வியங்கோள் வினைமுற்று
Answer:
அ) குறிப்பு வினைமுற்று

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 8.
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடும் வினைமுற்று ………………………….. வினைமுற்று.
அ) குறிப்பு
ஆ) தெரிநிலை
இ) ஏவல்
ஈ) வியங்கோள்
Answer:
இ) ஏவல்

Question 9.
க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று ……………………
அ) ஏவல் வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) தெரிநிலை வினைமுற்று
ஈ) குறிப்பு வினைமுற்று
Answer:
ஆ) வியங்கோள் வினைமுற்று

Question 10.
வினைமுற்று …………………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) இரண்டு

சிறுவினா

Question 1.
வினைச்சொல் என்றால் என்ன?
Answer:
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒன்றன் தொழிலை உணர்த்தி காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது முற்றுவினை, எச்சவினை என்று இரு வகைப்படும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 2.
வினைமுற்றுகள் எத்தனை வகைப்படும்?
Answer:
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என வினைமுற்று இருவகைப்படும்.

Question 3.
தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?
Answer:
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும். எ.கா: உழுதான்.

Question 4.
குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?
Answer:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும். எ.கா: ஆதிரையான்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.5 வினைமுற்று

Question 5.
ஏவல் வினைமுற்று என்றால் என்ன?
Answer:
தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

Question 6.
வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன?
Answer:

  • வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
  • இவ்வினைமுற்று இரு திணைகளையும், ஐந்து பால்களையும், மூன்று இடங்களையும் காட்டும்.
  • இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும். எ.கா: வாழ்க.

Question 7.
பால் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • பால் ஐந்து வகைப்படும்.
  • அவை, ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.3 பல்துறைக் கல்வி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 1.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி 1
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி 2

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ………………………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ……………………
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை
Answer:
அ) இளமை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 3.
இன்றைய கல்வி ……………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்
Answer:
ஈ) தொழிலில்

நிரப்புக

1. கலப்பில் …………………………. உண்டென்பது இயற்கை நுட்பம்
2. புற உலக ஆராய்ச்சிக்கு ………………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது ………………………. இன்பம் ஆகும்.
Answer:
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவிய

பொருத்துக

1. இயற்கை ஓவியம் – அ) சிந்தாமணி
2. இயற்கை தவம் – ஆ) பெரிய புராணம்
3. இயற்கைப் பரிணாமம் – இ) பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – ஈ) கம்பராமாயணம்
Answer:
1. இ
2. அ
3. ஈ
4. ஆ

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

குறுவினா

Question 1.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?
Answer:

  • இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
  • நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்.

Question 2.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
Answer:
தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

Question 3.
திரு. வி. க., சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • இளங்கோவடிகள்
  • சேக்கிழார்
  • திருத்தக்கத்தேவர்
  • கம்பர்
  • திருஞானசம்பந்தர்
  • பரஞ்சோதி
  • ஆண்டாள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

சிறு வினா

Question 1.
தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.
  • தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.
  • ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம் பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் தமிழ்
  • கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

Question 2.
அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?
Answer:

  • உலக வாழ்விற்கு மிக இன்றியமையாதது அறிவியல்.
  • உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றைப் பற்றிய அறிவும், கோள் இயக்கம், கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு வேண்டும்.
  • இந்நாளில் அத்தகைய அறிவு தேவை. புற உலகு ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
  • நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி, இந்நாளில் உறுதி பெறலரிது.
  • இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.
  • ஆகவே, அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு. வி. க. கூறுகின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

நெடுவினா

Question 1.
காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.

(iii) இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

சிந்தனை வினா

Question 1.
திரு. வி. க குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
Answer:
(i) திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நான் அறிவியல் கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

(ii) காரணம் என்னவென்றால், தமிழ் மொழி அறிந்த எனக்கு அறிவியல் பற்றிய செய்திகளை மேலும் தெரிந்து கொள்ளவும், அறிவியலில் உள்ள பல புதுமையான செய்திகளைத் தமிழ்ப்படுத்தவும் அறிவியல் கல்வி கற்க விரும்புகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இளமையில் கல் என்பது ………………….
அ) முதுமொழி
இ) அறிவு மொழி
ஆ) புதுமொழி
ஈ) தமிழ்மொழி
Answer:
அ) முதுமொழி

Question 2.
இயற்கை ஓவியம் …………………..
அ) பத்துப்பாட்டு
இ) திருக்குறள்
ஆ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) பத்துப்பாட்டு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 3.
இயற்கை இன்பக்கலம் ……………………….
அ) பத்துப்பாட்டு
இ) திருக்குறள்
ஆ) கலித்தொகை
ஈ) மணிமேகலை
Answer:
ஆ) கலித்தொகை

Question 4.
இயற்கை வாழ்வில்லம் ……………………
அ) பெரிய புராணம்
இ) திருக்குறள்
ஆ) சிந்தாமணி
ஈ) மணிமேகலை
Answer:
இ) திருக்குறள்

Question 5.
இயற்கைத் தவம் ……………….
அ) சீவகசிந்தாமணி
ஆ) பெரிய புராணம்
இ) கம்பராமாயணம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) சீவகசிந்தாமணி

Question 6.
இயற்கைப் பரிணாமம் …………….
அ) கம்பராமாயணம்
இ) திருவாசகம்
ஆ) பெரிய புராணம்
ஈ) திருக்குறள்
Answer:
அ) கம்பராமாயணம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 7.
இயற்கை அன்பு ……………………
அ) கம்பராமாயணம்
இ) சீவகசிந்தாமணி
ஆ) பெரிய புராணம்
ஈ) பத்துப்பாட்டு
Answer:
ஈ) பெரிய புராணம்

நிரப்புக

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………………….
2. ………………………. கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே.
3. கல்வி என்பது ……………….. தேடும் வழிமுறை அன்று.
4. …………….. வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
5. கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது ………………….. நுட்பம்.
6. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் …………………….. மற்றும் ………………..
7. இயற்கை இறையுறையுள் ………….., …………………., …………………
8. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது …………………… என்னும் அறிவுக்கலை.
Answer:
1. கல்வி
2. தொழில்
3. வருவாய்
4. தாய்மொழி
5. இயற்கை
6. சிலப்பதிகாரம், மணிமேகலை
7. தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி
8. அறிவியல்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

குறுவினா

Question 1.
திரு. வி. க வின் படைப்புகள் யாவை?
Answer:

  • மனித வாழ்க்கையும்
  • தமிழ்த்தென்றல்.
  • காந்தியடிகளும்.
  • பொதுமை வேட்டல்.
  • பெண்ணின் பெருமை.
  • முருகன் அல்லது அழகு.

Question 2.
இயற்கை அன்னையின் எச்சரிக்கை என்று திரு. வி. க. கூறுவன யாவை?
Answer:
தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டாம் என்றும், அறிவுலகின் பொருட்டுக் கல்விபயிலுதல் வேண்டும் என்றும், இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமாய்
இருக்கிறாள் என்று திரு. வி. க. கூறுகிறார்.

Question 3.
இயற்கை முறையாகத் திரு. வி. க எடுத்துரைப்பது யாது?
Answer:

  • நாம் தமிழ் மக்கள்! நாம் நமது தாய்மொழி வாயிலாக கல்வி பெறுதலே சிறப்பு.
  • அதுவே, இயற்கை முறை என்று திரு. வி. க. கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 4.
கல்வி குறித்து விஜயலட்சுமி பண்டிட் கூறும் கருத்துகள் யாவை?
Answer:
“கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கல்வி குறித்து விஜயலட்சுமி பண்டிட் கூறுகிறார்.

Question 5.
எது தமிழுக்கு இழுக்காகாது என்று திரு. வி. க. கூறுகிறார்?
Answer:
குறியீடுகளுக்குப் பல மொழிகளில் இருந்து கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது என்று திரு. வி. க. கூறுகிறார்.

Question 6.
இளைஞர்களுக்குத் திரு. வி. க. விடுக்கும் வேண்டுகோள் யாது?
Answer:
(i) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்று இருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ?

(ii) தமிழ்க் காவியங்களைப் படியுங்கள், இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

சிறுவினா

Question 1.
ஏட்டுக்கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் கருத்துகள் யாவை?
Answer:

  • ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது.
  • ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது.
  • இந்நாளில் கல்வி என்பது பொருள் அற்றுக் கிடைக்கிறது. குறிப்பிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
  • நாளடைவில், அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்கிறார் திரு. வி. க.

Question 2.
திரு. வி. க. குறிப்பிடும் கல்வி குறித்த தலைப்புகளைப் பட்டியலிடுக.
Answer:

  • ஏட்டுக் கல்வி
  • இயற்கைக் கல்வி
  • தொழிற் கல்வி
  • இசைக் கல்வி
  • தாய்மொழிவழிக் கல்வி
  • நாடகக் கல்வி
  • தமிழ்வழிக் கல்வி
  • அறிவியல் கல்வி
  • காப்பியக் கல்வி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 3.
தாய்மொழிவழிக் கல்வி குறித்து திரு. வி. க. கூறுவன யாவை?
Answer:

  •  நாம் தமிழர், நம் தாய்மொழி வாயிலாகவே கல்வி பெறுவது சிறப்பு. அதுவே தான் இயற்கை முறை.
  • போதிய ஓய்வு நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம்.
  • ஆனால் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
  • தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டு பிறப்பது ஆகும்
    – என்று தாய்மொழிவழிக் கல்வி குறித்து திரு. வி. க. கூறுகின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.2 புத்தியைத் தீட்டு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 1.
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.
Answer:

  • அறிவே ஆற்றல்
  • அறிவுடையார் எல்லாம் உடையார்
  • அறிவே ஆயுதம்
  • மெய்ப்பொருள் காண்பது அறிவு
  • அறிவே பலம்
  • அறிவே ஆனந்தம்
  • பேரறிவு பெருமை தரும்

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………… இன்றி வாழ்ந்தார் .
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி
Answer:
ஆ) அகம்பாவம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 2.
‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
Answer:
இ) கோயில் + அப்பா

Question 3.
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
Answer:
ஆ) பகைவனென்றாலும

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

குறுவினா

Question 1.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
Answer:
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்.

Question 2.
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
Answer:
பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்.

சிறுவினா

Question 1.
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  • கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
  • ஆத்திரம் கண்ணை மறைத்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
  • பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
  • மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
  • இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
  • வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் என் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
  • இவற்றை எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

சிந்தனை வினா

Question 1.
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:

  • முதலில் வெறுப்புக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்.
  • அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ள பிழையை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால், அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………
அ) ஆலங்குடி சோமு
ஆ) ஆலங்குடி வங்கனார்
இ) வாணிதாசன்
ஈ) குமரகுருபரர்
Answer:
அ) ஆலங்குடி சோமு

Question 2.
“தீட்ட வேண்டியது எது?” என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்?
அ) கத்தி
ஆ) புத்தி
இ) கண்ணியம்
ஈ) ஆத்திரம்
Answer:
ஆ) புத்தி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 3.
……………………… க்கு அன்பு பாதை விட வேண்டும்.
அ) பகைவன்
ஆ) நண்பன்
இ) மன்னிக்க தெரிந்தவன்
ஈ) மறந்தவன்
Answer:
அ) பகைவன்

Question 4.
தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..
அ) சினம்
ஆ) செருக்கு
இ) ஆணவம்
ஈ) அடையாளம்
Answer:
ஈ) அடையாளம்

Question 5.
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………
அ) பத்மபூஷன்
ஆ) கலைமாமணி
இ) பாரத ரத்னா
ஈ) பத்மவிபூஷன்
Answer:
ஆ) கலைமாமணி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

குறுவினா

Question 1.
எப்போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்?
Answer:
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

Question 2.
ஆலங்குடி சோமு எவற்றை எண்ணிப் பார்க்கச் சொல்கிறார்?
Answer:
பூமியில் வாழ்வது சில காலம். அதற்குள் அகம்பாவம் ஏன்? அகம்பாவத்தால் ஒரு பயனும் கிடையாது. இதனை எண்ணிப் பார்த்து, மனிதர்களே தெளிவடையுங்கள் என்கிறார் ஆலங்குடி சோமு.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

சொல்லும் பொருளும்

தடம் – அடையாளம்
அகம்பாவம் – செருக்கு
புத்தி – அறிவு
பாதை – வழி
உள்ளம் – மனம்
லாபம் – பலன்
எண்ணி – நினை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.1 கல்வி அழகே அழகு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

Question 1.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • கல்வி கரையில கற்பவர் நாள் சில.
  • கல்வி அழகே அழகு.
  • கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
  • நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
  • கற்க கசடற.
  • இளமையில் கல்.
  • நூல் பல கல்.

Question 2.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம் பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண்ணுடையார் கல்லா தவர். – திருக்குறள்

நிறைகுடம் நீர்தளும்பல் இல். – பழமொழி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்கு
தன்தேச மல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. – மூதுரை

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கற்றவருக்கு அழகு தருவது ………………………….
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

Question 2.
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
Answer:
இ) கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு – கல்வியே உண்மையான அழகு.
2. கற்றவர் – கல்வி கற்றவரே உலகில் உயர்ந்தவர்.
3. அணிகலன் – மனிதனுக்கு உண்மையான அணிகலன் கல்வி ஆகும்.

குறுவினா

Question 1.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
Answer:
கல்வி கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

சிறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.
  • அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.
  • அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.

சிந்தனை வினா

Question 1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:

  • நம்முள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.
  • பகுத்து அறியும் அறிவைத் தரும்.
  • துன்பம் வரும் முன் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.
  • மெய்ப்பொருள் காணும் அறிவினைத் தரும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
குமரகுருபரரின் காலம் ……………………..
அ) கி.பி. 15
ஆ) கி.பி. 17
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 16
Answer:
ஆ) கி.பி. 17

Question 2.
நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………
அ) 100
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer:
ஆ) 102

குறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் கூறுக.
Answer:
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால், இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர்பெற்றது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

Question 2.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  • கந்தர் கலிவெண்பா
  • கயிலைக் கலம்பகம்
  • சகலகலாவல்லி மாலை
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறுவினா

Question 1.
குமரகுருபரர் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
பெயர் : குமரகுருபரர்
பிறந்த ஊர் : ஸ்ரீவைகுண்டம்
பெற்றோர் : சண்முக சிகாமணி – சிவகாமசுந்தரி
காலம் : கி.பி. 17
இயற்றிய நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை, கந்தர்கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முதலியன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

சொல்லும் பொருளும்

1. கலன் – அணிகலன்
2. முற்ற – ஒளிர
3. வேண்டாவாம் – தேவையில்லை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.2 தமிழ்மொழி மரபு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
காகம் கரையும்

  • ஆந்தை அலறும்
  • கிளி பேசும்
  • குயில் கூவும்
  • கூகை குழறும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • மயில் அகவும்
  • வண்டு முரலும்

Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:

  • நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி. நெருப்பு,
  • தீ – கொள்ளி, அக்கினி, கனல், அனல்.
  • நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி
  • வளி – காற்று, வாயு, தென்றல், புயல்.
  • விசும்பு – ஆகாயம், வானம், விண்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு 2

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………………..
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Question 3.
‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
மனிதன் தன் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்ததற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால்தான், நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் ……………………… எனப்படும்.
அ) அறிவு
ஆ) செல்வம்
இ) ஒழுக்கம்
ஈ) சிறப்பு
Answer:
இ) ஒழுக்கம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 2.
மொழிக்குரிய ஒழுங்குமுறைகள் ……………….. எனப்படும்.
ஆ) கலாச்சாரம்
இ) பண்பாடு
ஈ) ஒழுக்கம்
Answer:
அ) மரபு

Question 3.
திணை ……………….. வகைப்படும்.
அ) மூன்று
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) இரண்டு

Question 4.
பால் …………………. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) மூன்று
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ……………………. கூறுகிறது.
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) சங்கநூல்
ஈ) தொல்காப்பியம்
Answer:
ஈ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 6.
இவ்வுலகம் ……………………. ஆல் ஆனவை.
அ) காற்று
ஆ) நீர்
இ) ஐம்பூதங்கள்
ஈ) நெருப்பு
Answer:
இ) ஐம்பூதங்கள்

Question 7.
எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை …………………. என்பர்.
அ) குறில்
ஆ) ஆய்தம்
இ) அளபெடை
ஈ) உயிர்மெய்
Answer:
இ) அளபெடை

Question 8.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….
அ) தொல்காப்பியர்
ஆ) பவணந்தி முனிவர்
இ) கம்பர்
ஈ) பரணர்
Answer:
அ) தொல்காப்பியர்

Question 9.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் …………………. ஆகும்.
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 10.
தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) நான்கு
ஈ) மூன்று
Answer:
ஈ) மூன்று

குறுவினா

Question 1.
“இரு திணைகள்” எவையெனச் சுட்டுக.
Answer:
உயர்திணை, அஃறிணை.

Question 2.
“ஐம்பால்கள் எவையெனச் சுட்டுக.
Answer:

  1. ஆண்பால்
  2. பெண்பால்
  3. பலர்பால்
  4. ஒன்றன்பால்
  5. பலவின்பால்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும். இஃது உயிரளபெடை எனப்படும்.

Question 4.
ஐம்பூதங்கள் யாவை?
Answer:
நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகியன ஐம்பூங்களாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

சொல்லும் பொருளும்

1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழா அமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

இளமைப் பெயர்கள்

  • புலி பறழ்
  • சிங்கம் – குருளை
  • யானை – கன்று
  • பசு – கன்று
  • ஆடு – குட்டி

ஒலி மரபுகள்

  • புலி – உறுமும்
  • சிங்கம் – முழங்கும்
  • யானை – பிளிறும்
  • பசு – கதறும்
  • ஆடு – கத்தும்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 1.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
* வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! – பாரதியார்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 2.
படித்துச் சுவைக்க.
Answer:
செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ; காதல் நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே! – து. அரங்க ன்

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………………………..
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
Answer:
அ) வைப்பு

Question 2.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று+என்றும்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது

Question 4.
‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
Answer:
இ) அறிந்ததனைத்தும்

Question 5.
‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

வாழ்க – வானமளந்த
வாழிய – வாழ்க
ங்கள் – ன்றென்றும்
ண்மொழி – ளர்மொழி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

குறுவினா

Question 1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
Answer:
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

Question 2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
Answer:
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.

சிறுவினா

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:

  • எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
  • எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
  • உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
  •  எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க!
  • வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
Answer:

  • நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, – பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
  • அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான்.
  • தமிழ் மொழி ஒன்றுதான், வாழ்வுக்கே இலக்க
  • இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………. கருத்தை அறிவிக்கும் கருவி ஆகும்.
அ) நாடு
ஆ) மாநிலம்
இ) மொழி
ஈ) ஊர்
Answer:
இ) மொழி

Question 2.
தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ……………….. ஆகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.
அ) அறிவு
ஆ) புத்தி
இ) உயிர்
ஈ) தலை
Answer:
இ) உயிர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 3.
…………………. அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
அ) கடல்
ஆ) பூமி
இ) வானம்
ஈ) நாடு
Answer:
இ) வானம்

Question 4.
‘இசை’ என்பதன் பொருள் ………………….
அ) கருவி
ஆ) புகழ்
இ) பொறுமை
ஈ) சிறுமை
Answer:
ஆ) புகழ்

Question 5.
………………. நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே.
அ) சூழ்கடல்
ஆ) ஆர்கழி
இ) சூழ்கலி
ஈ) விரிகடல்
Answer:
இ) சூழ்கலி

Question 6.
வானமளந்தது அனைத்தும் அளந்திடு …………………….. வாழியவே.
அ) வண்மொழி
ஆ) பண்மொழி
இ) தன்மொழி
ஈ) செம்மொழி
Answer:
அ) வண்மொழி

Question 7.
தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க ……………………
அ) ஆந்திரா
ஆ) கர்நாடகா
இ) கேரளம்
ஈ) தமிழ்நாடு
Answer:
ஈ) தமிழ்நாடு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 8.
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) சுரதா
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதியார்

Question 9.
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழண்ணல்
ஈ) கு.பா.ரா.
Answer:
அ) பாரதியார்

Question 10.
‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………………..
அ) சீட்டுக்கவி
ஆ) பாரதிதாசன்
இ) குமரகுருபரர்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

Question 11.
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………
அ) சுரதா
ஆ) பாரதிதாசன்
இ) காந்தி
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 12.
‘வண்மொழி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) வண் + மொழி
ஆ) வண்மை + மொழி
இ) வளமை + மொழி
ஈ) வாண் + மொழி
Answer:
ஆ) வண்மை +மொழி

Question 13.
‘ஏழ்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) ஏழ் + கடல்
ஆ) ஏழ்மை + கடல்
இ) ஏழு + கடல்
ஈ) எளிமை + கடல்
Answer:
இ) ஏழு + கடல்

Question 14.
‘வளர் + மொழி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) வளர்மொழி
ஆ) வளமைமொழி
இ) வளமொழி
ஈ) வளர்ந்தமொழி
Answer:
அ) வளர்மொழி

Question 15.
‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) சீட்டுகவி
ஆ) சீட்டுக்கவி
இ) சீடைக்கவி
ஈ) சீட்கவி
Answer:
ஆ) சீட்டுக்கவி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 16.
‘சிந்தனை + ஆளர்’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) சிந்தனை ஆளர்
ஆ) சிந்தனைஎளர்
இ) சிந்தனையாளர்
ஈ) சிந்து ஆளர்
Answer:
இ) சிந்தனையாளர்

குறுவினா

Question 1.
வளமான தமிழ்மொழி எதனை அறிந்து உரைக்கும்?
Answer:
ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி.

Question 2.
தமிழ்மொழி எது உள்ள வரையிலும் வாழ வேண்டும்?
Answer:
எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!

Question 3.
எந்த இருள் நீங்க வேண்டும்?
Answer:
எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்க வேண்டும்.

Question 4.
தமிழ்மொழி எங்குச் சிறப்படைய வேண்டும்?
Answer:
தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைய வேண்டும்.

Question 5.
எந்தத் துன்பம் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்?
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 6.
பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதியார்.

Question 7.
பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
இந்தியா, விஜயா இதழ்களை நடத்தினார்.

Question 8.
பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
சந்திரிகையின் கதை, தராசு போன்றவை பாரதியார் எழுதிய உரைநடை நூல்களாகும்.

Question 9.
பாரதிதாசன், பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:
சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிறுவினா

Question 1.
பாரதியார் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பாரதியார்
இயற்பெயர் : சுப்பிரமணியன்
ஊர் : எட்டயபுரம்
பிறப்பு : 11.12.1882
பெற்றோர் : சின்னசாமி – இலக்குமி அம்மையார்
சிறப்பு பெயர்கள் : பாரதி, ஷெல்லிதாசன், புதுக்கவிதைக்கு முன்னோடி, சரஸ்வதி பட்டம், காளிதாசன், தேசாபிமானி, நித்தியதீரர், மகாகவி.
இதழ்ப்பணி : சக்கரவர்த்தினி, கர்மயோகி, பாலபாரத், சுதேசமித்திரன், இந்தியா, விஜயா.
இயற்றியவை : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை, தராசு, புதுக்கவிதைகள், பாப்பா பாட்டு, பூலோக ரம்பை, திண்டி மசாஸ்திரி, சின்ன சங்கரன் கதை, நவதந்திரக் கதைகள்.
இறப்பு : 11.09.1921 (39 ஆண்டுகள்)

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சொல்லும் பொருளும்

1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வைப்பு – நிலப்பகுதி
3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி – வளமிக்க மொழி
5. இசை – புகழ்
6. தொல்லை – பழமை, துன்பம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.4 சொற்பூங்கா Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா

Question 1.
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:

  1. பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
  2. “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
  3. கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
  4. தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
  5. “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.

பாடநூல் வினாக்கள்

Question 1.
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.

ஓரெழுத்து ஒரு மொழி:
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

பூ-யா சொற்கள்:
பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து ‘யா’ தானே!

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா

‘மா’ சொல்:
மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.

ஈ-காரச் சொல்:
ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு .

கால மாற்றத்தில் கரைந்தவை:
இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.

ஏகாரச் சொல்:
எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது ‘அம்புவிடுதல்’ ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.

முடிவுரை:
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா

தெரிந்து கொள்வோம்.

ஓரெழுத்து ஒரு மொழிகள்:

உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ
தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை
பகர வரிசை – பா, பூ, பே, பை, போ
நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ

ககர வரிசை – கா, கூ, கை, கோ
சகர வரிசை – சா, சீ, சே, சோ தகர
வகர வரிசை – வா, வீ, வை, வௌ
யகர வரிசை – யா
குறில் எழுத்து – நொ, து

ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.

தை – தை பிறந்தால் வழி பிறக்கும்.
மை – மாலா எழுதும்போது தாளில் மை சிந்தியது.
பா – பா நான்கு வகைப்படும்.
மா – முக்கனிகளுள் ஒன்று மா.
கை – மாரிக்கு, விளையாடும் போது கை உடைந்தது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
Answer:
(i) சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்சனைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது.

(ii) ‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான். பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்கிறான். செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்கிறான்’ என்றெல்லாம் திருமதி. இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவு கூரத் தக்கது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
Answer:
இ) அச்சுக்கலை

Question 2.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து …………………… என அழைக்கப் படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஆ) வட்டெழுத்து

Question 3.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) தந்தை பெரியார்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ………………………. என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ………………………
Answer:
1. கண்ணெழுத்துகள்
2. வீரமாமுனிவர்

குறுவினா

Question 1.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
Answer:
தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்ததால் அதனை ஓவிய எழுத்து என்பர்.

Question 2.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
Answer:
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

Question 3.
ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
Answer:
(i) புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.
(ii) நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்.
ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 4.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
Answer:
ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
‘எ’ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என்னும் எழுத்தை நெடிலாகவும் ‘ஒ’ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ‘ஓ’ என்னும் எழுத்தாக உருவாக்கினார்.
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 2

சிறு வினா.

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
Answer:
(i) ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.

(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 2.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
Answer:

  • நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (1) பயன்படுகின்றது.
  • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு ()ை பயன்படுகின்றது.
  • ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
(i) மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும், பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.

(ii) அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

(iii) தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

(iv) அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.

(v) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை’ என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

சிந்தனை வினா.

Question 1.
தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:

  • தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
  • தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் G அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
  • பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும் நோக்கத்துடன் வெளிவரும் படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.
  • பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழிலேயே வெளியிட வேண்டும். கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.

Question 2.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
அருள் : அம்மா இங்கே வா’ என்பதை amma ingkee vaa என்று ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதுவது மிகவும் தவறு.

செல்வி : நான் எப்போதும் கைபேசியில் யாருக்காவது வாழ்த்து சொல்வதை vallthukal என்று தான் சொல்வேன்.

செல்வனி : மலாய் மொழியில் எல்லாம் ஆங்கில எழுத்துருவில் தான் அனைவரும் எழுதுகிறார்கள். என் அத்தை கூட இதனை அடிக்கடி கூறுவார்கள்.

ஆனந்தி : இணையத்தில், முகநூலில், கட்செவி அஞ்சலில் எழுதும் போது சிறிதாக எழுதுவதற்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

ஆரிப் : எப்படித் தவறில்லை ? என்று கூறலாம். உலகில் உள்ள அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் தமிழில் பெயரிட்டுள்ளனர். இன்று இணையத்தில் அதிகம் தேடப்படும், பயன்படுத்தப்படும் எட்டு மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்ந்து வருகிறது. தமிழின் பெருமை கடல் கடந்தும் கோலோச்சி வருகிறது.

தமிழை நாம் எழுதும்போது தமிழ் எழுத்துருவில் தான் எழுத வேண்டும். வாழ்த்துகள்’ என்றும் ‘அம்மா இங்கே வா வா’ என்றும் தமிழில் எழுதுவதற்குப் பாமினி, இளங்கோ, ஸ்ரீலிபி, அமுதம், வானவில், அழகி போன்ற இணைய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ………………………. கண்டுபிடித்தான்.
அ) அறிவை
ஆ) நட்பை
இ) மொழியை
ஈ) மாநிலத்தை
Answer:
இ) மொழியை

Question 2.
மொழியை நிலைபெறச் செய்ய ……………………… உருவாக்கினான்.
அ) கூட்டத்தை
ஆ) எழுத்துகளை
இ) பாறைகளை
ஈ) அறிவை
Answer:
ஆ) எழுத்துகளை

Question 3.
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க ………………………….. பயன்படுத்தினான்.
அ) ஒலியை
ஆ) ஒளியை
இ) பொருளை
ஈ) சைகைகளை
Answer:
ஈ) சைகைகளை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 4.
மனிதன் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை ……………………… ஆகப் பொறித்து வைத்தான்.
அ) இசையாக
ஆ) பாடலாக
இ) குறியீடுகளாக
ஈ) செம்மொழியாக
Answer:
இ) குறியீடுகளாக

Question 5.
தொடக்க காலத்தில் எழுத்து, பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை …………………… என்பர்.
அ) கண்ணெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) ஒளிஎழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஈ) ஓவிய எழுத்து

Question 6.
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ……………………… நிலை என்பர்.
அ) ஒலி எழுத்து
ஆ) ஒளி எழுத்து
இ) வடிவ எழுத்து
ஈ) பேச்சு எழுத்து
Answer:
அ) ஒலி எழுத்து

Question 7.
‘ஸ’ என்பது ……………….. மொழி எழுத்து.
அ) தெலுங்கு
ஆ) கன்ன டம்
இ) வட
ஈ) இந்தி
Answer:
இ) வட

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 8.
தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் ………………………….. களிலும் காண முடிகிறது.
அ) திருமேனி
ஆ) கல்வெட்டு
இ) செப்பேடு
ஈ) குகைகள்
Answer:
இ) செப்பேடு

Question 9.
…………………… கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
அ) செப்பேடுகள்
ஆ) ஓவியங்கள்
இ) கல்வெட்டுகள்
ஈ) எழுத்துகள்
Answer:
இ) கல்வெட்டுகள்

Question 10.
……………………… கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
அ) செப்பேடுகள்
ஆ) கல்வெட்டுகள்
இ) குடவோலை
ஈ) ஓவியங்கள்
Answer:
அ) செப்பேடுகள்

Question 11.
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை …………………… வகையாகப் பிரிக்கலாம்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) நான்கு
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 12.
முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான ……………………… ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 13
Answer:
ஆ) 11

Question 13.
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………..
அ) திருக்குறள்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஈ) சிலப்பதிகாரம்

Question 14.
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிய ……………………….. கல்வெட்டே சான்றாகும்.
அ) ஆதிச்சநல்லூர்
ஆ) கீழடி
இ) அரிக்கமேடு
ஈ) அரச்சலூர்
Answer:
ஈ) அரச்சலூர்

Question 15.
எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் …………………… காலம் முதல் இருந்து வந்துள்ளது.
அ) வள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) சாத்தனார்
Answer:
ஆ) தொல்காப்பியர்

Question 16.
……………………. களில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.
அ) ஓலைச்சுவடி
ஆ) பாறை
இ) கல்வெட்டு
ஈ) ஓவியங்கள்
Answer:
அ) ஓலைச்சுவடி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 17.
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் ……………………………..
அ) வீரமாமுனிவர்
ஆ) பெரியார்
இ) பாரதியார்
ஈ) கம்பர்
Answer:
அ) வீரமாமுனிவர்

Question 18.
‘எ’ என்னும் எழுத்திற்கு கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என சீர்திருத்தம் செய்தவர் ……………………..
அ) பெரியார்
ஆ) வீரமாமுனிவர்
இ) பாரதிதாசன்
ஈ) கம்பர்
Answer:
ஆ) வீரமாமுனிவர்

Question 19.
இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் ………………………..
அ) வீரமாமுனிவர்
ஆ) பாரதியார்
இ) காந்தி
ஈ) பெரியார்
Answer:
ஈ) பெரியார்

Question 20.
‘னா’ என்னும் எழுத்தை ‘னா’ எனச் சீர்திருத்தம் செய்தவர் ………………………
அ) வீரமாமுனிவர்
ஆ) பெரியார்
இ) பாரதியார்
ஈ) இளங்கோவடிகள்
Answer:
ஆ) பெரியார்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 21.
தமிழ்மொழி ……………………… பயன்பாட்டிற்கு ஏற்றமொழியாகவும் ஆகியிருக்கிறது.
அ) செம்மொழி
ஆ) கையெழுத்து
இ) கணினி
ஈ) ஒலி
Answer:
இ) கணினி

பிரித்து எழுதுக.

காலந்தோறும் = காலம் + தோறும்
கற்றுக்கொண்டான் = கற்று + கொண்டான்
குறிப்பதாயிற்று = குறிப்பது + ஆயிற்று
வந்துள்ளன = வந்து + உள்ளன

இப்போதுள்ள = இப்போது + உள்ள
பெற்றுள்ளன = பெற்று + உள்ளன
நூற்றாண்டு = நூறு + ஆண்டு
தமிழெழுத்து = தமிழ் + எழுத்து
வட்டெழுத்து = வட்டம் + எழுத்து

காலமான = காலம் + ஆன
கண்ணெழுத்துகள் கண் + எழுத்துகள்
சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
மொழியிலுள்ள = மொழியில் + உள்ள

சேர்த்து எழுதுக.

காலத்திற்கு + ஏற்ப = காலத்திற்கேற்ப
அடைந்து + இருக்கின்றன = அடைந்திருக்கின்றன
அழகு + உணர்ச்சி = அழகுணர்ச்சி
சான்று + ஆகும் = சான்றாகும்

வழக்கில் + இருந்த = வழக்கிலிருந்த
செப்பு + ஏடு = செப்பேடு
நிலை + ஆன = நிலையான
இடர் + உற்றனர் = இடருற்றனர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

நிரப்புக.

1. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ……………………… போன்றவற்றில் எழுதினர்.
2. அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளில் …………………… அமைந்தன.
3. பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் …………………………. பயன்படுத்தப்பட்டன.
4. ஓலைகளில் நேர்க்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் …………………………….. அதிகமாகப் பயன்படுத்தினர்.
5. சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் ……………………… இடப்பட்டது.
Answer:
1. ஓலை
2. வடிவங்கள்
3. நேர்க்கோடுகள்
4. வளைகோடுகளை
5. குறுக்குக்கோடு

குறுவினா

Question 1.
மனிதன் எதற்காக எழுத்துகளை உருவாக்கினான்?
Answer:

  • மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.
  • மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான்.

Question 2.
மனிதன் ஏன் சைகைகளைப் பயன்படுத்தினான்?
Answer:
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

Question 3.
எழுத்து வடிவத்தின் தொடக்க நிலைக் குறித்து எழுதுக.
Answer:

  • ஆதிமனிதன் பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
  • இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 4.
தமிழ் எழுத்துகள் எவ்வாறு நிலையான வடிவத்தைப் பெற்றன?
Answer:

  • காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.
  • அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

Question 5.
தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களை எங்கெங்கு காணமுடிகிறது?
Answer:
எப்போதிலிருந்து கிடைக்கின்றன? தமிழ் எழுத்துகளின் பழைய வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும், செப்பேடுகளிலும் காண முடிகிறது.

  • கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
  • செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 6.
பழைய வரிவடிவங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
Answer:
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

Question 7.
கண்ணெழுத்துகள் குறித்து எழுதுக.
Answer:

  • கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.
  • இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ (சிலம்பு 5:12) என்னும் தொடரால் அறியலாம்.

சிறுவினா

Question 1.
பேச்சு மொழி எவ்வாறு உருவானது?
Answer:
(i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.

(ii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அச்சொற்கள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டதால் செம்மைப்பட்டன. காலப்போக்கில் அவை
பண்பட்டுப் பேச்சுமொழியாக உருவானது.

Question 2.
தமிழ்மொழியில் இடம்பெற்ற புள்ளிகளும், எழுத்துகளும் குறித்து எழுதுக.
Answer:
(i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. (எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும், ஏது என எழுதப்பட்டால் எது என்றும் ஒலித்தனர்.

(ii) அகரவரிசை உயிர்மெய்க்குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா, த. = தா). ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க =கை). எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன.

(கெ… = கௌ, தெ..= தௌ). மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப்) இட்டனர். குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 3.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எழுதுக.
Answer:
(i) இருபதாம் நூற்றாண்டு வரை ‘ணா, றா, னா’ ஆகிய எழுத்துகளை ‘ணா, றா, னா’ என எழுதினர். அதே போல ‘ணை, லை, ளை, னை’ ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை’ என எழுதினர்.

(ii) அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டுத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி குறித்து எழுதுக.
Answer:
(i) பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை .

(ii) அவை காலத்திற்கேற்பப் பல உருவமாற்றத்தைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

(iii) பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.

(iv) பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.

(v) சில எழுத்துகளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்து விட்டன.