Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 1.
உங்கள் பகுதியில் கிடைக்கும் களிமண், பனையோலை போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப் பொருள்களைச் செய்து காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 1

Question 2.
பனையோலையால் செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச் சேகரித்து படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 2

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ……………………
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
Answer:
இ) பனையோலைகள்

Question 2.
பானை ………………….. ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
Answer:
ஆ) வனைதல்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 3.
‘மட்டுமல்ல’ எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
Answer:
ஈ) மட்டும்+அல்ல

Question 4.
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிர்க்கட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
Answer:
அ) கயிற்றுக்கட்டில்

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. முழுவதும் – பாடநூல் முழுவதும் வாசித்தால்தான் தெளிவு கிடைக்கும்.
2. மட்டுமல்லாமல் – ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும் கற்க வேண்டும்.
3. அழகுக்காக – பல அரங்குகளில் சுடுமண் சிற்பங்களை அழகுக்காக வைத்திருப்பார்கள்.
4. முன்பெல்லாம் – முன்பெல்லாம் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்தினார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
Answer:
மண் பொம்மைகள் செய்தல், மரப்பொம்மைகள் செய்தல், காகிதப்பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தன மாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக்கொம்பினால் கலைப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றை எல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்.

Question 2.
மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 3

Question 3.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
Answer:
குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய், பனை மட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

சிறுவினா

Question 1.
பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
Answer:
(i) பிரம்பு என்பது ஒரு தாவரம். முதலில் பிரம்புகளை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.

(ii) சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு பாறைகளுக்கு இடையே செலுத்தி வளைக்க வேண்டும். அது வேண்டிய வடிவத்தில் கம்பி போல வளையும்.

(iii) பின்னர் அதனை தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால், அப்படியே நிலைத்து விடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.

Question 2.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
Answer:
மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய், தொட்டில், பாடை ஆகியவை அனைத்தும் மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.

நெடுவினா

Question 1.
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
மண்பாண்டக் கலை :

  • குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி ஆகிய அனைத்துப் பொருட்களும் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவை.
  • பக்குவப்படுத்தப்பட்ட களிமண், மெல்லிய மணல் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • சக்கரத்தின் நடுவே வைத்து உரிய வடிவத்தால் அதைக் கொண்டு வர வேண்டும். பிறகு அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காயவைக்க வேண்டும். பிறகு உரிய மண்பாண்டம் தயாராகிவிடும்.
  • மண்பாண்டங்களில் சமைத்த உணவு உடலுக்கு நல்லது.
  • திருவிழாக் காலங்களிலும் சமயச் சடங்குகளிலும் மண்பானைகள் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

மூங்கில் கலை :
(i) மூங்கில் கொண்டு பல கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.

(ii) மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய், தொட்டில், பாடை ஆகிய அனைத்தும் மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.

(iii) முன்பு எல்லாம் திருமணத்தின் போது சீர்த்தட்டுகளாகப் பயன்படுத்தினர்

பனையோலைக் கலை :
(i) பனையோலையில் பல கைவினைப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

(ii) குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய், பனை மட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன.

பிரம்புக் கலை :
(i) பிரம்பு என்பது ஒரு தாவரம்.

(ii) முதலில் பிரம்புகளை நெருப்பில் காட்டி சூடுபடுத்த வேண்டும். சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு பாறைகளுக்கு இடையே செலுத்தி வளைக்க வேண்டும்.

(iii) அது வேண்டிய வடிவத்தில் கம்பி போல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால், அப்படியே நிலைத்து விடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கூட்டியும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.

(iv) பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே அதில் அமர்வது உடல்நலத்துக்கு நல்லது.
(v) மேலும் பிரம்புப்பொருள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

சிந்தனை வினா

Question 1.
கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
(i) கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையான பொருளால் தயாரிக்கப் படுபவை.

(ii) செயற்கையான பொருளோ தீங்கு விளைவிக்கும் இரசாயனமோ இதில் பயன்படுத்தப்படுவது இல்லை.

(iii) இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றை முதன்மைப் பொருளாகக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.

(iv) கைவினைக் கலைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களின் மீதத்தைப் பூமியில் புதைத்தாலும், அவை மக்கி விடும். இதனால் சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பானை ஓடுகள் கிடைத்துள்ள இடம் …………………..
அ) சிந்துசமவெளி
ஆ) ஆதிச்சநல்லூர்
இ) செம்பியன் கண்டியூர்
ஈ) கீழடி
Answer:
அ) சிந்துசமவெளி

Question 2.
முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம் ……………………..
அ) சிந்துசமவெளி
ஆ) ஆதிச்சநல்லூர்
இ) செம்பியன் கண்டியூர்
ஈ) கீழடி
Answer:
ஆ) ஆதிச்சநல்லூர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 3.
மிகவும் பழமையான கைவினைக் கலைகளில் ஒன்று ………………….
அ) பிரம்புக் கலை
ஆ) மண்பாண்டக் கலை
இ) பனை ஓலைக்கலை
ஈ) மூங்கில் கலை
Answer:
ஆ) மண்பாண்டக் கலை

Question 4.
குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும் ……………………
அ) செம்மண்
ஆ) களிமண்
இ) வண்டல் மண்
ஈ) உவர்மன்
Answer:
ஆ) களிமண்

Question 5.
பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர் ………………..
அ) ஊசி
ஆ) நூல்
இ) திருவை
ஈ) சுழல்
Answer:
இ) திருவை

Question 6.
குழந்தைகளைப் படுக்க வைக்க உதவும் பாய் …………………..
அ) பந்திப்பாய்
ஆ) திண்ணைப் பாய்
இ) பட்டுப் பாய்
ஈ) தடுக்குப் பாய்
Answer:
ஈ) தடுக்குப் பாய்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 7.
உட்காரவும் படுக்கவும் உதவும் ………………… பாய்.
அ) பந்திப்பாய்
ஆ) திண்ணைப் பாய்
இ) பட்டுப் பாய்
ஈ) தடுக்குப் பாய்
Answer:
ஆ) திண்ணைப் பாய்

Question 8.
“முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தியது கூட பாய் தான்” என்பதைக் கூறும் நூல் ………………….
அ) அகநானூறு
ஆ) பரிபாடல்
இ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
Answer:
இ) புறநானூறு

Question 9.
தமிழ்நாட்டின் மாநில மரம் ……………………
அ) தென்னை மரம்
ஆ) மாமரம்
இ) பனை மரம்
ஈ) மூங்கில் மரம்
Answer:
இ) பனை மரம்

Question 10.
பிரம்பு என்பது …………………. வகையைச் சேர்ந்த தாவரம்.
அ) செடி
ஆ) கொடி
இ) மரம்
ஈ) நீர்நிலை
Answer:
ஆ) கொடி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 11.
கலாமஸ் ரொடாங் என்னும் தாவரவியல் பெயர் கொண்டது …………………
அ) பிரம்பு
ஆ) மூங்கில்
இ) மண்பாண்டம்
ஈ) பனையோலை
Answer:
அ) பிரம்பு

குறுவினா

Question 1.
கைவினைக் கலைகள் என்றால் என்ன?
Answer:
அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக் கலை என்பர்.

Question 2.
மூங்கில் வகைகள் யாவை?
Answer:

  • கல் மூங்கில்
  • மலை மூங்கில்
  • கூட்டு மூங்கில்

என மூங்கில் மூன்று வகைப்படும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 3.
கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூங்கில் எவை?
Answer:
கூட்டு மூங்கிலே கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூங்கில் ஆகும்.

Question 4.
மண்பாண்டப் பொருட்கள் யாவை?
Answer:
பானை, சட்டி, குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி ஆகியன மண்பாண்டப் பொருட்கள் ஆகும்.

Question 5.
களிமண் கிடைக்கும் இடங்கள் யாவை?
Answer:
குளங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் வயல்வெளிகள் ஆகியவற்றில் களிமண் கிடைக்கும்.

Question 6.
திருவை என்றால் என்ன?
Answer:
மண் பானை செய்யும் சக்கரத்தையே திருவை என்பர்.

Question 7.
மண்பாண்டங்களால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
Answer:

  • மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.
  • மண்பாண்டத்தில் செய்யப்படும் உணவே உடல் நலத்திற்கும் நல்லது.
  • மண் பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 8.
சுடுமண் சிற்பங்கள் என்றால் என்ன?
Answer:
மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.

Question 9.
பாயின் வகைகள் யாவை?
Answer:

  • படுக்கும் பாய்
  • பந்திப் பாய்
  • திண்ணைப் பாய்
  • பட்டுப்பாய்
  • தொழுகைப் பாய்

Question 10.
பிரம்பு தருவிக்கப்படும் இடங்கள் யாவை?
Answer:
அஸ்ஸாம், அந்தமான், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து பிரம்பு தருவிக்கப் படுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 11.
பிரம்புப் பொருட்களால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
Answer:

  • பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே, அதில் அமர்வது உடல்நலத்துக்கு நல்லது.
  • மேலும், பிரம்புப் பொருள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.

சிறுவினா

Question 1.
தமிழருக்கும் மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் யாவை?
Answer:

  • சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
  • நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருட்கள் கிடைத்துள்ளன.
  • இவையெல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகளாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 2.
பாயின் வகைகளை விளக்குக.
Answer:

  • குழந்தைகளைப் படுக்க வைப்பது தடுக்குப் பாய்.
  • உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப் பாய்.
  • உட்காரவும் படிக்கவும் உதவுவது திண்ணைப் பாய்.
  • திருமணத்துக்குப் பயன்படுவது பட்டுப் பாய்.
  • இஸ்லாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது தொழுகைப் பாய்.

Question 3.
பாய்களில் எவையெவை இடம்பெற்றிருந்தன?
Answer:
(i) திருமணத்திற்குப் பயன்படுத்தும் பாய்களில் மணமக்கள் பெயர்கள் இடம் -5 பெற்றிருந்தன.

(ii) குத்துவிளக்கு, மயில், பூக்கள், வழிபாட்டுச் சின்னங்கள் ஆகியவையும் பாய்களில் இடம்பெற்றிருந்தன.

Question 4.
பிரம்பினால் செய்யப்பட்ட பலவகைப் பொருட்கள் யாவை?
Answer:

  • கட்டில்
  • ஊஞ்சல்
  • நாற்காலி
  • மேசை
  •  பூக்கூடை
  • பழக்கூடை
  • இடியாப்பத் தட்டு
  • அர்ச்சனைத் தட்டு
  • வெற்றிலைப் பெட்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *